Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayavanam
Mayavanam
Mayavanam
Ebook239 pages2 hours

Mayavanam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100704002
Mayavanam

Read more from Indira Soundarajan

Related to Mayavanam

Related ebooks

Related categories

Reviews for Mayavanam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayavanam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    மாயவனம்

    Mayavanam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    வனத்துக்கு கால் முளைத்தால் உடனே அது வானமாகிவிடுகிறது. பெரியது, எல்லையற்றது, அரியது, எல்லாமுமானது… வானம்! வானம் தான் தன் கால்களை மடக்கிக் கொண்டு பூமி மீது அமர்ந்து வனமாகிறது. எனவே வனம் வேறு வானம் வேறு இல்லை. எல்லாமுமான வானம் சென்று சேர ஒரு குறுக்குவழி தான் வனம்.

    ஆம்!

    வனம் செல்பவர்கள் வானம் சேர்வதும் சுலபம். வானத்துக்கு நட்சத்திரங்கள் போல வனத்துக்கு விருட்சங்கள் விளங்குகின்றன. சூர்ய சந்திரர்கள் போல அருவிகளும், தடாகங்களும் திகழ்கின்றன.

    ராமனை வனத்துக்குப் போகச் சொன்னது, அவனைத் தவிக்க விடுவதற்காக அல்ல … தழைக்க விடுவதற்காக!

    வனம் பற்றிய ரகசியங்கள் பல உண்டு…

    நொண்டி மடத்துப் பிள்ளையார் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருந்தார். லட்சோப லட்சம் அபிஷேகங்கள் கண்ட அவரது மேனி மேல் கும்மென்று பன்னீர் வாசம்…

    அடர்வாக சூட்டப்பட்ட ஒரு சாமந்திப் பூமாலை அப்படியே அவர் முன் ஒரு பெரிய தேங்காயைப் பந்து ஒன்றை பிடித்துக் கொண்டிருப்பது போல பிடித்தபடி நின்று கொண்டிருந்தார் சாம்பமூர்த்தி. பிள்ளையார் முன்னால் ஒரு சிட்டிகை விபூதியின் மேல் ஒரு மட்ட ஜாதி கற்பூரம் கருத்த புகையுடன் எரிந்து கொண்டிருந்தது.

    ஆரம்பத்தில் பிள்ளையார் சாம்பல் வண்ணமாகத்தான் இருந்தார். ஆனால் அபிஷேகம் ஆராதனை என்று அவரது பக்தர்கள் அவரை பிடுங்கியெடுத்து இப்படி கற்பூரமும் ஏற்றி அந்தப் புகையாலேயே அவரை ஆப்பிரிக்க நாட்டுச்சாமி மாதிரி ஆகிவிட்டார்கள்!

    ஏதோ பக்தியாலே அறியாமல் செய்கிறார்கள் என்பதால் அந்தப் பிள்ளையாரும் பெரிதாகக் கோபித்தது இல்லை … அதிலும் சாம்பமூர்த்தி போல போகும்போதும் வரும்போதும் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ஒரு பரம பக்தனிடம் கோபிக்க வழியே இல்லை.

    சாம்பமூர்த்திக்கு எல்லாமே அந்தப் பிள்ளையார்தான். இன்று அவரது மகன் கெளதம் டில்லியில் இருந்து வருகிறான். ஒரு இன்டர்வியூவிற்காக டில்லி போயிருந்தான் கௌதம்.

    பெரிய கம்பெனி, பெரிய வேலை … தேர்வானால் கார், பங்களா என்று கம்பெனியே கொடுத்துவிடும் அளவு ஒரு ராஜ கம்பீரமான அதிகாரப்பணி.

    அதற்காகத்தான் அவனை பாடாய்ப்பட்டு படிக்க வைத்தார்? அவன் படிப்புக்காக பூர்வீகச் சொத்தான காவிரிக் கரையோரமாக உள்ள மூன்று ஏக்கர் நிலத்தையும் அல்லவா விற்றார்!

    பூர்வீகச் சொத்து என்பது பிரசாதம் மாதிரியான ஒரு விஷயம். அது கைமாறாமல் பார்த்துக்கொள்வது என்பது, சாதாரண விஷயமல்ல. அதை ஒருவர் காப்பாற்றிவிட்டால் ஒரு சந்ததியையே காப்பாற்றிவிட்டார் என்பதுதான் சூட்சுமம்.

