Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbe Vaa!
Anbe Vaa!
Anbe Vaa!
Ebook96 pages41 minutes

Anbe Vaa!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115703997
Anbe Vaa!

Read more from Lakshmi Rajarathnam

Related to Anbe Vaa!

Related ebooks

Reviews for Anbe Vaa!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbe Vaa! - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    அன்பே வா!

    Anbe Vaa!

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அலாரம் அடித்தது. மணி ஐந்து. புரண்டு படுத்தாள் புவனி. தூக்கம் கண்களை இழுத்தது. உள்ளுணர்வு எழ வேண்டும் என்று தூக்கத்தைக் கலைத்தது. கணவன் வீடு. கல்யாணச் சடங்குகள் முடிந்து தேன் நிலவு என்று போய் விட்டு முந்தைய நாள் இரவு தான் திரும்பி இருந்தார்கள். இன்று அலுவலகம் போக வேண்டும். தனிக் குடித்தனம். மாமனார், மாமியார் இவர்கள் தேனிலவு கிளம்பியதுமே கிராமத்திற்கு கிளம்பி விட்டார்கள்.

    பெண் பார்க்க வந்த பொழுதே கிராம வாழ்க்கைதான் தங்கள் விருப்பம் என்று கூறி விட்டார்கள். அம்மா வீடு உள்ளூர்தான். ஊர் திரும்பிய பொழுதே அம்மா வீட்டில் போய் இறங்கிச் சீராட ஆசை. அம்மா வீடென்றால் இப்படி அலாரம் வைத்து ஐந்து மணிக்கு எழ வேண்டிய அவசியம் இல்லை. சோம்பல் முறித்தபடியே நிதானமாக தூக்கம் கலையாத கண்களுடன் ஏழு மணிக்கு எழலாம்.

    அம்மா கையில் காப்பியைக் கொண்டு வந்து கொடுப்பாள். நேரமாகி விட்டால் டிபனைக் கூட வாயில் ஊட்டி விடுவாள். அத்தனை செல்லம். பொறுப்புகள் இல்லாத சுதந்திரம். கணவன் உறவு கொஞ்சம் சுதந்திரத்தை பாதிக்கவே செய்தது. அவன் சொன்னபடி கேட்க வேண்டி இருந்தது. அது இன்பமான கட்டுப்பாடுதான். சொல்லில் அழுத்தம்.

    நீண்ட முடி... காதோர முடிக் கற்றைகளை சேர்த்து நடுவில் இணைத்து விதவிதமான கிளிப்களைப் பொருத்துவாள். அவள் ஆசையை உணர்ந்த அப்பா கற்கள் பதித்த தங்க கிளிப்புகளை வாங்கிக் கொடுத்து இருந்தார். கொடைக்கானலில் அவள் முடியைப் பரத்தியபடி வெளியே கிளம்பினாள்,

    புவனி, இதென்ன அலங்காரம்? நேற்றே கிளம்பும்பொழுதே சொல்ல நினைச்சேன். எல்லாரும் நம்மை வழியனுப்ப வந்தாங்க. சொல்லலே

    என்ன சொல்லப் போகிறான்?

    "நீண்ட முடி இருக்கு. பின்னிக்கோ. பூ வாங்கித் தரேன். எனக்கு அதுதான் பிடிக்கும். என் தங்கச்சிங்க, அண்ணி எல்லாம் தலையை விரிச்சுப் போடவே மாட்டாங்க. குடும்பத்துக்கு ஆகாது.

    இது என்ன கட்டுப்பாடு? அவள் வீட்டில் இப்படி எல்லாம் கட்டுப்பாடு கிடையாது. அவள் ஏகாந்த ராணி. மாமியார் இன்னும் கட்டுப்பாடுகளை விதிப்பாளோ?

    இன்னும் ஏதாவது சொல்ல இருக்கா?

    அவன் சிரித்து விட்டான். அப்பப்ப கிளாஸ் எடுப்பேன். மிடி, கிடி எல்லாம் கூடாது. சுரிதார் போட்டுக்க. துப்பட்டாவை நாகரிமாக கழுத்தை சுற்றி போடாதே. தோளை சுத்தி போடணும். ராத்திரிதான் மேக்ஸி போடணும்.

    தேனிலவு வந்த இடத்தில் அவனுடைய அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ள விரும்பவில்லை. இவன் முரடனில்லை. பூ மாதிரி கையாளும் அணுகுமுறை அவளுக்கு பிடித்திருந்தது. பூவை மெல்ல வருடிச் செல்லும் தென்றல் சில சமயங்களில் சற்றே வீசிச் செல்லும்பொழுது வேகம் காட்டுவதில்லையா? மென்மையான அரவணைப்பு.

