Oru Sol Keeler!
By Jayakanthan
()
About this ebook
Jayakanthan's literary honours include Jnanpith and Sahitya Akademi awards. He was also a recipient of Padma Bhushan (2009), India's third-highest civilian honour, the Soviet Land Nehru Award (1978), and the Russian government's Order of Friendship (2011)
Jayakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jayakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short-stories particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel. The film focussed on the plight of slum-dwellers. Although a commercial failure, it won the President's Certificate of Merit for the Third Best Feature Film in 1965. The following year he made another film based on his namesake novel Yaarukkaga Azhudhaan which had Nagesh playing the lead role. His novel Sila Nerangalil Sila Manithargal (1970) won him the Sahitya Akademi Award (for Tamil) in 1972. Later this was adapted into a film of the same name by A.Bhimsingh, which won a National Film Award. Promoted by the film's success, Bhimsingh made one more film tilted Oru Nadigai Naadagam Paarkiral, based on his namesake novel.
In 2008, Ravisubramaniyan made a documentary film on Jayakanthan, the second of its kind, and was produced by Ilaiyaraja.
https://en.wikipedia.org/wiki/Jayakanthan
Read more from Jayakanthan
Sila Nerangalil Sila Manithargal Rating: 4 out of 5 stars4/5Illathavargal Rating: 5 out of 5 stars5/5Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Sirukathaigal Thoguppu - 2 Rating: 4 out of 5 stars4/5Unnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsPralayam Rating: 5 out of 5 stars5/5Innum Oru Pennin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal Rating: 2 out of 5 stars2/5Yaarukkaga Azhuthan? Rating: 4 out of 5 stars4/5Vazhkai Azhaikkirathu Rating: 2 out of 5 stars2/5Oru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Vizhuthugal Rating: 5 out of 5 stars5/5Kokila Enna Seithu Vittal? Rating: 4 out of 5 stars4/5Cinemavukku Pona Sithalu Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 4 out of 5 stars4/5Pagalil Oru Vesham Rating: 0 out of 5 stars0 ratingsKaru Rating: 0 out of 5 stars0 ratingsSundarakaandam Rating: 0 out of 5 stars0 ratingsAyudha Poojai! Rating: 0 out of 5 stars0 ratingsAndha Akkavai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsGurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Oru Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsOru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsYuga Santhi Rating: 0 out of 5 stars0 ratingsPugai Naduvinile... Rating: 0 out of 5 stars0 ratingsIthaya Ranigalum Ispedu Rajakkalum Rating: 3 out of 5 stars3/5Kathaiyin Karu Rating: 0 out of 5 stars0 ratingsKari Kodugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Sol Keeler!
Related ebooks
Sabai Naduve Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Ninaithu Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsEngengu Kaaninum... Rating: 0 out of 5 stars0 ratingsKathaiyin Karu Rating: 0 out of 5 stars0 ratingsPralayam Rating: 5 out of 5 stars5/5Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal Rating: 2 out of 5 stars2/5Jayakanthanin Cinema Kandathum Kattrathum Rating: 0 out of 5 stars0 ratingsVadakku Veethi Rating: 5 out of 5 stars5/5Karu Rating: 0 out of 5 stars0 ratingsUnmai Sudum Rating: 0 out of 5 stars0 ratingsCinemavukku Pona Sithalu Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Rating: 5 out of 5 stars5/5Oorukku Nooru Per Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsDinosaurgal Veliyeri Kondirukindrana Rating: 4 out of 5 stars4/5Kokila Enna Seithu Vittal? Rating: 4 out of 5 stars4/5Jayakanthan Munnuraigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsBrahmopadesam Rating: 0 out of 5 stars0 ratingsPulariyin Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Rating: 0 out of 5 stars0 ratingsVaazhum Deivam Mahatma Rating: 5 out of 5 stars5/5Ghost Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Pon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsPugai Naduvinile... Rating: 0 out of 5 stars0 ratingsOru Nadikai Naadakam Parkiral Rating: 2 out of 5 stars2/5Ayudha Poojai! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oru Sol Keeler!
0 ratings0 reviews
Book preview
Oru Sol Keeler! - Jayakanthan
http://www.pustaka.co.in
ஒரு சொல் கேளீர்!
Oru Sol Keeler!
