Unnodu Naan Irunthaal
4/5
()
About this ebook
Read more from Parimala Rajendran
Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Kalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Engiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Paadu Nilaave Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Uravugal Thodarkathai Rating: 5 out of 5 stars5/5Thaaimadi Thedi Rating: 4 out of 5 stars4/5Manam Veesum Malargal Rating: 4 out of 5 stars4/5
Related to Unnodu Naan Irunthaal
Related ebooks
Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Thottil Ingirukka Rating: 0 out of 5 stars0 ratingsமாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... Rating: 0 out of 5 stars0 ratingsKaththirukka Neramillai Karuna Rating: 0 out of 5 stars0 ratingsPonmagal Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsNenjiniley Ninaivu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsகனவு காணும் வாழ்க்கை Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kaanum Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsபாச மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsPirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Ondru Than Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Veetla Vibareethanga Rating: 0 out of 5 stars0 ratingsOru Devathai Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsVannathupoochikku Vazhi Vidu Rating: 4 out of 5 stars4/5Poo Magal Rating: 5 out of 5 stars5/5Vellai Niraththil Oru Vannaththupoochi Rating: 4 out of 5 stars4/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Ilamjolai Vennilaa Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharum Megam Rating: 5 out of 5 stars5/5Maariyathu Nenjam Maattriyathu Yaaro Rating: 0 out of 5 stars0 ratingsமாறியது நெஞ்சம்... மாற்றியது யாரோ..? Rating: 0 out of 5 stars0 ratingsKarpanaiyo… Kaivanthatho… Rating: 3 out of 5 stars3/5Neeyum Naanum Veralla Rating: 0 out of 5 stars0 ratingsநீயும் நானும் வேறல்ல... Rating: 0 out of 5 stars0 ratingsKangalin Jalangal Rating: 5 out of 5 stars5/5October Pouranami Rating: 5 out of 5 stars5/5
Reviews for Unnodu Naan Irunthaal
3 ratings0 reviews
Book preview
Unnodu Naan Irunthaal - Parimala Rajendran
16
1
நான்கு நாட்களாக விடாது பெய்த மழையால் பூமியே குளிர்ந்து போயிருந்தது.
ஏற்கனவே மூட்டுவலியால் அவஸ்தைபடும் ஜானகி குளிர் காரணமாக வலி அதிகமாக தூக்கம் வராமல் புரண்டாள்.
போர்வையை இழுத்து கழுத்து வரி போர்த்தினாள்.
அடுத்த ரூமில் ஏஸி ஓடுவது மெலிதான ஓசையில் தெரிந்தது.
நந்தினியால் எப்படி இந்த குளிரிலும் ஏ.ஸியில் படுக்க முடிகிறதோ தெரியவில்லை.
நினைத்தவள், அவள் எல்லாவற்றிலும் வித்தியாசமானவள் இல்லையென்றால் அன்பும், அழகும், செல்வாக்கும் மிக்க டாக்டரான சுதாகரை கல்யாணம் பன்னி, இரண்டு வருடத்திலேயே விவாகரத்து வாங்கி வந்திருப்பாளா...
மனதில் எண்ணங்களால், கண்ணோரங்களில் கண்ணீர் துளிர்த்து தலையனையை நனைத்து.
வரம்மிருந்து பிறந்த ஒரே மகள் நந்தினி. மகள் மீது உயிரையே வைத்திருந்தார் சண்முகம். "நமக்கு இளவரசி மாதிரி மகள் பிறந்திருக்கிறாள் ஜானகி. இத்தனை வருடம் கழித்து பிறந்தது பெண்ணாக போச்சேன்னு கவலைப்படாதே. ஆணுக்கு ஆணாக, பெண்ணுக்கு பெண்ணாக என் மகளை வளர்க்க போறேன்.
பெருமையோடு சொன்னவர் அதன்படியே தைரியத்தையும், தன்னம்பிக்கையும் தந்துதான் வளர்த்தார்.
ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக போய்விட்டதோ என்று இப்போது நினைக்க தோன்றுகிறது.
காலேஜ் படிப்பை முடித்து, ஐ.டி கம்பெனியில் சாப்டவேர்
இஞ்சினியராக வேலைக்கு சேர்ந்து முதல் மாத சம்பளத்தை மகள் கையில் தர, பெருமிதத்தோடு வாங்கியவர், அடுத்த மாத சம்பளத்தை வாங்க உயிருடன் இல்லை.
மாரடைப்பு என்ற பெயரில் காலன் அவரை அழைத்துக்கொண்டான்.
துவண்டுபோன அம்மாவுக்கு நான் இருக்கிறேன் என்று ஆறுதல் சொன்னாள் நந்தினி.
வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து. கணவரின் பிரிவிலிருந்து மீண்டு, மகளுக்காக வாழ்க்கையை தொடர ஆரம்பித்தாள் ஜானகி.
சொந்த பந்தங்களை விசாரித்து, நல்லவரன் என்று முடிவுசெய்து, நந்தினியின் பூரண சம்மதத்தை பெற்று தான் திருமணத்தை நடத்தினாள்.
ஆனால் நந்தினியின் கல்யாண வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
கால்வலியோடு, மனதின் வலி அதிகமாக படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள்.
இனி தூக்கம் வரப்போவதில்லை. மெல்ல காலை ஊன்றி கட்டிலில் இருந்து இறங்கியவள், ஜன்னல் அருகில் வந்து ஸ்கீரினை விலக்கினாள்.
வெளியே பௌர்ணமி நிலவு ஒளிவீசிக்கொண்டிருந்தது. நந்தியின் மனதில் என்ன தான் இருக்கிறது.
