Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aaniver
Aaniver
Aaniver
Ebook130 pages47 minutes

Aaniver

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603987
Aaniver

Read more from Devibala

Related to Aaniver

Related ebooks

Reviews for Aaniver

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aaniver - Devibala

    http://www.pustaka.co.in

    ஆணிவேர்!

    Aaniver!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    தலைப் பொங்கல் ராகினிக்கு! பட்டுச் சேலையும், மாப்பிளைக்கு ட்ரஸ்ஸும் வாங்கணும் சத்யா!

    ம் வாங்கிட்டு வந்துரு!

    இன்னிக்கு உனக்கு லீவுதானே? நீயும் வாயேன்!

    இல்லைம்மா! நான் வீட்ல இருக்கேன். நீ போயிட்டு வா

    எதுக்குமே வரமாட்டேன்னா எப்படி சத்யா?

    அம்மா எனக்கு இதுல எல்லாம் ஆர்வம் இல்லை. அந்தக் கட்டங்களை நான் கடந்தாச்சு! நீ போயிட்டுவா!

    தம்பி கிரி அப்போதுதான் எழுந்து பல் துலக்க ஆரம்பித்தான்.

    காலை பத்துமணி!

    கிரி! நீ என்னோட கடைக்கு வர்றியா?

    என்ன கடை?

    ஜவுளிக்கடைடா!

    வேற வேலையில்லை! நீ போயிட்டுவா!

    ஏண்டா யாருமே ஒத்துழைப்பு தர மாட்டீங்களா! எனக்கு வயசாகுது! முடியலை! எல்லாத்துக்கும் தனியா போயி, தனியா வரணுமா?

    சத்யா அருகில் வந்தாள்.

    என்னிக்கு கிரி துணிக்கடைக்கு வந்திருக்கான்?

    சரி! நீ வா!

    ஏன்மா தொந்தரவு பண்றே? ஆளை விடேன்!

    இந்த வீட்டுப் பொண்ணு ராகினி! தலை பொங்கல்னு வந்தாச்சு! செய்யலைனா நல்லா இருக்குமா? ட்ரஸ், பொங்கல் பாத்திரம் எல்லாம் வாங்கிக் கொடுக்கலைனா எப்படி?

    நான் இருக்க வேண்டாம்னு சொன்னேனா? உனக்குனு தனியா க்ரெடிட் கார்ட், உன் கணக்குல பணம், அதுக்கு ஏடிஎம் கார்ட் - தவிர கைல ரொக்கம்னு எல்லாம் தந்து வச்சிருக்கேன்! இதுக்கு மேல என்னம்மா செய்ய முடியும்?

    நீ செய்யலைனு சொல்லலைமா ஆனா எனக்கு வயசாகுது! ஆள் பலம் இல்லை! தனியா வெளிய போக பயம்மா இருக்கு! தலைசுத்தி நான் விழுந்தாக் கூட இருக்கற பணத்தை அடிச்சுக்கிட்டு எல்லாரும் போவாங்க

    சத்யா நிமிர்ந்து பார்த்தாள்!

    அம்மாவை பார்க்க பாவமாக இருந்தது!

    "நிஜம்தான்! இந்த அறுபத்தி இரண்டு வயதிலும் குடும்ப நிர்வாகம் அம்மாதான்! சர்க்கரை, உப்பு என சகல நோய்களும் உண்டு! அப்படி இருந்தும் எதையும் பொருட்படுத்தாமல் ஓடும் அம்மா! எதற்குமே முகம் சுருக்குவதில்லை! வீட்டில் சமையலில் தொடங்கி சகலமும் அம்மாதான்!

    அப்பா இறந்து 15 வருடங்களுக்கு மேலாகி விட்டது! குடும்பத்தை நடத்த அம்மா பட்டபாடும், செய்த தியாகங்களும் கொஞ்சமில்லை!

    சத்யா அருகில் வந்தாள்!

    சரி வா போகலாம்!

    அம்மா முகத்தில் சந்தோஷம் பூத்தது!

    ரொம்ப நேரமாகுமா?

    இப்பவே பத்தரை! கடைக்குப் போய்ச்சேர பதினொரு மணி கடந்துடும்! சாயங்காலம் ஆயிரும் சத்யா!

    சரி ஆகட்டும்! கிரி! உனக்கு என்னடா?

    நான் வெளில பாத்துக்கறேன்னே!

    சரிம்மா! மத்யானம் ஓட்டல்ல சாப்பிடலாம்! ட்ரஸ் மாத்திட்டு புறப்படு!

    ஜவுளிக் கடைக்கு வந்து விட்டார்கள்!

    ராகினிக்கு பட்டுப் புடவையா?

    ஆமாம்மா!

    என்ன பட்ஜெட்?

    அதை நீயே முடிவு செய் சத்யா!

    தலைப் பொங்கல்! நல்லாவே செய்யணும்! ஏழாயிரம் ரூபாய் வரைக்கும் போகலாம்!

