Neethi Bothanai Kathaigal
()
About this ebook
சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Read more from Kanthalakshmi Chandramouli
Pongalo Pongal Rating: 0 out of 5 stars0 ratingsPetrorgale Kavaniyungal Part 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Neethi Bothanai Kathaigal
Related ebooks
Vallamai Thaaraayo? Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Kai Arugil Thendral Rating: 5 out of 5 stars5/5Anbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsParamarthaguru Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsNile Nadhi Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsMaya Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAthisaya Pen Rating: 0 out of 5 stars0 ratingsPappa Magizha 10 Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Nalladhaga Naalu Vaarthai Rating: 0 out of 5 stars0 ratingsHanumanin Kathaiye Rating: 0 out of 5 stars0 ratingsKadai Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal@Kaadhaligal.com Rating: 0 out of 5 stars0 ratingsIllatharasigalukku Thevaiyana Veettu Kurippugal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsPongal Parisu! Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Veedu Rating: 3 out of 5 stars3/5Vittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsKulire! Kulire! Kollathey! Rating: 5 out of 5 stars5/5Priyamanaval Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5The story of Arichandran in Tamil Rating: 5 out of 5 stars5/5Tholainthu Ponavargal Rating: 4 out of 5 stars4/5Oru Renduzhuthu Nadigaiyin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsMaapillai Maariyatchu Rating: 0 out of 5 stars0 ratingsMoodupani Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Dr. Marx Rating: 0 out of 5 stars0 ratingsManithan - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை Rating: 0 out of 5 stars0 ratingsSiraiyil Oru Siruthai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Neethi Bothanai Kathaigal
0 ratings0 reviews
Book preview
Neethi Bothanai Kathaigal - Kanthalakshmi Chandramouli
http://www.pustaka.co.in
நீதி போதனைக் கதைகள்
Neethi Bothanai Kathaigal
Author:
காந்தலக்ஷ்மி சந்திமெளலி
Kanthalakshmi Chandramouli
For more books
http://pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அழகுராணி
புஷ்பாவின் புத்தகங்கள்
கிரேக்கப் பேரரசனும் இந்திய மஹாராஜாவும்
ஓடிவிளையாடு பாப்பா
சிவப்பு விளக்கும் சீனர்களின் புதுவருடமும்
போட்டி
கோகியின் கனவு
கடன்
ஒட்டகமும் ஓட்டமானும்
ஆசிரியர் தினம்
ராஜுவின் பிடிவாதம்
மர்மப்பெண் கொடுத்த பொற்காசுகள்
சோம்பேறி வீரர்கள்
சுதந்திரப் போராட்டம்
உதவும் நண்பர்கள்
பாவை விளக்குகள்
பிள்ளையார்
பொய் பேசாதே!
மயிலும் அதன் கண்களும்
இதோ அமெரிக்கா!
குறைவற்ற வாழ்வு
வயலின் கம்பிகள்
அரசியின் முத்துமாலை
பரிசு
முன்னுரை
சிறுவயதிலிருந்தே சிறுவர்களை கூட்டமாக அழைத்து கதை சொல்வது, நடித்துக்காட்டுவது என் விளையாட்டுகளில் ஒன்றாக இருந்தது.
பல சமயங்களில் என் சுயகற்பனையில் உதித்த கதைகளை பாவத்தோடு, தமிழில் அழுத்தி உச்சரித்து கூறுவேன்.
கல்லூரி நாட்களில் எழுதிவந்தாலும் சிறுவர் இலக்கியம் என்னை கவர்ந்தது திருமணமாகி எனக்கு மகள் பிறந்த பிறகுதான்!
ஆங்கிலத்தில் பல பத்திரிக்கைகளில் சிறுவர்களுக்கான கதைகளை எழுதினாலும், தமிழில் எழுதுகையில் மனம் மகிழ்ச்சியடைகிறதை மறுக்க முடியாது.
இன்று பள்ளிகளில் சிறுவர் சிறுமியர்களுக்கு கதைகள் கூறுகையில் அவர்களோடு நானும் சிறு வயதினளாக ஆகிவிடுகிறேன்.
