Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abiyum Azhaganum
Abiyum Azhaganum
Abiyum Azhaganum
Ebook142 pages1 hour

Abiyum Azhaganum

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115703993
Abiyum Azhaganum

Read more from Lakshmi Rajarathnam

Related to Abiyum Azhaganum

Related ebooks

Reviews for Abiyum Azhaganum

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abiyum Azhaganum - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    அபியும் அழகனும்

    Abiyum Azhaganum

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    சமையலை மேஜை மீது வைத்தாள் ஜெயம்மா. பதமாக ஹாட்பேக்கில் வைக்கப்பட்டிருந்தன. மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் அபிராமி.

    அபி, சமையல் ரெடியா இருக்கு. அப்பாவை அழைத்து சாப்பாடு போடம்மா. எனக்கு ஷண்முகம் தாத்தா வீட்டுக்கு சமைக்கப் போகணும்மா என்று கூறிக்கொண்டே போனாள் ஜெயம்மா.

    நீங்க போங்க. நான் அப்பாவுக்கு சாப்பாடு போட்டுக்கறேன் என்று தடதடவென படி இறங்கி வந்தவள், ஹாட்பேக்கை திறந்து பார்க்கிறாள்.

    மொறு மொறுவென்று உருளைக்கிழங்கு பொரியல்.

    ஆன்ட்டி செம டேஸ்ட்ன்னு அபிராமி கத்தியது ஜெயம்மா காதில் விழத்தான் செய்தது.

    நிற்பதற்கு நேரமில்லாத ஓட்டம் ஷண்முகம் வயதானவர். அவரும் அவர் மனைவியும் மட்டும்தான். குழந்தை குட்டிகள்ன்னு உறவுகள் யாருமில்லை. காலையில் ஷண்முகத்தின் மனைவி வடிவழகம்மை கஞ்சி வைத்துக் கொண்டு விடுவாள். ஜெயம்மா பத்து மணிக்குப் போய் சமையல் செய்து வைத்து விடுவாள். இரவு சாப்பிட எட்டு சப்பாத்திகளையும் செய்து வைத்து விடுவாள். மதியம் மிச்சம் கூட்டு, சாம்பார், பொரியல் ஒன்று வைத்து சாப்பிடுவார்கள்.

    இன்று சற்று நேரமாகி விடவே அபிராமிக்கு நின்று பதில் சொல்லக்கூட நேரமில்லாத ஓட்டம். வீடு பெரிய வீடு. மூன்று கிரௌண்டின் நடுவே கட்டப்பட்ட வீடு. சுற்றிலும் வாழை, மா, பலா, கொய்யா, சப்போட்டா என்பதுடன் தென்னை மரங்களின் அணிவகுப்பு வேறு. பூச்செடிகள், கீரை, காய்கறி பாத்திகள் என்று செழித்துக் கிடந்தன.

    தண்ணீர் இல்லாக் காலத்தில் கூட இரண்டு போர் பம்ப் இறக்கி தண்ணீர் பாய்ச்சுவார் அபிராமியின் அப்பா யோகானக்.

    அப்பாடா வீட்டை விட்டு மெயின் ரோடு வரவே இத்தனை நேரமாச்சு என்று அலுத்தபடியே வந்தாள் ஜெயம்மா.

    சற்று நின்று மூச்சை இழுத்து விட்டவள், புடவைத் தலைப்பால் முகத்தை குங்குமம் அழியாமல் துடைத்துக் கொண்டாள். இந்த இரண்டு வீட்டு வருமானம்தான் அவள் குடும்பத்தை பசியில்லாமல் சாப்பிட உதவியது. அவள் மதியம் ஊறுகாய் போட்டு விற்றும் உபரி வருமானத்திற்கு வழி செய்து கொண்டாள்.

    இரண்டே பெண்கள். ஒருத்தி கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுடன் வாழ்கிறாள் என்ற பெயரே தவிர சுபிட்சம் இல்லாத வாழ்க்கை. அடிக்கடி கையேந்தியபடி அம்மாவிடம் வந்து நிற்பாள்.