Author:
ஜெயகாந்தன்
Jayakanthan
For more books
http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. கடவுள் கூட மன்னிக்க மாட்டார்
2. தமிழகம்: வரலாறு படைத்து வழிகாட்டுகிறது
3. எதிர்க்கட்சிகளின் தேசபக்திக்கு ஒரு சோதனை!
4. இனி, சுலபமாக அணுக அனுமதியோம்!
5. மது (விலக்கு)க் கொடுமை
6. பாவம் - நமது போலீஸ்காரர்கள்!
7. நியாயம்தான்
8. நதியும் நாகரீகமும்
9. ஆடிப்பெருக்கின் வெள்ளத்தில்
10. ஒற்றுமை நீங்கிடில்...
11. அதீத ஜனநாயகம் ஆபத்தானது
12. சத்யமேவ ஜெயதே!
13. ஜனநாயகத்தின் பேரால் கம்யூனிஸ எதிர்ப்பா?
14. மறுபடியும் ஒரு புரட்சி
15. கொடியும் கொள்கையும்
16. லெனின் கடவுளானது எப்படி?
17. நவம்பர் புரட்சியும் நாமும்
18. சவாலைச் சந்திப்போம்!
19. அநாகரிகத்தின் அடையாளம்
20. அன்னையின் அழைப்பு
21. பாபர் தொழுத புனித பூமி!
22. மக்கள் மறக்க மாட்டார்கள்
23. தென்னிந்தியர்கள்
24. வதந்தி வதந்தியாகவே இருக்கட்டும்!
25. விசாரணைதான் நடக்கிறது...
26. காட்டிக் கொடுக்கிறார் யோகி
27. நாயகர் நால்வர்
28. ஸர்வ தர்ம ஏகதா யாத்ரா
29. போக ஒரு நேரம் வர ஒரு நேரம்
30. இந்திய-சோவியத் கலாச்சாரம்-இனி என்ன?
31. எதிர்பார்ப்பும் - ஏமாற்றமும்
32. பிரியங்காவுக்கு அழைப்பு
33. பயங்கரவாதத்தின் சவால்
34. காஷ்மீரிலும் தேர்தல்
35. இனி பொறுப்பதில்லை...
36. ஊர்வலங்களும் ஊடுருவல்களும்
37. நமது புதிய பொருளாதாரம்
38. அரசியலும் பொருளாதாரமும்
39. அது ஒரு தொழில் அல்ல
40. 'பல்லாயிரம் முட்டாள்கள்!’
41. தோழமையும் எச்சரிக்கையும்
42. வெற்றி கூறுமின்!
43. நம்பிக்கை தரும் நான்கு மாநாடுகள்!
44. தடை என்ன செய்துவிடும்?
45. கட்சி சாராத கம்யூனிஸ்டுகளே!
46. காலத்தின் சோதனையில் தேர்ந்த நட்பு
47. ஒரு மாபெரும் சதி
48. என்னே நமது தேசபக்தி!
49. தோழர் ஆர்.கே. கண்ணன்
முன்னுரை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒரு சொல் கேளீர்!
என்ற மகாகவியின் மனோநிலையில் எழுதப் பட்டவைதாம் இவை.
அரசியல் என்ற வார்த்தையை அறிவதற்கு முன்னாலான குழந்தைப் பருவத்திலேயே தேச அரசியலில் ஈடுபாடு கொண்டவன் நான். எனது 13-14 வயதுகளில் தான் தேச விடுதலையும், பாகிஸ்தான் பிரிவினையும், மகாத்மா காந்தி படுகொலையும், கம்யூனிஸ்டுகளின் ஆயுதம் தாங்கிய போராட்டமும்... எல்லா விபரீதங்களும் நேர்ந்தன. அதன் தொடர்ச்சியே போல் இன்று வரை அவை மேலும் பெருகியும் வருகின்றன.
இந்த எதிர்மறை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், ஆக்க பூர்வமான வளர்ச்சிகளும் நம்பிக்கை தருகிற நிகழ்ச்சிகளும் மலை போல் வளர்ந்து இந்தச் சவால்களைச் சந்தித்துப் போராடி வருவதையும் நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். ஆனால் அந்த ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளை விடவும், அச்சம் தருகிற இந்த அடுக்கடுக்கான விபரீத நிகழ்ச்சிகளே நம்மைப் பெரிதும் பாதிக்கின்றன.
