Kaanal Neeril Neenthum Meengal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsRaja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5
Related to Kaanal Neeril Neenthum Meengal
Related ebooks
Oru Nathi Oru Pournami Oru Pen Rating: 4 out of 5 stars4/5Puthiya Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsIntha Aagayam Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsRatthathil Oru Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsKraim Dot Kaam Rating: 0 out of 5 stars0 ratingsAarthikku Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsMannikkathey Marakkathey Rating: 0 out of 5 stars0 ratingsOru Thuli Kadal! Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik December Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Ellam Poi Rating: 0 out of 5 stars0 ratingsOru Thevathaiyai Thedi... and Vazhnthu Kaatta Vendum Rating: 0 out of 5 stars0 ratingsUn Vaanam En Arugil Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsSandarpatthai Payanpaduthi Kol Rating: 0 out of 5 stars0 ratingsJannal Seethaikal Rating: 0 out of 5 stars0 ratingsVellai Iruttu Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsIrandil Ontru Rating: 0 out of 5 stars0 ratingsOru Eastmen Nirak Kolai Rating: 5 out of 5 stars5/5Kavitha Nagar Kadaisi Theru Rating: 0 out of 5 stars0 ratingsUyir Thirudargal Rating: 0 out of 5 stars0 ratingsUyiradangu Utharavu Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Pommai Nanum Pommai Rating: 0 out of 5 stars0 ratingsIndre Kaathali Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Megam Konjam Nilavu Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kaanal Neeril Neenthum Meengal
0 ratings0 reviews
Book preview
Kaanal Neeril Neenthum Meengal - Rajeshkumar
14
1
"விஷ்வா...!" கடற்கரை மணலை அளந்து கொண்டே கூப்பிட்டாள் அஜந்தா.
ம்...
மறுபடியும் ஒரு தடவை அந்தக் கவிதையைச் சொல்லு... கேட்கலாம்!
ஏன் புரியலையா அஜந்தா...?
புரிஞ்ச மாதிரியும் இருந்தது... புரியாத மாதிரியும் இருந்தது.
சரி... சொல்லட்டுமா...?
சொல்லு...
அஜந்தா ஆர்வமாய் நிமிர, விஷ்வா சொல்ல ஆரம்பித்தான்.
"நீ என்னருகில் இல்லை
என்பது
எவ்வளவு உண்மையோ...
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருக்கிறாய் என்பதும்..."
அஜந்தா தனக்கு எதிரே உட்கார்ந்திருந்த விஷ்வாவின் கன்னத்தை ஒரு தட்டு தட்டிவிட்டு சிரித்தாள்.
இப்ப புரியுது...
தப்பில்லை அஜந்தா. ட்யூப்லைட் கொஞ்சம் லேட்டாத்தான் எரியும்.
வேண்டாம் விஷ்வா! உன்னோட உளறலையெல்லாம் நான் ஒருத்திதான் கவிதைன்னு சொல்லி அங்கீகாரம் கொடுத்து கெளவரப்படுத்திட்டு இருக்கேன். அதைக் கெடுத்துக்காதே...!
- ஆட்காட்டி விரலை உயர்த்தினாள்.
ஸாரி... ஸாரி...
கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்துகிட்டு கல் எறியற வேலையெல்லாம் வெச்சுக்காதே விஷ்வா!
சரி... சரி! அதான் ஸாரி கேட்டுட்டேனே!
சொன்ன விஷ்வாவை அஜந்தா உற்றுப் பார்த்தாள். ஐந்து விநாடிகளுக்கு நிலைத்த பார்வை. மணலில் இருந்த ஒரு சிறு கல்லை எடுத்து அவள் மீது எறிந்து கொண்டே சிரித்தான்.
என்ன அஜந்தா அப்படிப் பார்க்கிறே...?
எனக்கு ஆச்சர்யமா இருக்கு!
எதுக்கு ஆச்சர்யம்?
நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்க ஆரம்பிச்சு ஒரு வருஷம் இருக்குமா?
சரியா பத்து மாசம். டிசம்பர் மூணாம் தேதி வந்தாத்தான் ஒரு வருஷம் கம்ப்ளீட்டாகும்!
இந்தப் பத்து மாசத்துக்குள்ள நம்ம காதல் ஆரோக்கியமா வளர்ந்து எந்த எதிர்ப்பும் இல்லாம நிச்சயதார்த்தம் வரைக்கும் போயிடுச்சு. இன்னும் மூணு மாசம் கழிச்சு விஜயா மஹாலில் கல்யாணம். உன்னால் நம்ப முடியுதா?
நம்ப முடியலைதான்! உன்னை நான் காதலிக்கிற விஷயத்தை வீட்ல சொன்னபோது அம்மாவும், அப்பாவும் ஒரு பத்து நிமிஷத்துக்கு அப்செட் ஆயிட்டாங்க. உன்னோட போட்டோவைக் காட்டினதும் அம்மா பச்சைக் கொடி காட்டிட்டாங்க. நீ படிச்ச பொண்ணு. ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறேன்னு சொன்னதும், அப்பாவும் ஓ.கே. சொல்லிட்டார்.