    ராகினிக்கு ஏழாயிரத்தில் பட்டுச் சேலை! அவன் கணவன் புதுமாப்பிள்ளை சேகருக்கு பட்டு வேட்டி, ரெடிமேட் சட்டை இரண்டும் வாங்கினார்கள். தம்பி கிரிக்கும் சட்டை வாங்கிக் கொண்டாள்!

    சத்யா! உனக்கும் பட்டு புடவை?

    வேண்டாம்மா! நான் பண்டிகைக்கு புது ட்ரஸ் போடறதை விட்டு அஞ்சு வருஷமாச்சு!

    அதுதாண்டி கஷ்டமா இருக்கு! உனக்கு மட்டும் வயசு ஆயிருச்சா?

    அதுக்குத்தான் நான் கடைக்கு வரலைனு சொல்றேன். இந்த மாதிரி நீ ஏதாவது ஆரம்பிப்பே! உனக்கு வேணும்னா வாங்கிக்கோ!

    ரொம்ப முக்கியம்! வாழ வேண்டிய நீயே வேண்டாம்னு சொல்லும் போது, போகற கட்டை நான் எனக்கு எதுக்குடி புதுசு?

    அப்ப பேசாம வா!

    வெளியே வந்தார்கள்!

    அவளுக்கு வேண்டிய பாத்திரங்கள், இனிப்புகள், பழங்கள் என எல்லாம் வாங்கிக் கொண்டார்கள்!

    ஓட்டலில் போய் சாப்பிட்டார்கள்.

    வேற ஏதாவது வாங்கணுமா!

    இல்லைம்மா!

    வீட்டுக்குப் போகலாம்!

    சாலையை கடக்கும் போது கூடவே ஒரு பெண் வர, அவள் கையை பிடித்திருந்த மூன்று வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓட, பைக் ஒன்று ஏறத்தாழ மோதும் நிலையில் வர, சத்யா பாய்ந்து பிடித்து விட்டாள்!

    ஒரு நொடி தாமதமாகியிருந்தால், குழந்தை அடிபட்டிருக்கும்! போக்குவரத்து ஸ்தம்பிக்க, சத்யா குழந்தையோடு ஓரமாக வர, அதன் அம்மா ஓடி வந்து அடிக்கக் கை ஓங்க,

    இருங்க! எதுக்குக் குழந்தையை அடிக்கறீங்க?

    கையை விட்டுட்டு ஓடறா! நீங்க மட்டும் புடிச்சு இழுக்கலைனா, என்னாகியிருக்கும்?

    அந்தப் பெண்ணின் குரல் அழுகையும், ஆத்திரமுமாக வெடிக்க,

    இல்லீங்க! நாமதான் ஜாக்ரதையா இருக்கணும்! சாலையைக் கடக்கும் போது குழந்தையை இறுக்கிப் புடிக்கணும்! இல்லைனா, தூக்கிக்கணும்!

    ஒரு ஓரமாக வந்து நின்றார்கள்.

    ஸாரிங்க!

    எதுக்கு?

    இதுக்கு ஏதாவது ஒண்ணு ஆகியிருந்த, இவங்கப்பா என்னை அடிச்சே கொன்னிருப்பார்! இது மேல் அவருக்கு உசிரு!

    உங்களுக்கு இல்லையா?

    எனக்கும் தான்! அந்தப் பெண் அழுதாள்!

    அம்மா அருகில் வந்து சமாதானம் செய்தாள்!

    அழாதேம்மா! எதுவும் ஆகலையே?

    நான் உயிருள்ள வரைக்கும் உங்களை சத்யமா மறக்க மாட்டேன்!

    பாப்பா! உன் பேரென்ன!

    அனு!

    ஸ்விட் நேம்!

    சத்யா அதன் கன்னத்தைக் கிள்ள, அது திரும்ப அவள் கன்னத்தைக் கிள்ளியது

    ஏய்! என்னை நீ கிள்ளறியா?

    ஆன்ட்டி! நீங்க அழகா இருக்கீங்க! ஐ லவ் யூ!

    வாலு என்ன மாதிரி பேசறா?

    வாய் கிழியும்! ஒரு வயசுல பேச்சு வந்தாச்சு! இப்ப ஓவராயிருச்சு! ரொம்ப நன்றிங்க! நான் வர்றேன்! அனு! ஆன்ட்டிக்கு பை சொல்லு!

    அது சொல்லிவிட்டு அதன் அம்மாவுடன் போனது!

    சத்யா ஆட்டோவை அழைத்து ஏறிக் கொண்டார்கள்!

    வீட்டுக்கு வந்து விட்டார்கள்!

    காபி குடித்தார்கள்!

    சத்யா! இதை ராகினிக்குக் கொண்டு போய் குடுக்கணும்மே!

    குடுத்துடு!

    என்னடீ பேசற? நான் ஒரு விதவை! தலை பொங்கல் சீரை நான் கொண்டு வந்து தந்தா நல்லாருக்குமா! பெத்தவங்க கூட கூட்டுக் குடும்பமா வாழற பொண்ணு ராகினி!

    வேற என்ன செய்யச் சொல்றே என்னை?

    "நீயும் தம்பியும்

    Enjoying the preview?
    Page 1 of 1