என்ன தான் பெண்ணானவள் சுதந்திரமாக செயல்பட்டாலும், தன் வாழ்க்கையை நடத்த போதுமான பொருளாதாரம் இருந்தாலும் வாழ்க்கையின் நிறைவு என்பது கணவன், குழந்தைகள் குடும்பம் என்று வாழும் போது தானே முழுமையடைகிறது.
இது புரியாதவளா நந்தினி.
அம்மா
குரல் கேட்டு திரும்பியவள் நந்தினி நிற்பதை பார்த்தாள்.
நீ இன்னும் தூங்கலையாம்மா
"தூக்கம் வரலைமா குளிர் அதிகமாக இருப்பதால, மூட்டுவலியும் அதிகமாயிடுச்சு. மருந்து தேய்க்கலாம்னு எழுந்தேன்.
நீ ஏன் எழுந்து வந்தே"
வெளியே தகதகக்கும் அந்த நிலவுக்கு சிறிதும் குறைச்சல் இல்லாமல் பூரண அழகுடன் திகழும் மகளை பார்த்தாள்.
பெட்ரூமிற்கு தண்ணிகேண் எடுத்துட்டு போக மறந்துட்டேன் தண்ணீர் குடிக்கலாம்னு வந்தேன், கட்டிலில் உன்னை காணும் அதான் உள்ளே வந்தேன்
சொன்னவளாய் அலமாரியில் இருந்த கால்வலித்தைலத்தை எடுத்து. வந்து கட்டிலில் உட்காரும்மா... தேய்ச்சு விட்டுட்டு போறேன்
இருக்கட்டும்மா நீ போய் படுத்துக்க... காலையில் எழுந்து வேலைக்கு போகணும்
வாம்மா,,, சொன்னா கேளு.
அம்மாவின் கைபிடித்து அழைத்து வந்து கட்டிலில் உட்காரவைத்தவள் முழங்காலில் மருந்தை சூடுவர தேய்க்கிறாள்.
என்னம்மா அப்படி பார்க்கிற
"உன்னை நினைக்கும் போது மனசு பரிதவிக்குது நந்தினி. நிமிஷமாய் கையில் கிடைச்ச நல்ல வாழ்க்கையை தூக்கி வீசிட்டு வந்துட்டே... உன் எதிர்காலத்தை நினைக்கும் போது உள்ளுக்குள் பயம் அதிகமாகுது நந்தினி.
அம்மா, உனக்கு எத்தனையோ தடவை சொல்லிட்டேன். எதுக்கும்மா இப்படி மனசை போட்டு குழப்பிக்கிறே. எனக்கும், சுதாகருக்கும் எந்த விதத்திலும் ஒத்து போகலைம்மா.
எதிரெதிர் துருவங்களாக இரண்டு பேர் எப்படி சேர்ந்து வாழ முடியும்.
மனசுக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழ்வது போன்று தண்டனை வேறு இல்லைம்மா.
அவரை பிரிந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
இரண்டு பேரும் நல்லா யோசித்து முடிவுபண்ணி தான் விவாகரத்து வாங்கினோம்.
அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்க வழிவிட்டு வந்தேன். இப்ப என் மனசும் நிம்மதியாக இருக்கு"
எதும்மா நிம்மதி... இப்படி வெறுமையாக வாழ்க்கையை கழிப்பதா. பெண்ணாக பிறந்தவள் நாலு பேரோடு அனுசரிச்சுதான் போகணும். நீ நல்லவள்... இருந்தாலும், உன் மணவாழ்க்கையை தக்கவச்சுக்க தெரியாமல், கோட்டை விட்டுட்டியேம்மா
அம்மாவின் கன்னத்தை கையில் ஏந்தியவளாய், "இப்படி தான் வாழணும்னுங்கிறது நமக்கு நமே விதிச்சிக்கிற கோடுதான். அதை தாண்டி வருவதில் தப்பில்லை. இந்த அம்மாவுக்கு மகளாக கடைசிவரை சந்தோஷமாக வாழ என்னால் முடியும்மா.
நடக்கிறதை ஏத்துக்கிட்டு நீயும் நிம்மதியோடு வாழ பழகும்மா. நடந்து முடிஞ்சதை நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காதே."
சொன்னவள், ஜானகியை படுக்கவைத்து, கழுத்துவரை போர்வையை போர்த்தியவள், கதவை மூடிவிட்டு வெளியேறுகிறாள்,
மகளை நினைத்து அந்த தாயின் மனம் கலங்கவே செய்கிறது.
2
தோட்டத்தில் மண்ணை கிளறி சரிசெய்த சிவராமன், வாளியில் இருந்த தண்ணீரில் கைகழுவினார்.
இன்னைக்கு நர்சரிக்கு போய் கீரைவிதைகள் வாங்கி வரவேண்டும்.
இப்போது தான் வெண்டைசெடி சிறு இலைகளை விரித்து வளர ஆரம்பித்திருக்கிறது.
ரோஜா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியவர், அழகாக இதழ்விரித்து பூத்திருந்த அந்த சிவப்பு ரோஜாவை முள் கையில் குத்தாமல், மெல்ல பறித்தார்.
அடுப்படி வேலையில் மாதங்கி மும்மரமாக இருக்க,
மாதங்கி, நேகா கிளம்பிட்டாளா...
இப்ப தான் காபி குடிச்சிட்டு குளிக்க போனா
"முதன் முதலாக இன்னைக்கு வேலைக்கு போறா... இந்த பூவை அவக்கிட்டே கொடு, நான் பதியன் போட்டு வளர்த்த செடியில் பூத்த ரோஜாப்பூ.
அவ மனசு போல