என்னோட காதல் விவகாரம் வீட்ல ஒரு பெரிய பூகம்பத்தையே உண்டாக்கும். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக ஒரு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருக்கும்னு நெனைச்சேன். அதுக்கு அவசியம் இல்லாதபடி ஆயிடுச்சு!
அஜந்தா தன் அழகான பல்வரிசையைக் காட்டிச் சிரித்தாள்.
விஷ்வா...! உன்னோட வீட்லயாவது பத்து நிமிஷத்துக்கு எதிர்ப்பு இருந்தது. என்னோட வீட்ல ஒரு சின்ன எதிர்ப்பு முனகல்கூட இல்லை. அப்பாவும், அம்மாவும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியில் சொந்த பந்தங்களைப் பகைச்சுக்கிட்டு அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதாலே என்னோட காதலுக்கு எந்த மறுப்பும் சொல்லாம ஓ.கே, சொல்ல வேண்டியதாயிடுச்சு!
எப்படியோ... இந்த விஷயத்துல நீயும் நானும் ரொம்பவே அதிர்ஷ்டம் பண்ணியிருக்கோம்.
இல்லை விஷ்வா. ஒரு வகையில் நாம் ரெண்டு பேரும் அன்லக்கி பர்சன்ஸ் !
எப்படிச் சொல்றே?
நிச்சயதார்த்தத்தைச் சீக்கிரம் சீக்கிரமா நடத்தினவங்க கல்யாணத்தை மட்டும் மூணு மாசம் தள்ளி வெச்சுட்டாங்களே?
அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்!
எப்படி நல்லது...?
அஜந்தா... இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு நாம் காதலர்களாய் இருக்கிற இந்தக் காலகட்டம்தான் திரில்லா இருக்கும். உன்னோட கழுத்துல தாலி கட்டிட்டா அந்தத் திரில் போயிருமே...?
விஷ்வா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் இடம் பிடித்திருந்த செல்போன் ரிங் டோனை வெளியிட்டது.
எடுத்து அழைப்பது யாரென்று பார்த்தான். பிறகு காதுக்குப் பொருத்தினான்.
அவனுடைய அம்மா பாக்கியலட்சுமி பேசினாள்.
டேய் விஷ்வா... இப்போ நீ எங்கே இருக்கே?
விஷ்வா சிரித்தான்.
பொய் சொல்லட்டுமா... உண்மையைச் சொல்லட்டுமாம்மா?
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் இல்லை.
அப்படின்னா உண்மையைச் சொல்லிடறேன்...
சொல்லு.
நானும் உன்னோட மருமகளும் பீச்சுல உட்கார்ந்து காத்து வாங்கிட்டு இருக்கோம்.
ஏன்டா...! உனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்... அஜந்தாவைக் கூட்டிட்டு கண்ட இடத்துக்கும் போகாதேன்னு...
இது கண்ட இடம் இல்லேம்மா... பீச்தான்! பெசன்ட் நகர் பீச்சுல நல்ல வெளிச்சத்துல உட்கார்ந்துதான் பேசிக்கிட்டு இருக்கோம்...
டேய்... விஷ்வா! சென்னை முன்ன மாதிரி இல்லைடா. ரொம்பவே கெட்டுப் போயிடுச்சு. போன வாரம் வில்லிவாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் தனியா உட்கார்ந்து பேசிட்டிருந்த ஒரு ஆணையும், பெண்ணையும் ஒரு ரெளடி கும்பல் தாக்கி...
அய்யோ அம்மா! ராத்திரி பதினொரு மணிக்குக் கூட்டம் இல்லாத ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல அந்தச் சம்பவம் நடந்தது. நானும் அஜந்தாவும் அது மாதிரியான இடத்துக்குப் போவோமா?
சரி...! பீச்சை விட்டு எத்தனை மணிக்குக் கிளம்பறதா உத்தேசம்?
இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பிடுவோம்...
"அவ்வளவு நேரமாகுமா?
ஆமா! அஜந்தா பீட்ஸா ஹட் போகணும்னு சொன்னா. அங்கே போய் ஆர்டர் கொடுத்தா அரைமணி நேரமாயிடும். அப்புறம் ‘பான் பான்
ஐஸ்க்ரீம் பார்லருக்குப் போய் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வர எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆயிடும்."
அவ்வளவு நேரமாயிடுமா?
ஏம்மா, ஏதாவது முக்கியமான விஷயமா?
இல்லை... கொஞ்ச நேரத்துக்கு முந்தி உன்கூடப் படிச்ச ஹரிதா நம்ம வீட்டுக்கு வந்திருந்தா...
என்னது... ஹரிதாவா?
ஆமா... ஆமா...
மும்பையிலிருந்து எப்ப வந்தாளாம்?
இன்னிக்குச் சாயந்தரம்தான் வந்தாளாம். ஏதோ ஒரு ப்ராஜக்ட் விஷயமா வந்தாளாம். அப்படியே உன்னைப் பார்த்துட்டுப் போகணும்னு வந்தா. நீ வீட்ல இல்லைன்னு தெரிஞ்சதும் அவளுக்கு ஏமாற்றம் ஆயிடுச்சு.