    பாவம் சாம்பமூர்த்தி, அவரால் அப்படி எல்லாம் காப்பாற்ற முடியவில்லை.

    சாம்பமூர்த்திக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் சீனியர் கிளார்க் உத்யோகம். அப்படியும் இப்படியுமாக பதினைந்து பதினாறாயிரம் வருகிறது.

    என்ன புண்ணியம்? மூத்தவளாக மைதிலி அமைந்துவிட்டாள். அவளுக்கு ஒரு நல்ல வரன் அமெரிக்காவில் இருந்தே வந்தது. மாப்பிள்ளைக்கு லட்சங்களில் சம்பளம்.

    எனவே அவர்கள் உயரத்துக்கு கடன் வாங்கி ஏணி வைத்து ஏறி செய்யவேண்டியதைச் செய்து அவளை அமெரிக்கா அனுப்பிவிட்டார். மைதிலிக்கும் பெருமை.

    அடுத்தவன் கௌதம். ‘ஒழுங்கா படி’ என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் படித்தான். அநியாயத்துக்கு நூறு நூறாகவே மார்க் வாங்கினான்! அதுவே அவனை மேற்கொண்டு கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என்பதற்கான அழுத்தமான காரணமாகிவிட்டது.

    மார்க் இருந்ததால் எங்கும் யாராலும் இடம் இல்லை என்றெல்லாம் பஞ்சப்பாட்டு பாட முடியவில்லை. ஐ.ஐ.டி.யிலேயே இடம் கிடைத்தது. பி.டெக், எம்.டெக் என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான். ஆனால் சாம்பமூர்த்திதான் அவனுக்கு நோட்ஸ் வாங்கவும், ஃபீஸ் கட்டவும் ஓட மாட்டாமல் ஓடினார்.

    எப்படியோ நல்லவிதமாக படித்து முடித்து நல்ல வேலையும் கிடைத்துவிட்டது. டில்லியில் இருந்தே கெளதம் போனில் பேசியபோது, அப்பா ஜாப் ஆர்டரை வாங்கிட்டேன், ஜாய்ன் பண்ணின உடனேயே ட்ரெய்னிங்குக்காக சிங்கப்பூர் அனுப்பறா. ஆறுமாதம் அங்க ட்ரெய்னிங். பாஸ்போர்ட்டெல்லாம் ரெடியா இருக்கான்னு கேட்டா. சென்னை போய் உடனே வாங்கிடறேன்னு சொன்னேன். என்னை ரொம்பத்தான் ஆச்சர்யமா பார்த்தாப்பா என்று ஒரு பாட்டம் பேசியிருந்தான்.

    18 வயதைத் தாண்டிவிட்டாலே பாஸ்போர்ட் வாங்கிடணும், பர்த் சர்டிபிகேட் மாதிரி … அதுவும் இனி அத்யாவசியம் தெரியாதா மிஸ்டர் கெளதம்னு இன்டர்வியூ ஆபீசர் கேட்டார். நான் கூடிய வரை தாய் நாட்டுலையே வேலை பார்க்க விரும்பறேன் சார். யாரைப்பார் அமெரிக்கா போகப் போறேன், ஆஸ்திரேலியா போகப் போறேன்னு சொல்லும்போது ஒரு எரிச்சலே ஏற்படறது. எனக்கென்னவோ ஆட்டையாம்பட்டி, அம்மாபட்டின்னு நம்ம ஊர் கிராமங்களுக்குப் போய் அந்த கிராமங்கள் மேம்பட ஏதாவது செய்யணும்னுதான் தோன்றதுன்னேன். அவருக்கு ஒரே ஆச்சர்யம்.

    "ஐய்யய்யோ இந்த வேலை வெளிநாடு வெளிநாடா பறந்து பறந்து பார்க்க வேண்டிய வேலையாச்சே … உங்க கொள்கைக்கு ஒத்துவருமான்னு கேட்டார்.