இவற்றைக் குறித்து இவை நிகழும் காலத்திலேயே பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியா இரண்டுபட்டுச் சுதந்திரம் பெறுவதைவிட இன்னும் சிலகாலம் அடிமையாக ஒன்றுபட்டுப் போராடலாம்
என்று நான் ஓலமிட்டேன்.
ஏழை சொல் அம்பலம் ஏறுமா? காந்திஜியை விடப் பரம ஏழையும் உண்டோ? அவரது சொல்லே அம்பலம் ஏறவில்லையே!
மகாத்மாகாந்தி கொல்லப்பட்டபோது, இனிமேல் உலகை உய்விக்க வரும் மகான்கள் எல்லாம் இவ்விதமே கொல்லப்படுவார்களோ!
என்று என் இள உள்ளம் ஏங்கியது... இன்றும் அது தொடர்கிறது.
யுத்தமும், சுரண்டலும் இல்லாத சமத்துவமான, சாந்தி மயமான ஓர் உலக வாழ்க்கைக்காகப் பாடுபடும் மனிதாபிமானிகளான கம்யூனிஸ்டுகள் பலாத்கார வழியை எப்படிக் கைக்கொள்ள முடியும்? - அதுவும் இந்தியாவில்? என்ற ஒரு கேள்வி இன்னும் ஓர் இந்தியனின், தமிழனின் இதயத்தில் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது...
ஊதுகிற சங்கை ஊதி வைப்போம். விடிகிறபோது விடியட்டும் என்ற திட்டத்துடன்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. நமது செயலே சொல்லும் எழுத்தும் தானே?
உபதேசங்கள், பொன்மொழிகள், நீதிநெறி விளக்கங்கள் எல்லாம் எழுத நமது மொழியில் நிறையப் பேர் இருக்கிறார்கள். தக்க தருணத்தில் தக்க யோசனை கூறுவோர் மிகச் சிலரே. அவையும் காலத்தில் கவனித்து ஏற்றுச் செயல்படுத்தப்படுகிறதா? எனில் வருத்தம்தான் மேலிடுகிறது. நாமென்ன செய்ய? குருக்ஷேத்திரத்து யுத்தத்தில் சஞ்சயன் என்ன செய்யமுடியும்?
எனது மதிப்புக்குரிய திரு.கண. முத்தையா அவர்கள் இதற்குத் தந்துள்ள அணிந்துரை எனக்கு ஓர் அணிகலனே ஆகும்.
சென்னை 78.
16-12-92
த. ஜெயகாந்தன்
*****
அணிந்துரை
நண்பர் திரு. ஜெயகாந்தன் அவர்களை சிறுகதை மன்னராக, சிறந்த நாவலாசிரியராகத் தமிழ் எழுத்துலகம் உணர்ந்திருக்கிறது. அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதையும், மனிதாபிமான மிக்க தேசபக்தர் என்பதையும் சமீப காலத்தில் வெளிவந்த அவருடைய கட்டுரைத் தொகுதிகள் பல வெளிப்படுத்தியுள்ளன.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த இந்திய உலக அரசியல் - பொருளாதார நிகழ்ச்சிகள் அந்த நல்ல உள்ளத்தை எப்படிப் பாதித்துள்ளன; அவருடைய மனம் மனித குல வளர்ச்சியைப் பற்றி எவ்வளவு ஆழமாகச் சிந்தித்துள்ளது என்பதை இந்நூலில் உள்ள கட்டுரைகள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.
இந்திய தேசிய உணர்வு - இலங்கைத் தமிழர்களின் நல் வாழ்வு பற்றி எவ்வளவு சரியான முறையில் சிந்தித்துள்ளது: அதை விடுதலைப் புலிகள் எவ்வளவு தவறாகப் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதைப் பல கட்டுரைகள் சிறப்பாக விளக்கி உள்ளன.
சமீப காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் நிகழ்ந்துள்ள வருந்தத்தக்க நிகழ்ச்சிகள் இந்திய சோவியத் நல்லுறவை இந்திய சோவியத் கலாச்சார உறவை எவ்வாறு பாதித்துள்ளது. இதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று மிகுந்த கவலையோடு சிந்தித்திருக்கும் திரு. ஜெயகாந்தன். ஒரு நல்ல விளைவு ஏற்பட்ட வேண்டுமென்று உளமாற பிரார்த்தித்திருக்கிறார், சில கட்டுரைகளில்.
