Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalattuthe Vaanam!
Thalattuthe Vaanam!
Thalattuthe Vaanam!
Ebook108 pages49 minutes

Thalattuthe Vaanam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603986
Thalattuthe Vaanam!

Read more from Devibala

Related to Thalattuthe Vaanam!

Related ebooks

Reviews for Thalattuthe Vaanam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalattuthe Vaanam! - Devibala

    http://www.pustaka.co.in

    தாலாட்டுதே வானம்!

    Thalattuthe Vaanam!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    குணாவிடம் அந்த புகைப்படத்தைக் காட்டினாள் சங்கீதா!

    பாருடா புடிச்சிருக்கார்

    குணா பார்த்தான்.

    நல்லாத்தான் இருக்கா கண்ணு தான் கொஞ்சம் பூனைக்கண்ணு!

    போடா! அழகாத் தானே இருக்கா! குறை சொல்லணும்னு சொல்றீயா! எம்.காம் படிச்சிருக்கா! பேங்க்ல அதிகாரியா இருக்கா அம்மா இல்லை. வயசான அப்பாவும், தங்கச்சியும், கண்ணியமான குடும்பம்!

    சரிக்கா!

    ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்கு. நாளைக்கு நீ லீவு போடு. பெண் பார்த்துட்டு வந்துடலாம்!

    அக்கா நான் எம்.பி.ஏ. முடிச்சிட்டு கல்யாணம் செஞ்சுக்கக்கூடாதா?

    நீ எம்.பி.ஏ. முடிக்க ரெண்டு வருஷமாகும். வேலை பார்த்துட்டே படிக்கிறது கஷ்டம். இப்பவே மாசம் நாற்பது ஆயிரம் ரூபா சம்பாதிக்கறே! வயசும் 26 ஆச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லது குணா.

    அத்தான் செல்வம் உள்ளே அழைத்தார்.

    என்னங்க நீங்களும் தான் எடுத்துச் சொல்லுங்களேன்.

    அக்கா நீ பேசியே எடுபடல. நான் என்ன சொல்ல?

    இதப்பாருங்க! எங்களுக்கு அப்பா, அம்மா உயிரோட இல்ல. நாமதான் என் தம்பிக்கு அப்பா, அம்மா, அவனை நல்ல படியா வாழ வைக்கற கடமை நமக்கில்லயா?

    செய் சங்கீதா... நானா தடுக்கறேன்?

    குணா! நாளைக்கு நீ வர்றே... மறுத்தா, இனி உன் விவகாரத்துல நான் தலையிட மாட்டேன்.

    அத்தான்... இந்தம்மாவை பதினைஞ்சு வருஷமா எப்படி சமாளிக்கறீங்க? பிடிவாதம் நெனச்சது நடக்கணும்.

    புரியுதா என் சோகம்?

    சங்கீதா கணவனின் காதைத் திருக,

    இப்படித்தாண்டா! எது அவளுக்கு அகப்படுதோ அதைப்புடிச்சு திருகிடுவா

    அய்யோ போதுமே! என்ன பேசறீங்க?

    குணா சிரித்தபடி உள்ளே போனான்.

    அது பாசமான ஒரு குடும்பம்!

    சங்கீதாவின் கணவர் செல்வம் தனியார் கம்பெனியில் ஒரு அதிகாரி. சங்கீதா ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் டீச்சர் குணா, சங்கீதாவை விட ஏறத்தாழ பத்து வயது இளையவன். தம்பி என்றால் சங்கீதாவுக்கு உயிர். பத்து வயதில் ஒரு பெண் குழந்தை ஜீவா. அப்பா செல்லம். கை நிறைய பணம். கணவர் - மனைவி வருமானத்தில் அழகான ஒரு வீடு. ஒரு நல்ல கார். குடும்பத்துக்கு தேவையான வசதிகள், செல்வத்தின் விதவைத் தாயார். தனது 2-வது மகனுடன் கிராமத்தில் இருப்பார். இங்கு வரமாட்டார். இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை போய் பார்த்து கொள்வார்கள்.