    முதல்ல நான் சம்பாதிக்கணும் சார். அப்பா எனக்காக பட்டிருந்த கடனை எல்லாம் அடைக்கணும். என் படிப்புக்காக எங்க பூர்வீக நிலத்தையே வித்துட்டார்; அதையும் முதல்ல வாங்கணும். அதுக்காகவாவது நான் இந்த வேலைல சேரணும்னு சொன்னேன். நான் இப்படி மனம்விட்டு பேசியதைக் கேட்ட ஆபீசர், உடனே அப்பாய்ன்மென்ட் ஆர்டர் டைப் பண்ணி நீட்டிட்டார். சொல்லப் போனா நான் இப்பவே ஜாய்ன் பண்ணிட்ட மாதிரிதான்.

    தற்காலிகமாக நான் வாடகை காரை பயன் படுத்திக்கலாம். எங்க வேணா போகலாம் வரலாம். ஒரே ஒரு கண்டிஷன் … நான் வேற ஒரு கம்பெனிக்கு இன்னும் மூணு வருஷத்துக்கு போக முடியாது. காண்ட்ராக்ட் போட்டு மடக்கிட்டா…" என்று அவன் போனிலேயே பூரித்துப்போய் பேசினான்…

    எல்லாம் இந்த நொண்டி மடத்துப் பிள்ளையார் கருணை. அந்த மடம் இருக்கும் தெருவிலேயே இருக்கிறது சாம்பமூர்த்தியின் வீடு. சுமாரான வீடுதான். அவருக்குத் தெரியாமல் ஒரு காரியம் பண்ண முடியாது. பார்த்துக் கொண்டேயிருப்பார்.

    இதோ இன்னும் சிறிது நேரத்தில் கெளதமும் வந்து விடப்போகிறான். அவன் காரைவிட்டு இறங்கி உள்ளே நுழையும் போது சிதறு காய் போட வேண்டுமே…?

    அதற்குத்தான் இந்தக் காய்… அதையும் எரிந்து அடங்கப் போன கற்பூரம் முன் உருட்டிக் காட்டிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினார் சாம்பமூர்த்தி.

    அவர் வீட்டு வாசலை அடையவும், கெளதமுடன் வாடகை கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அடுத்த நொடி தெருவே வாசலுக்கு வந்துவிட்டது.

    கௌதம் நல்ல சிவப்பு நிறம். சுருட்டை முடி வேற, வாட்ட சாட்டத்திலும் குறைவில்லை. எனவே வீதிப் பெண்களில் பலருக்கு அவனை மிகப் பிடிக்கும். அதிலும் கறுப்பு வைஜெயந்தி என்று ஒரு குயில் அந்தத் தெருவில் இருக்கிறது. அவளுக்கு கெளதம் மேல் ஒருதலையாகக் காதல். அவளும் தன் வீட்டு மல்லிகைக் கொடியின் பின்னால் மறைவாக நின்றுகொண்டு அவன் இறங்குகிற அழகைப் பார்த்தபடி இருந்தாள்.

    கோட் சூட் என்று புதிய தோற்றத்துடன் கெளதம் இறங்கிட, அந்தக் காட்சி சாம்பமூர்த்திக்கே புதிது.

    கெளதா… என்று ஓடிப்போய் மார்போடு கட்டிக் கொண்டார். சாம்பமூர்த்திக்கும் அம்மா இருக்கிறாள். வயது எண்பதைத் தாண்டிவிட்டாள். கைம்மைக் கோலம்… கைகளில் பச்சை நரம்பு பளிச்சென்று தெரியும் நைந்த தோற்றம். அவளும், சாம்பமூர்த்தியின் சகதர்மிணி கல்யாணியும் கூட வேகமாக வாசலுக்கு வந்து கௌதமைப் பார்த்து விக்கித்துப் போய் நின்றனர்.

    ஒரு நாலு முழவேட்டி, கைவைத்த பனியன் என்று படுஅடக்கமாக தெருவைச் சுற்றி வந்தவன்… இப்படி கோட் சூட்டோடு இறங்கினால் யாருக்குத்தான் விக்கிப்பு ஏற்படாது?

    டேய் சாம்பா தேங்காயை தலையை சுத்தி உடைடா … தெருவே பாக்கறது பார். யார் கண்ணு என்ன பண்ணும்னு யாராலயும் சொல்ல முடியாது என்று காதில் கேட்கும்படி சாம்பமூர்த்தியின் தாய் சாரங்கி கத்தியது தெருவுக்கும் கேட்டது. அதனால் சிலரது முகம் புகைபட்ட மாதிரி காந்தவும் செய்தது.