இந்திய அரசியல் நிகழ்ச்சிகள் பற்றி அவர் எழுதியுள்ளவை யாவும் காந்தியடிகளின் பாதையைப் பிற்காலத்தவர் சரியாகப் பின்பற்றவில்லையே என்ற கவலையை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைக்கிறது.
அவருடைய அரசியல் கருத்துக்கள் சிலவற்றில் மாறுபடுகிறவர்கள்கூட, அவருடைய ஆழ்ந்த சிந்தனை அறிவையும், மனிதாபிமானத்தையும் பாராட்டவே செய்வர்.
அவருடைய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மனித குலத்தின் மேன்மையையே நோக்கமாகக் கொண்டு உயர்ந்து நிற்பதை இக்கட்டுரைகளில் காண முடிகிறது.
முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் அவரை ஒரு சிறந்த எழுத்தாளராக இனம் கண்ட நான், இன்று ஒரு மனிதகுல நலன் கருதும் - மனிதகுல மேன்மைக்காகவே ஆழமாக சிந்திக்கும் ஒரு சிறந்த அறிஞராக இனம்கண்டு பெருமைப்படுகிறேன். வாழ்த்துகிறேன்.
சென்னை – 5.
20-12-92
கண. முத்தையா
*****
1. கடவுள் கூட மன்னிக்க மாட்டார்
சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் பேசுவதற்கும் எவ்வளவோ விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆயினும் இந்த விநாடி எமது மண்ணில் வாழ்கிற சிந்திக்கத் தெரிந்த சகல ஜீவராசிகளின் சித்தத்திலும் கவிந்து நிற்கிற, கணநேரம் மறந்தாலும் திடீர் திடீர் எனக் கொல்லன் உலைபோல் குமுறிக் குமுறி எரிகிற ஒரே சிந்தனை...
ஐயோ! இதென்ன...? என் வாழ்நாளில் பெற்ற தந்தையினும் பெருந்தந்தையாகச் சொந்த வாழ்வில் கருதி வழிபட்ட தேசத் தந்தை மகாத்மா காந்தி...
அதேபோல், அன்னையர் குலத்துக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த இந்திரா காந்தி...
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்புப் போல், இமாலய இழப்பாய், இந்திய சரித்திரம் தாங்கி நிற்கிற மாபெரும் சோகமாய் வந்து வந்து சிந்தையைக் கவிகிற ஒரே சிந்தனை - ராஜீவ் காந்தியின் மரணம்.
இந்தியா உலகுக்களித்த இந்த மாபெரும் மனிதர்கள் ஏன் இவ்வாறு படுகொலை செய்யப்படுகிறார்கள்?
மகான்களையும் மாபெரும் தலைவர்களையும் இவ்வாறு சொல்லுகின்ற நடைமுறை இந்த மண்ணில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக நடந்ததே இல்லை. மகாத்மா காந்திதான் இந்தப் பாதகத்துக்கு முதலில் பலியானவர். அதன் பிறகு நேர்ந்த இந்திரா காந்தி - ராஜீவ்காந்தி படுகொலைகள் அதன் தொடர்ச்சியும் அத்துடன் சம்பந்தமுடையதும் ஆகும் என்று தோன்றுகிறது.
ஓர் அரை நூற்றாண்டுக் காலத்தில் ஒரே தேசத்தில் உருவான, உலகுக்கு வழிகாட்டக்கூடிய மூன்று தலை முறையினரைத் திட்டமிட்ட படுகொலைக்குப் பலி கொடுத்தது பாரத தேசம்தான். எனவே, இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்பது தெளிவு.
‘வாளெடுத்தவர்கள் வாளுக்கு இரையாவார்கள்’ என்பதுதான் வசனம். வாள் எடுக்காதவர்களையும், அவன் முறையை மறுப்பதே வாழ்வியல் நெறியாகக் கொண்டவர்களையும், அன்பையும் நட்பையும் வளர்ப்பதே அரசியலாகக் கொண்டவர்களையும் இப்படி வன்முறை பலி கொள்வது மனிதகுல வரலாற்றில் ஒன்றும் புதியதல்ல.
