Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaasalil Oru Vennila
Vaasalil Oru Vennila
Vaasalil Oru Vennila
Ebook87 pages37 minutes

Vaasalil Oru Vennila

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703980
Vaasalil Oru Vennila

Read more from Vidya Subramaniam

Related to Vaasalil Oru Vennila

Related ebooks

Reviews for Vaasalil Oru Vennila

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Excellent Vidhya madam I am keep on searching for your stories u dont know how crazy i am but someof uf your stories /Novels are not there in scribd i am a account holder and paying monthly and waiting for new novels

    All your novels are classic read twice also u are an assert to the tamil novels
    /

Book preview

Vaasalil Oru Vennila - Vidya Subramaniam

http://www.pustaka.co.in

வாசலில் ஒரு வெண்ணிலா

Vaasalil Oru Vennila

Author:

வித்யா சுப்ரமணியம்

Vidya Subramaniam

For more books

http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

1

போதுமே கெளதம்! ஒரு முழு ஃபேர் அண்ட்லவ்லி டியூபைத் தீர்த்தாச்சு. நீ பொண்ணு பார்க்க புறப்பட றதுக்குள்ள பொண்ணு கிழவியாய்டுவான்னு தோண்றது. சீக்கிரம், சீக்கிரம், எங்க மேக்கப் எல்லாம் கலையறதுக்குள்ள கிளம்பு! அக்கா அறைக்குள் எட்டிப்பார்த்து கிண்டலடிக்க, கெளதம் மீண்டும் ஒரு முறை தலையைச் சரி செய்து கொண்டு ஒரு வழியாய்க் கிளம்பினான்

அப்பாடா- மாப்பிள்ளை ரெடியாயிட்டாம்பா, ஏண்டா கிளம்பலாம் இல்ல?

இந்த ரேஞ்சுல நீ கண்ணாடி முன்னாடி நின்னா உன் பொண்டாட்டி. கோச்சுண்டு பொறந்தாத்துக்கு போய்டு வா.

பொம்மனாட்டி கெட்டா போ. பொண்ணு பாக்கறதுக்கே இப்படின்னா முகூர்த்தம் வெச்சுட்டா மூணு நா முன்னாடியே டிரெஸ் பண்ணிக்க ஆரம்பிச்சா தான், முகூர்த்தம் தப்பாம தாலி கட்ட முடியும் போலிருக்கு!

வீட்டினரும், உறவினார்களும் மாற்றி மாற்றி கிண்டலடிக்க, கெளதம் வெட்கச் சிரிப்போடு ‘புறப்படலாம்’ என்றான்.

ஏழெட்டு பேர் கொண்ட ஒரு சின்ன படை, இரண்டு மூன்று ஆட்டோக்களில் பெண் பார்க்கப் புறப்பட்டுச் சென்றது.

அப்பா இல்லாத குடும்பம் கௌதமின் தோளில் சுமையாய் அழுந்தியபோது அவனுக்கு இருபத்தி இரண்டு வயது. அவனுக்கு முன்னால் ஒரு அக்காவும் அண்ணாவும் இருந்தனர். அவனுக்குப் பின்னால் பிறந்த தங்கை மைதிலி கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருந்தாள். மூத்த பிள்ளை என்பதால் அண்ணன் கோபிக்கு, அப்பாவின் வேலை கிடைத்ததற்காக யாரும் சந்தோஷப்பட முடியவில்லை. வேலை கிடைத்த ஒரே ஆண்டில் கோபி காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டு மாமனார் வீட்டோடு ஐக்கியமாக... வீடு அவதியில் மூழ்கியது. ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சம் செலவுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தவன்... நாளா வட்டத்தில் அதுவும் கொடுப்பதில்லை. என்றான் பின் குடும்பம் தத்தளித்தது.

அப்பாவுக்கு வந்த பணத்தை எடுத்து செலவழிக்க வேண்டிய சூழலுக்கு குடும்பம் தள்ளப்பட்டது. அக்காவின் கல்யாண பணம் கரைவது கண்டு அம்மா கண்ணீரில் கரைந்தாள். கௌதம் ஒரு முடிவுக்கு வந்தான். வேலைக்குப் போவதென்று படிப்பைப் பாதியில் மூட்டை கட்டி விட்டு தீவிரமாய் வேலை தேடினான். அத்தனை பாங்க் பரீட்சையும் எழுதினான். இரண்டு வருஷ போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாய் வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது. அதற்குள் அப்பாவின் பணம் பாதி கரைந்திருந்தது. குடும்ப பாரம் முழுவதையும் தன் தோளில் ஏற்றுக் கொண்டான் கெளதம்.

அக்காவுக்கு தீவிரமாக வரன் பார்க்க ஆரம்பித்தான். வந்ததவர்கள் எல்லாம் சக்திக்கு மேல் சீர்செனத்தி கேட்க... ஏழெட்டு இடம் தட்டிப் போயிற்று. எதுவுமே கேட்காமல் -கல்யாணம் ஆவதெல்லாம் கதையில் மட்டும் தான் சாத்தியம் என்பது புரிந்தது. அடுத்த வரன் மற்றவர்களை விட பரவவாயில்லை என்று தோன்றினாலும் அவனுக்கு அதுவே சக்திக்கு மீறியதாகத்தான் இருந்தது. இருந்தாலும் அந்த இடத்தையும் விட்டுவிடக் கூடாதென்று அவர்கள் கேட்டதற்கு சம்மதித்து பேசி முடித்தான்.

அப்பா பணம் போக, மிச்சப் பணத்திற்கு கடன் வாங்கினான். அக்காவின் கல்யாணம் நல்லபடி முடித்ததும் தான் மூச்சுவிட்டான். அக்காவிற்காக வாங்கிய கல்யாணக் கடனை அடைத்து முடிப்பதற்குள் — சீமந்தம், பிள்ளைப்பேறு, ஆயுஷ்யஹோமம் என்று அடுத்தடுத்து செலவுகள் தாக்கியது. முப்பது வயசிலேயே மூப்பு வந்து விட்டாற்போலிருந்தது.

அக்காவுக்குப் பிறகு தங்கை பயமுறுத்தினாள். அக்கா கல்யாணத்திற்கே கோபி அண்ணா ஒரு பைசா கொடுத்து உதவவில்லை. நாலாவது மனுஷன் போல் ஐநூறு ரூபாயில் ஒரு சந்தனப் பேனா வாங்கிக் கொடுத்து, முதல் பந்தியில் சாப்பிட்டு, தாம்பூல்ப் பை வாங்கிக்கொண்டு போய்விடடான். எப்படியிருக்கிறாய் என்று அம்மாவைக்கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை. அவன் பெண்டாட்டி கடனுக்கு வந்தாற்போல் வந்து, பந்தலில் நின்றுவிட்டுப் போய்விட்டடான். இந்த லட்சணத்தில் அவனுக்கு வேட்டி- ஷர்ட், அவன் பெண்டாட்டிக்கு இரண்டாயிரம் ரூபாயில் பட்டுப் புடவை, அவன் குழந்தைக்கு நல்ல டிரஸ் என்று மூவாயிரம் ரூபாய்க்கு அவனுக்கு இவர்கள் செய்தார்கள். அவன் கொடுத்த

Enjoying the preview?
Page 1 of 1