    சாம்பமூர்த்தியும் தேங்காய் மேல் கற்பூரத்தை ஏற்றி அவன் முகத்துக்கு முன்னால் சுற்றிவிட்டு நடுத்தெருவுக்கு போய் ஓங்கி ஒரு போடு போட்டார்.

    அந்தக் காயும் சிதறித் தெறித்தது.

    நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்தார். நொண்டி மடத்துப் பிள்ளையார். கொஞ்சம் அவர் மர்மமாய் சிரிக்கிற மாதிரிகூட இருந்தது!

    வீட்டுக்குள் நுழைந்தவன் முதல் காரியமாய் அப்பா சாம்பமூர்த்தியையும், அம்மா கல்யாணியையும் விழுந்து நமஸ்கரிக்க முயன்றான்.

    முதல்ல பாட்டி… பிறகு தான் நாங்க… என்று சாம்பமூர்த்தி தன் தாய் சாரங்கியை நோக்கி கைகாட்ட மூணு பேரும் சேர்ந்தே நிற்போமே… எதுக்கு தனித்தனியா சேவிச்சுண்டு. கோட் சூட் வேற அழுக்காகும்… என்றாள் பாட்டியும் அதிகபட்ச அக்கறையோடு.

    அவனும் விழுந்து சேவித்தான். அப்படியே மறக்காமல் ‘அபிவாதயே’யும் சொல்லி முடித்தான். பிறகு பிரீஃப் கேஸை திறந்து ஆர்டரை எடுத்து அப்பா கையில் கொடுத்தான்.

    அவரும் அதை புளகாங்கிதமாய்ப் பார்த்தபடி ஊஞ்சலில் போய் அமர்ந்தார். அப்படியே அந்த ஆர்டரை விரித்துப் படித்தார். படிக்கப் படிக்க முகத்தில் ஒரே பரசவம்.

    "மாசம் எம்பதாயிரம் கிட்ட சம்பளம். எடுத்த எடுப்பிலேயே ஜூனியர் ஆபீசர்ங்கற கிரேட். கம்பெனியும் இன்டர்நேஷனல் லெவல்ல பேர் பெற்ற கம்பெனி.

    கௌதா… ரொம்ப சந்தோஷம்டா.

    எங்க என்னப்போல நீயும் சொல்ப சம்பளம் வாங்கி அப்பப்ப மளிகைக் கடைக்கும், பால்காரனுக்கும் கடன் சொல்லவேண்டி வந்துடுமோன்னு பயந்துண்டு இருந்தேன்" என்று துளிர்த்துவிட்ட கண்ணீரை சுண்டிவிட்டுக் கொண்டார். அப்போது உத்தரத்திலிருந்து கௌளி வேறு ‘டப்டப்’ என்றது.

    என்னதிது… வடக்க இருந்துண்டு டப்டப்புங்கறது… பாட்டி சாரங்கி அண்ணாந்து அந்த பல்லியை சற்று பயத்துடன் பார்த்தாள்.

    ஏம்மா… அங்க இருந்து அது கத்தக் கூடாதா?

    ஆமாம் சாம்பா… எதாவது கெட்ட சேதி வரலாம்…

    கெளதா … பேசாம போய் மளமளன்னு அடுத்து ஆகவேண்டியத பாரு… ஆமா நீ போன்ல பேசும்போது பர்த் சர்ட்டிபிகேட் பத்தி சொன்னேல்ல…?

    ஆமாம்பா … பாஸ்போர்ட் அப்ளை பண்ணும்போது அதெல்லாம் ரொம்ப முக்கியம்…

    அதெல்லாம் ரெடியா இருக்கு… நீ பாஸ்போர்ட் வாங்க சென்னை போகப் போறியா… திருச்சிக்கா?

    நமக்கு திருச்சிதானேப்பா பக்கம்…?

    அதுவும் சரிதான்… சாப்டுட்டு கிளம்பு. நானும் வரேன் திருச்சி போகச்சே அப்படியே சமயபுரம் போய் மாரியம்மனையும் சேவிச்சுட்டு வந்துடுவோம்…

    ஏன்னா… ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கரை மறந்துட்டேளா… இவுனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்க நீங்க அவரோட மந்த்ரராஜ ஜப ஸ்தோத்ரம் பாராயணம் பண்ணதும் மறந்துடுத்தா?