ஏசுவும், நபிகள் நாயகமும் அதற்கு உலகறிந்த உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். அவர்களைக் கொன்றவர்கள் அவர்களை முறையே தேவகுமாரனென்றும் இறைவனின் தூதன் என்றும் அறியாத மூடர்கள். அவர்களைச் சிறை பிடித்தும், சீரழித்தும், அவமதித்தும், சிலுவை சுமக்கச் செய்தும், விரட்டியடித்தும் கொன்ற கொடிய மூடர்கள் அவர்கள். அதனால்தான் இயேசு பிரான் அவர்களுக்காகச் சிலுவையில் தொங்கிக் கொண்டு இறைவனிடம் இறைஞ்சினார்.
பிதாவே! இவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியுங்கள்
என்றார்.
ஆனால் மகாத்மாவையும் இந்திராகாந்தியையும் ராஜீவ்காந்தியையும் படுகொலை செய்த பாதகர்கள் தெரிந்தே, 'இவர்கள் தெய்வத்துக்கு இணையான ஆற்றல் மிகுந்த மாண்பு செறிந்த, இந்திய ஆன்மாவின் சொரூபங்கள்’ என்று தெரிந்தே செயல்படும் சைத்தான் கூட்டத்தினர்.
ஆம்! மகாத்மா காந்தியைக் கொல்ல வந்த அந்த வஞ்சகன் முதலில் அவரைக் கும்பிட்டான்; பிறகு கொன்றான்.
இந்திராகாந்தியின் மெய்க்காப்பாளன் ஸத்வந்த் சிங்கும் அவ்வண்ணமே, மாஜீ... முஜே மாஃப் கீஜியே...!
என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டே அந்த மாபாதகத்தைச் செய்தான்.
‘தாள் கண்டார் தாளே கண்டார்' என்பதற்கிசைய, தாமரை போன்ற ராஜீவ்காந்தியின் தாளைப் பணிந்து வணங்கி, தானும் அழிந்து, அந்தத் தலைவனையும் கொன்றாள் அந்தத் தாடகை!
கோட்ஸேயும் ஸத்வந்த்சிங்கும் இந்தப் பெயரிலாப் பேயும் மனிதர்கள்தானே? தாயின் பாசத்தை அனுபவித்து, உடன் பிறந்தாரின் உற்றாரின் நட்பையெல்லாம் அனுபவித்து வளர்ந்த நம்மைப் போன்ற மனிதர்கள்தானே? எனினும் இவர்கள் சைத்தானுக்கு சுவீகாரம் போய்விட்டவர்கள். அப்படிப் போனவர்களுக்கும் ஓர் இதயம் இருக்கும்தானே? தன் அழிவில் பிறர் அழிவைத் தேடும் தலைவிதிக்கு இரையாகிவிட்ட அதற்கும், அந்த சைத்தானுக்கும் ஒரு மனித இதயம்தானே இருந்திருக்கும்! அது தான் வணங்குகிறது; மன்னிப்புக் கேட்டு மன்றாடுகிறது; தாள் பணிந்து தலை சிதறுகிறது!
தெரிந்து செய்த இந்த மூர்க்கர்களைத் தெய்வம்கூட மன்னிக்காது. இவர்கள்பால் ஏது காரணம் பற்றியோ மனம் சாய்ந்து, மன்னிப்புக் கோருபவர்களைக் கூடத் தெய்வம் மன்னிக்காது. தண்டிக்கும்!
மன்னிக்கட்டும், தண்டிக்கட்டும், எக்கேடும் கெடட்டும்... இது ஏன் இப்படி நடக்கிறது? எல்லாவற்றுக்கும் எதிரிகளையே குற்றம்சாட்டி, அவர்களின் நடவடிக்கைகளைப் பட்டியல் போட்டுக் கொண்டிருப்பது மட்டும் பயன் தராது.
இந்தச் சைத்தான்கள் தமது சாகசங்களை நிறைவேற்றிக் கொண்டு அடிக்கடி கெக்கலி கொட்டிச் சிரிப்பதற்கு நம் தரப்பில் இருந்து நாம்