Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varamaga Vandhavan
Varamaga Vandhavan
Varamaga Vandhavan
Ebook121 pages51 minutes

Varamaga Vandhavan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604000
Varamaga Vandhavan

Read more from Devibala

Related to Varamaga Vandhavan

Related ebooks

Reviews for Varamaga Vandhavan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varamaga Vandhavan - Devibala

    http://www.pustaka.co.in

    வரமாக வந்தவன்

    Varamaga Vandhavan

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    காருக்கு அடியில் படுத்து அதன் சக்கரங்களை பரிசோதித்துக் கொண்டிருந்தான், கஜா!

    அண்ணா! 'பார்ட்டி’ வந்தாச்சு!

    இருடா, வர்றேன்!

    வெளியே வந்தான், கஜா!

    என்னப்பா வண்டி தயாரா?

    சாயங்காலம் ஏழு மணிக்கு நானே உங்க வீட்டுக்கு கொண்டு வந்துடுறேன்!

    சொன்ன நேரத்துக்கு வரமாட்டியா?

    நெனச்சதுக்கு மேல வேலை வாங்கிடுச்சு சார். மன்னிச்சிடுங்க! ஏழு மணிக்கு உங்க வீட்ல இருக்கும்!

    அந்த ஆள் போய்விட்டார்.

    அம்மா சாப்பாட்டு பாத்திரத்துடன் உள்ளே நுழைந்தாள். மதியம் ஒரு மணி!

    கஜா! சாப்பிட வா!

    யார்கிட்டேயாவது கொடுத்து அனுப்புன்னு நான் எத்தனை வாட்டி சொல்லுவேன், உனக்கு? நீ நடந்து கஷ்டப்பட்டு ஏன் வர்ற?

    இதுல என்னடா கஷ்டம்? உன்கிட்டே இருந்து சாப்பாடு குடுத்தா, என் மனசுக்கு திருப்தி! கை கழுவிட்டு வா! உனக்கு பிடிச்ச மீன்குழம்பு கொண்டு வந்திருக்கேன்!

    கஜா வந்து அமர, எதிரே உட்கார்ந்த அம்மா. அவனுக்கு கையில கவளம் கவளமா உருட்டிப் போட - கஜா சாப்பிடத் தொடங்கினான். அதை ரசனையுடன் பார்க்கத் தொடங்கினாள். அம்மா!

    கண்ணு! உனக்கொரு கல்யாணத்தை செஞ்சு வச்சிட்டா, இந்தக் கஷ்டம் எனக்கில்லை!

    இதோ பாரு! யாரு வந்தாலும், இந்த வேலை உன்னது தான். புரியுதா? உன் கையால் சோறு சாப்பிட்டாத்தான், எனக்குத் திருப்தி!

    அம்மா புறப்பட்டு விட்டாள்.

    கஜா அவளுக்கு ஒரே மகன். வேறு பிள்ளைகளே இல்லை! கஜாவின் பத்தாவது வயதில் அப்பா இறந்துபோனார்.

    மகாலிங்கம் என்றால் அந்த பகுதி நடுங்கும்! ஒரு தாதாவாக வாழ்ந்த மனிதர், ஒரு விபத்தில் இறந்துபோனார்.

    அது தற்செயலான விபத்தல்ல! வேண்டுமென்றே காரை விட்டு அடித்துக் கொன்றார்கள் என்றுகூட ஊரில் ஒரு பேச்சு உண்டு!

    பணம் உள்ளவர்களிடம் மட்டும்தான் மகாலிங்கம் மோதுவார். ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்த மனிதர்.

    ஆனாலும், ஒரு தாதாவாக வாழ்ந்ததால், அவர் இருக்கும் போது பயந்தார்கள். இறந்தபிறகு, அவரது மனைவி - மகனை, யாரும் மதிக்கவே இல்லை!

    சொர்ணம் ஏறத்தாழ தெருவில் நின்றாள்.

    எப்படியோ கஷ்டப்பட்டு, உழைத்து அரைவயிறு சோறுக்கு வழி செய்துகொண்டாள்.

    கஜாவுக்கு படிப்பு ஏறவில்லை!

    அப்பாவின் முன்கோபம் மட்டும் அப்படியே இருந்தது!

    வம்பு சண்டைக்கு போகமாட்டான். ஆனால், பிரச்சினை வந்தால், வாய் பேசுவதற்குமுன் கை பேசிவிடும். இதனால் பல விவகாரங்கள் முளைக்க, சொர்ணம் ஆடிப்போனாள்.

    பிள்ளை செல்லமாக இருந்ததால், அவனை தண்டிக்க மனம் வரவில்லை!