    அடுத்தவள் மகாலட்சுமி. எவ்வளவோ கஷ்டப்பட்டு கல்லூரி வரை படிக்க வைத்தாள். தெரிந்தவர்களிடம் சொல்லி ஒரு வேலையையும் வாங்கிக் கொடுத்தாள். மஹாலட்சுமியை மஹா என்றுதான் கூப்பிடுவார்கள். அழகைக் கொடுத்த ஆண்டவன் அதிகமான ஆசையையும் கொடுத்து. விட்டான். சம்பளத்தில் பாதியை அழகுப் பொருட்களையும் ஆடைகளையும் வாங்கி சேர்த்துக் கொண்டாள்.

    இதெல்லாம் வேண்டாம் மஹா அம்மா ஜெயம்மா தடுத்தும் கேட்கவில்லை.

    இந்தக் காலத்து நாகரீகம் எதுவுமே உனக்குத் தெரியல்ல. பவுடர் பூசாம உன்னை மாதிரி மஞ்சளை பூசிண்டு போகச் சொல்றியா? மாரியம்மன் மாதிரி இருக்கும்.

    நாகரீகம் சோறு போடாது மஹா. விரலுக்குத் தக்க வீக்கம் வேணும்.

    அம்மாவை முறைத்து விட்டு கண்ணாடித் துணியில் சுரிதார் அணிந்து போனவள் எவனுடனோ ஓடிப் போனாள். யார் வீட்டுக்கும் ஜெயம்மா சமைக்கப் போகாமல் மூலையில் முடங்கிக் கிடந்தாள். கணவர் பிரகாசமும் ஒரு விபத்தில் காலை இழந்தவர். உட்கார்ந்தபடியே மனைவிக்கு வேலை செய்து தருவார். செயற்கை கால் பொருத்த வசதியில்லாத காரணத்தால் கக்கத்துக் கட்டைகளின் உதவியால் தேவைப்படும் பொழுது நடந்து கொண்டிருந்தார்.

    மகள் ஓடிப் போனதை தெரிந்ததும் தேடக் கூடப் போக முடியாத நிலையில் இன்னொரு பக்கம் கிடந்தார் வயிறு என்ற ஒன்று இருக்கிறதே... மெல்லத் தேறிய ஜெயம்மா அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக யோகானர் வீட்டிற்கு வந்தாள்.

    என்ன ஜெயம்மா நாலு நாளா காணோம். அபிராமிதான் சமைச்சா.

    அவர் பேசியதைக் கேளாமல் ஓவென்று கதறினாள்.

    என்னம்மா? என்னாச்சு?

    என்னத்த சொல்லுவேன்? பெண்ணைப் பெத்து வளர்த்தேன். அலங்காரப் பிரியையா நின்னவளை அடிச்சு வளர்த்திருந்தா இந்தக் கொடுமை நடந்திருக்காது. எம் பொண்ணு... பாவி அவ எம் பொண்ணே இல்லை. எவன் கூடவோ ஓடிப் போயிட்டா. அவன் ஏழையா, பணக்காரனானு தெரியாது. குலம், கோத்திரம், குடும்பம் பற்றி தெரியாது என்று கதறினார்.

    தவித்துப் போனார் யோகானர். மனத்திற்குள் மகள் அபிராமி விசுவரூபம் எடுத்தாள். அம்மா என்ற ஒருத்தி இருந்தே மஹா ஓடிப் போனாள்... தாயற்ற தன் மகள் அபிராமியை யார் வழி நடத்துவார்கள்? அந்தப் பொறுப்பு தன்னுடையது அல்லவா? நல்ல வேளை ஜெயம்மா இதைச் சொல்லும்பொழுது அபிராமி குளியலறையில் இருந்தாள்.

    ஜெயம்மா, நடந்தது நடந்து போச்சு. இனிமே நடக்க வேண்டியதைப் பாரம்மா. ரெண்டு பேரும் சேர்ந்து வந்து நமஸ்காரம் பண்ணினால் ஆசீர்வாதம் பண்ணி விட்டுடு. நம்ம கண்ணை நாமே குத்திக்கக் கூடாது. காலம் கெட்டுக் கிடக்கு. மஹாவைக் காணோம்னா போலீஸ்ல தகவல் தந்து தேடலாம். அவளே ஒருத்தனோட ஓடிப்போனா அது அவ விருப்பமா இல்ல ஆயிடுது. அதனால கவலைப்படாதே. அவ வருவா என்று சமாதானப்படுத்தினார்.