சென்னை வந்ததுமே எனக்குப் போன் பண்ண வேண்டியதுதானே... ஏன் பண்ணலையாம்?
உன்னோட செல்போன் நம்பரை எப்படியோ தவறிப் போய் டெலிட் பண்ணிட்டாளாம்.
சரி, நம்ம வீட்டுக்கு வந்ததுமே பேசச் சொல்லியிருக்கலாமே...?
நான் உன்னோட நம்பர் குடுத்துட்டேன். உன்னைக் கான்டாக்ட் பண்ணிப் பேசுவா...
இப்ப ஹரிதா எங்கே?
நம்ம வீட்டில் ஒரு அஞ்சு நிமிஷம்தான் இருந்தா. உடனே புறப்பட்டுப் போயிட்டா...
அப்படி என்ன அவசரமாம்?
அதென்னமோ தெரியலைடா... போன தடவை ஆறு மாசத்துக்கு முந்தி நம்ம வீட்டுக்கு வந்தப்ப எவ்வளவு கலகலப்பாப் பேசினா... ஒரு நாள் முழுக்க நம்ம வீட்லயே இருந்தார். இந்தத் தடவை அந்தக் கலகலப்பெல்லாம் மிஸ்ஸிங். எதையோ பறிகொடுத்தவ மாதிரி உம்முன்னு இருந்தா...
நீ காரணம் கேட்டியா?
ம்... ஏம்மா இப்படி இருக்கேன்னு கேட்டேன். ஃப்ளைட்ல சாப்பிட்ட ஃபுட் வயித்துக்கு ஒத்துக்கலை. ரெண்டு தடவை வாமிட் பண்ணிட்டேன். அதான் டயர்டா இருக்கேன்னு சொன்னா...
சரிம்மா... ஹரிதாவோட போன் நம்பர் என்கிட்டே இருக்கு. நான் அவகிட்டே பேசிக்கறேன்.
பேசிடு...
அம்மா மறுமுனையில் செல்போனை அணைத்துவிட, விஷ்வா எதிரில் உட்கார்ந்திருந்த அஜந்தாவை ஏறிட்டான்.
அவள் கேட்டாள்.
ஃபோன்ல யாரு... அத்தையா?
ம்...
என்ன சொன்னாங்க?
ஹரிதாவை உனக்குத் தெரியுமில்ல?
நல்லாவே தெரியும். சொல்லியிருக்கே... போட்டோ கூட காட்டியிருக்கே... நீயும் ஹரிதாவும் ஒரே காலேஜில் எம்.சி.ஏ. பண்ணீங்க. ஹரிதா இப்ப மும்பையில் ஒரு ஐ.டி, கம்பெனியில் வேலை பார்க்கிறா. நான் சொன்னதெல்லாம் சரியா?
ரொம்ப ரொம்ப சரி. அவ இப்ப சென்னைக்கு வந்திருக்காளாம். என்னைப் பார்க்கிறதுக்காக வீட்டுக்குப் போயிருக்கா. நான் வீட்ல இல்லைன்னதும் உடனே புறப்பட்டுப் போயிட்டாளாம்.
ஷி இஸ் வெரி வெரி ஜோவியல். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற விஷயத்தைச் சொல்லி உன் போட்டோவை அவளுக்கு மெயில்ல அனுப்பி வெச்சேன். போட்டோவைப் பார்த்துட்டு அவ என்ன கமென்ட் பண்ணினா தெரியுமா?
என்ன கமென்ட்?
ஒரு தேவதை ஒரு சைத்தானுக்கு வாழ்க்கைப்படுகிறாள். விஷ்வா உனக்கு மச்சம்டா, எப்படிடா அவளை மடக்கினே...?
சட்டென்று அஜந்தாவின் முகம் மாறியது. கண்களில் லேசாய் கோபக்கனல்.
விஷ்வா கவனித்து விட்டுக் கேட்டான்.
என்ன அஜந்தா...?
ஹரிதாவோட கமென்ட் ரொம்ப அநாகரிகமா இருக்கு. உன்னைச் சைத்தான்னு அவ எப்படிச் சொல்லலாம்?
அவ அப்படிப் பேசினதை சீரியஸாய் எடுத்துக்காதே. காலேஜ் டேஸ்லே இருந்தே அவ அப்படித்தான்.
எதுக்கும் ஒரு அளவு இருக்கு...
அடடா... நீ விடமாட்டே போலிருக்கே...!
ஸாரி விஷ்வா! உன்னை யார் மட்டம் தட்டிப் பேசினாலும் சரி... அது எனக்குப் பிடிக்காது.
சரி... சரி... ஹரிதா நம்ம கல்யாணத்துக்கு வரும்போது உன்கிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்றேன்.
அதெல்லாம் வேண்டாம். அந்த ஹரிதாகிட்டே நான் பேசவே விரும்பலை...
"இதோ பார் அஜந்தா... இது ஒரு சின்ன விஷயம். இதைப் பெரிசா எடுத்துக்க