    அவனது எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக இருந்தது.

    கணவனைப் போல அவனும் ஒரு தாதாவாகி விடக்கூடாது என படாதபாடுபட்டாள்.

    படிக்காவிட்டாலும், மற்ற வேலைகளில் ஈடுபாடு உடல் உழைப்புக்குத் தயங்க மாட்டான்!

    வெளியாட்களிடம் வேலை கற்றுக்கொண்டு படிப்படியாக உழைத்து சொந்தமாக 'மெக்கானிக்' கடை ஒன்றை அவனே உருவாக்கிவிட்டான். வெளிநாட்டு வண்டிகளைக்கூட அவனே சரிசெய்து விடுகிறான்.

    இதில் கணிசமான வருமானம்!

    பிள்ளை தலைதூக்கியதும் சொர்ணத்துக்கு நிம்மதியாகி விட்டது!

    அண்ணே! அண்ணி வந்துட்டாங்க!

    சரி! போய் வேலையைப் பாருடா!

    கஜா முகம் கழுவிக்கொண்டு வந்தான். தன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து நிறுத்தினாள், வாணி.

    அஞ்சு நிமிஷம் இரு, வாணி! குடிக்க ஏதாவது சாப்பிடுறியா?

    வேண்டாம். வெளில சாப்பிட்டுக்கலாம்! நீ சீக்கிரம் வா... கஜா! கஜா உள்ளே போய் உடை மாற்றிக் கொண்டான். அழுக்குப் படிந்த காக்கி உடைகளை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, நல்ல உடையுடன் வெளிப்பட்டான்.

    அவளது இரண்டு சக்கர வாகனத்தை உள்ளே நிறுத்தினான்.

    பழுது பார்க்க வந்திருந்த வெளிநாட்டுக் காரை வெளியே எடுத்தான்!

    வாணி! உக்காரு!

    முன்கதவு திறந்து வாணி உட்கார, வண்டியை எடுத்தான்.

    இந்த மாதிரி பட்டறை வச்சா, தெனமும் ஒரு புது வண்டி தான், சொந்தக்காரங்க ஒண்ணும் சொல்லமாட்டாங்களா?

    என்ன சொல்ல முடியும்? சோதனை ஓட்டம்னு சொல்லிடுவேன்!

    யாருக்கு சோதனை?

    சரி! எங்கே போகலாம்?

    எனக்குப் பசிக்குது. கஜா!

    ஒரு உணவகத்தின் முன்பு வண்டியை நிறுத்தினான். இருவரும் உள்ளே போனார்கள்.

    குளிரூட்டப்பட்ட தனி அறை!

    'சர்வர்' வர, அவளுக்குப் பிடித்த உணவுகளுக்கு கஜா உத்தரவிட்டான்!

    வாணி மெதுவாக அவனைப் பார்த்து சிரித்தாள்!

    வாணி ஒரு பெண்கள் கல்லூரியில் இறுதியாண்டு கணிப்பொறி படிப்பு! பன்னிரண்டாவது படிக்கும் ஒரு தங்கை வாணிக்கு! அப்பா மளிகைக்கடை வைத்து நடத்துகிறார். அம்மா துணி தைத்து சம்பாதிக்கும் பெண் மணி, நடுத்தர வர்க்கம்தான்.

    ஒரு ஆண்டுக்கு முன்பு, சில ரவுடிகள் வாணியை விரட்ட, கஜா தற்செயலாக அந்தப் பக்கம் வர, அவர்களை உதைத்து வாணியை மீட்டான்.

    அதன்பிறகு, தன் வண்டியை பழுதுபார்க்க வாணி இங்கு வர, படிப்படியாக நட்பு இறுகி, காதலாகிவிட்டது!

    இரு வீட்டுக்கும் தெரியாது!

    நேரம் வரும்போது சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டார்கள்.

    நான் இந்த வருஷம் படிப்பை முடிச்சிடுவேன், ஒரு வேலையைத் தேடிக்கிட்டா, நம்ம காதலை வீட்ல சொல்லிடலாம்!

    ஒரு ‘மெக்கானிக்’கை உங்க வீட்ல ஏத்துப்பாங்களா?

    நாங்க என்ன கோடீஸ்வரக் குடும்பமா, கஜா? நீ கைநிறைய சம்பாதிக்கிறே! கவுரவமான சொந்தத் தொழில்! அப்புறமென்ன?

    அவன் தலையாட்டினான்!

    கல்லூரி முடிந்து வாரத்தில் இரண்டு நாட்கள் கஜாவைப் பார்க்க வந்துவிடுவாள். வாணி! இதேமாதிரி

    Enjoying the preview?
    Page 1 of 1