    அட ஆமாம்ல… சரிடா ஒரு கார் எடுத்துண்டு அப்படியே எல்லா கோயிலுக்கும் போய்ட்டு வந்துடுவோம். நீ ரெடி பண்ணிண்டிரு. நான் செத்த கடைத்தெருவரை போய்ட்டு வந்துடறேன்… என்றபடியே சாம்பமூர்த்தி அங்கவஸ்திரத்தை எடுத்து தோளில் மூடியபடி வீதியில் இறங்கினார்.

    நடையில் ஒரு தனி துள்ளல். ஒரு மலையில் ஏறி கொடி நட்டுவிட்டது போலப் பெருமிதம். அதே தெருவில் சாம்பமூர்த்தியின் மேனேஜர் குடி இருக்கிறார். எப்பொழுது அவரைப் பார்க்க நேர்ந்தாலும் இவர்தான் முதலில் குட்மார்னிங் சொல்லவேண்டும். அது கம்பெனி கல்ச்சர், இத்தனைக்கும் அவர் பிள்ளை சாதாரண அகடமிக் டிகிரி வாங்கவே பாடாய்ப் பட்டு விட்டான். இப்பொழுது ஒரு தோல்பையைத் தூக்கிக்கொண்டு மெடிக்கல் ரெப்பாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

    இனி அவரைப் பார்க்கும்போது குட்மார்னிங்கை தான் முதலில் சொல்லக் கூடாது; அவரை சொல்ல வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்...

    ஆனால் மனிதர் வெளியவே வரவில்லை. அவருக்கும் அவ்வளவு எரிச்சல்.

    என்ன ஓய்… கெளதம் டில்லி போகப் போறானாமே?

    சாம்பமூர்த்தி… இனி உன் காட்லதான்யா மழை… பெத்தா உன்னை மாதிரி பிள்ளையா பெக்கணும்… என்று வழி நெடுக அவர் காதில் பரிச்சயப்பட்டவர்களின் ஸ்லாகிப்புகள் ஒருபுறம்.

    அவருக்கும் நெஞ்சுக்கு இதமாக இருந்தது. நடையிலும் அது தெரிந்தது.

    ராஜமங்கலம் கடைத்தெருவில் புதியதாக ஏ.டி.எம். சென்டர் ஒன்று முளைத்திருந்தது. அதற்குள் புகுந்து அதன் ஏ.சி.யில் கொஞ்சம் இளைப்பாறி பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

    வெளியே அவரையே வெறித்தபடி ஒரு அழுக்கு மனிதர் இடையில் ஒரு கோவணம், கையில் ஒரு வளைந்த தடி, தலையெல்லாம் கூட கலைந்து கோரைப்புதர்போல இருந்தது. ஆனால் கண்களில் அப்படி ஒரு தீட்சண்யம். அவரைப் பார்த்த நொடியில் சாம்பமூர்த்திக்கு வெலவெலத்துவிட்டது.

    சு… சு… சுவாமி நீங்களா?

    நானேதான் சாம்பமூர்த்தி… என்னை நீ எதிர்பார்க்கலையா? என்றார் அந்தக் கோவணாண்டி.

    அது… அது… ஆமாம் சுவாமி… சாம்பமூர்த்திக்கு க்ஷணத்தில் வியர்த்துவிட்டது.

    என்னைப் பார்த்த உடனேயே உனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருதாட்டம் இருக்கு. போகட்டும்… என் மகன் கெளதம் எப்படி இருக்கான்?

    அவர் அப்படி கேக்க சாம்பமூர்த்திக்கு அடுத்த வினாடியே நெஞ்சையடைத்தது.

    2

    பூலோக வனங்களில் பொதிகைமலை வளம் பலகொண்ட தனிச்சிறப்புகளை உடையது. இந்தப் பூமி மூன்று மடங்கு நீராலும், ஒரு பங்கு நிலத்தாலும் ஆனது. இந்த மூன்று ஒன்று" என்கிற கணக்குக்குப் பின்னால் கூட ஒரு சூட்சுமம் உள்ளது. இப்படி மூன்று; ஒன்று என்ற கணக்கில் பிரிக்கப்பட்டால்தான் நிலமிசை நன்னீர் மழை இந்தப் பூமி தாங்குமளவு பெய்யும். இதில் துளி கூடினாலும் நிலப்பரப்பு என்பதே

    Enjoying the preview?
    Page 1 of 1