    அவளை சமாதானப்படுத்தினாரே தவிர அவருடைய மனம் குட்டையில் கல்லெறிந்த, கலங்கலாகக் குழம்பியது. தாயற்ற மகளைக் காப்பது பெரிய பொறுப்பு. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கல்யாணத்தைப் பண்ணிவிடுவதுதான் உத்தமம். பெண்ணைக் கட்டிக் காக்கும் பெரும் பொறுப்பைத் தனியாளாக சுமக்க இயலாது.

    ஜெயம்மா, அபிராமி குக்கர்ல சாதமும், பருப்பும் வச்சிருக்கா. அவ காலேஜுக்கு போகணும், எனக்கும் வெளியே வேலை இருக்குது. சீக்கிரமா ஏதாவது செய்து வை என்றார்.

    அவசரமாக சமையலை முடித்தாள் ஜெயம்மா. அடுத்த இரண்டு தினங்களில் யோகானந்த் சொன்ன மாதிரி மஹா கணவனுடன் வந்து நின்றாள். யோகானந்த் சொன்னது போல ஜெயம்மா மகளைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. மஹாவின் குணம் தெரிந்தவள் பெற்றவள். அவளின் பொறுப்பு தன் மீது விழும் என்று புரிந்து கொண்டவள், எப்ப நாங்க வேண்டாம்னு இவன் பின்னால ஓடினியோ, எங்களுக்கு நீயும் வேண்டாம். வீட்டுப் படி ஏரி வந்துட்டே. இப்ப நீ சுமங்கலி. இலையைப் போடறேன். வந்து சாப்பிட்டுவிட்டு தாம்பூலம் தரேன். வாங்கிட்டு போ.

    சர்க்கரையை இனிப்புக்கு பதிலாக வைத்து சாதம் போட்டாள். தனக்கு மருமகனாக வந்தவனின் பெயரை, குலம் கோத்திரத்தை வேலை பற்றி என்று எதுவுமே கேட்கவில்லை. ஒரு வெள்ளிக்கிழமை ஷண்முகத்தின் மனைவி அவளை சாப்பிடச் செய்ய புடவை வைத்துக் கொடுத்திருந்தாள். அதை வைத்து மகளிடம் கொடுத்தாள்.

    போயிட்டு வாங்கோ என்று அனுப்பி விட்டாள். இதை யோகானந்திடம் சொன்னாள். வசதியற்ற அந்த ஏழைப் பெண்மணியை மகளையும் மருமகனையும் வீட்டோடு வைத்துக் கொள் என்று எப்படிச் சொல்லுவார்? வயதான காலத்தில் உன் பெண் உதவுவாள் என்று எந்த. நம்பிக்கையை வைத்துச் சொல்ல முடியும்? அவரால் மௌனம் சாதிக்கத்தான் முடிந்தது.

    எத்தனை நாளுக்குத்தான் துயரத்தை வைத்துச் சுமக்க முடியும்? அதுவும் கால் ஊனமான கணவனால் வெளியே செல்ல முடியாது. வீட்டினுள் துயரத்தைச் சுமந்தால் அவன் மக்கி மங்கிப் போகமாட்டானா? மனைவியின் அருகில் வந்தமர்ந்தார்.

    ஜெயா, உனக்கு ஒன்னைச் சொல்ல விரும்பறேன். எத்தனை நாள் இப்படியே புலம்பிட்டு கிடக்கப் போறே?

    என்னால தாங்க முடியல்ல.

    "என்னாலயும்தான் தாங்க முடியல்ல. அதனால என்ன பண்ண முடியும்? என்னோட நிலையை நினைச்சுப் பார்த்தியா? நீயாவது யோகானந்த்

    Enjoying the preview?
    Page 1 of 1