    என் கண்மணிக்குத் தூக்கம் வந்திருச்சா? என்று கேட்ட பின்பே தன் நெஞ்சில் பூமாலையாய் சரித்துக் கொள்ளும் இதம்.

    புவனி, நீ பிறந்த வீட்ல செல்லப் பெண். புகுந்த வீட்டுக்கு மருமக. பொறுப்புக்களை சுமக்க வேண்டியவ. மூக்கு மேல துருத்திக் கொண்டு நிற்கும் கோபத்தை விட்டு விடணும். உனக்கு ஒண்ணு பிடிச்சிருக்கும். மாப்பிள்ளைக்குப் பிடிக்காது. விட்டுக் கொடுத்து வாழப் பழகணும்.

    அம்மா விட்டுக் கொடுத்து சுருதி கலையாத நாதமாக வாழ்க்கையை இதமான வீணையாக மீட்டிக்கொண்டு போயிருக்கிறாள். மகளும் தன்னைப் போலவே குணவதியாக வாழ்ந்து நல்ல பெயரெடுக்க வேண்டும் என்று தாயார்க்காரி விரும்புவதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?

    மூன்று நாத்தனார்கள், இரண்டு மைத்துனர்கள் என்று கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவள் அவள் அம்மா. புவனியின் அப்பா சோமசுந்தரத்திற்கும் வெளியூரில் வேலை, சோமசுந்தரம் லீவில் வந்தாலும் மனைவியுடன் தனியாக இருக்க முடியாது. மைத்துனர்கள் குடும்பத்துடன் ஒட்டாத விருந்தினர்கள்.

    சோமுவிற்கு திருச்சியில் வேலை. லீவ் போட்டுக்கொண்டோ அலுவலக வேலையாகவோ சென்னைக்கு வந்து விடுவார். மனைவி சாந்தாவுடன் சினிமாவிற்கோ, பீச்சிற்கோ போகும் ஆசை உண்டு.

    சாந்தா, பீச்சுக்கு போகலாமா?

    தலையை ஆட்டி சம்மதம் தெரிவிப்பாள். கணவனின் ரகசிய ஸ்பரிசத்திற்கு ஏங்குவாள். அந்த வீட்டில் அவர்களுக்கு என்று தனியறை எதுவும் கிடைக்கவில்லை. திருமணத்திற்கு நிற்கும் மூன்று பெண்கள்... இரண்டு பையன்கள்... அப்பா, அம்மா... தாத்தா இல்லாத பாட்டி கூடத்தில் ஓரமாக சதா படுக்கை.

    பாட்டிக்கு எண்பத்தைந்து வயசு. காதுகளும், கண்களும் பழுதுபடவில்லை.

    ஏண்டி சாந்தா, உன் புருஷன் சினிமாவுக்கு கூப்பிடறானா?

    ஆமாம், பாட்டி

    மாதங்கி, இந்திரா, கனகா இங்கே வாங்கடி. சோமுவும், சாந்தாவும் பீச்சுக்கு போறாங்களாம். நீங்களும் போங்கடி. வரச்சே உப்பும் காரமா பஜ்ஜி, போண்டா வாங்கிண்டு வாங்கோ. வாய் நமநமங்கறது. எனக்குன்னு தனியா அஞ்சஞ்சு வாங்கிக்கோங்க.

    இளம் தம்பதிகளின் ஆசை கண்களிலேயே தங்கிவிடும்.

    சாந்தாவுக்கும் சோமுவுக்கும் வயசு வித்தியாசம் அதிகம்தான். சாந்தாவின் உடன் பிறந்தவர்கள் மூன்றும் பெண்கள். சாந்தாவின் ஜாதகம் தோஷம் நிரம்பி வழிய, சோமுவின் ஜாதகத்துடன் பொருந்த கல்யாணம் நடந்தேறியது. பெண் வீட்டை விட்டுப் போனால் போதும் என்பது சாந்தாவின் பிறந்த வீட்டு எதிர்பார்ப்பு. மூன்று பெண்கள் ஆயிற்றே?

    சோமுவிற்கே வயது அதிகம். அதிலிருந்து படிப்படியாகக் குறைந்து வரிசை கட்டி நின்றார்கள் சோமுவின் தங்கைகள் முதிர்கன்னிகள். மாதங்கி வேலைக்குப் போகவில்லை. வீட்டிலேயே தையல் தைத்துக் கொடுத்து சம்பாதித்தாள். அதனால் வீடு ஜே.ஜே. என்று இருக்கும். தைக்கக் கொடுக்க வருபவர்கள் உட்கார்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1