    குணாவின் கல்யாணம் முடிந்து விட்டால், பெரிய பாரம் தீர்ந்து விடும் என்பது சங்கீதாவின் கருத்து.

    மறுநாள் அனைவரும் லீவு போட்டு விட்டு, காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.

    ஏற்கனவே தகவல் கொடுத்து விட்டதால், அந்த குடும்பமும் தயாராக இருந்தது.

    அப்பா விசுவநாதன் வாசலுக்கு வந்து வரவேற்றார்.

    உமா! வாம்மா!

    உமா வெளியே வந்து இயல்பாக வணங்கினாள். பெண் பார்க்க வருகிறார்கள் என்று எந்த ஒரு பாசாங்கும் இல்லை. சுடிதார் அணிந்து கூந்தலை இயல்பாக பிரித்து விட்டிருந்தாள். ஒப்பனை எதுவும் இல்லை

    கூடவே கல்லூரியில் கடைசி வருஷம் படிக்கும் அவள் தங்கை ஆர்த்தி இருந்தாள்.

    வேறு பெண் இல்லாததால் உமாவே அவர்களை உபசரித்து குடிக்கத் தண்ணீர் தந்து உட்கார்ந்தாள்.

    சங்கீதாவுக்கு அவளை பிடித்து விட்டது.

    மத்திய தரக்குடும்பம் தான்.

    அப்பா டவுனில் பாத்திரக்கடை வைத்திருப்பவர், அதில் சம்பாதித்துக் கட்டிய ஒரு சின்ன வீடு.

    கலகலப்பாக பேச, இரு குடும்பத்துக்கும் பிடித்து விட்டது.

    என் தங்கச்சி ஆர்த்திக்கு ஒரு கல்யாணம் நடக்கற வரைக்கும் பண ரீதியா, உடல் ரீதியா இந்த குடும்பத்தை தான் ஆதரிக்க வேண்டியிருக்கும். ஏன்னா எங்களுக்கு அம்மா இல்லை.

    உமா வெளிப்படையாகப் பேசினாள்.

    தடையே இல்லை உமா! உன் சம்பளத்தை முழுசா உங்கப்பாகிட்ட குடுத்துடு

    இல்லீங்க. அவ குடும்ப பாசத்துல சொல்றா. நான் வாங்க மாட்டேன்.

    அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை உமா. நீ தனியா குணாகிட்ட பேசணுமா?

    உமா சிரித்தாள்.

    போடா! போய் பேசு!

    இருவரும் உள்ளே வந்தார்கள்.

    உமா சிரித்தாள்.

    நான் சுதந்திரமான பொண்ணு மிஸ்டர் குணா!

    இதுக்கு உள் அர்த்தம்?

    அம்மா இல்லாம நானே குடும்பத்தை நிர்வாகம் பண்ணின காரணமா முடிவுகளை சுதந்திரமா எடுப்பேன்.

    என்ன சொல்றீங்க? எங்க வீட்டுக்கு நீங்க வந்தா, நிர்வாகம் உங்க கைக்கு வரணும்னு சொல்றிங்களா?

    அய்யோ அதில்லை உங்கக்கா நடத்தர குடும்பம், அது எப்படி என் கைக்கு வரும்?

    பின்னா?

    என்னை விட நான் எடுக்கற முடிவுக்கு சுதந்திரம் தரணும்! அதுக்காக குடும்பத்தோட இணைஞ்சு நிக்க மாட்டேன்னு நான் சொல்லலை.

    இதப்பாருங்க அடுத்தவங்க சுதந்திரத்தை பறிச்சு எங்க வீட்ல யாருக்கும் பழக்கமில்லை அம்மா, அப்பா இல்லாத காரணமா, அக்கா, அத்தான் தான் எனக்கு எல்லாமே. அதை நீங்களும் மனசுல வச்சுக்கணும்!

    நிச்சயமா குணா

    "அவ்வளவு தான். மற்றபடி எங்க குடும்பம் ஆனந்தமான குடும்பம். உள்ளே

    Enjoying the preview?
    Page 1 of 1