பல சிறுகதைகள், நாவல்கள் வயது வந்தோருக்கு எழுதினாலும் சிறுவர்களுக்கு எழுதுவதில் கிடைக்கும் ஆனந்தம் தனிதான்!
அவர்களுடைய உலகினுள் நுழைந்து, உலகில் நடக்கும் பலவற்றை அவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்கையில், நான் கற்றுக் கொள்வது ஏராளம்.
அப்படி அவர்களோடு பழகும் பொழுது கிடைத்த சில விஷயங்களை வைத்து பல சிறுகதைகளை எழுதியுள்ளேன்.
காந்தலட்சுமி சத்திரமளலி
அழகுராணி
காட்டில் ஒரு நாள், யானைக்குட்டி சுந்தரி கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சுந்தரியின் அம்மா சுந்தரி பள்ளிக்குக் கிளம்பு. எதற்கு எப்பொழுது பார்த்தாலும் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாய்?
என்று கேட்டாள்.
அம்மா, நம் காட்டில் நடக்கும் அழகுராணிப் போட்டியில் நானும் கலந்துகொள்ள ஆசைப்படுகிறேன்
என்றாள் சுந்தரி.
சாரி சுந்தரி, உங்க அப்பா இதற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டாங்க
என்றாள் அம்மா.
அம்மா, நான் செய்வதெல்லாம் அப்பாவிற்கு ஏன் சொல்றீங்க?
என்றாள் சுந்தரி.
ஒரு குடும்பம் என்றால் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படவேண்டும். நாம் மூவரும் இந்தக் காட்டில் ஒரு சிறந்த குடும்பமாக இருக்க வேண்டும்
என்றாள் அம்மா. ஆனால் சுந்தரி எதையும் கேட்கும் நிலையில் இல்லை.
'நான் முதலில் ஒல்லியாக வேண்டும், அழகுராணி என்றால் ஒல்லியாக உயரமாக இருக்கவேண்டும்' என்று எண்ணினாள். அதனால், தினமும் உடற்பயிற்சி மற்றும் உயரமாவதற்கு மரங்களைப் பற்றித் தொங்க ஆரம்பித்தாள்.
'சே, நான் கறுப்பாக சிலேட்டு வண்ணத்தில் இருக்கிறேன். அதனால் சருமத்தினை சிவப்பாக்கும் க்ரீம்களை உபயோகிக்க வேண்டும்' என்று கூறிக்கொண்டாள்.
சுந்தரி செய்வதையெல்லாம் கண்டு அம்மா மிகவும் வருத்தமடைந்தாள்.
மான்குட்டி மல்லிகா, குரங்குக்குட்டி குந்தவி கூட அழகுப் போட்டியில் பெயர் கொடுத்தனர். சுந்தரி தன் குண்டு உடம்புடன் உடற்பயிற்சி செய்வதைக் கேலியுடன் பார்த்தனர்.
சுந்தரி. நீ ரொம்பக் கறுப்பு. குண்டாக வேற இருக்கிறே. நீ எப்படி அழகுப் போட்டியில் கலந்து கொண்டாய்
என்று குந்தவி கிண்டலாகக் கேட்டாள்.
பாவம், நீ என்ன செய்தாலும் இளைக்கவும் முடியாது, சிவப்பாக ஆகவும் முடியாது
என்று கிண்டல் செய்தாள் மல்லிகா.
பாவம் சுந்தரி. அழுதுகொண்டே பள்ளிக்குச் செல்லாமல் காட்டில் நடக்கத் துவங்கினாள். அப்பொழுது வரிக்குதிரை வண்ணநிலாவைப் பார்த்தாள். ஆன்ட்டி, நான் நன்றாக இளைத்து இருக்கிறேனா?
என்று வினவினாள்.
நன்றாக இளைத்திருக்கிறாய். ஆனால் ஏதோ நோயில் படுத்து எழுந்தவள் போல் இருக்கிறாய். தோலெல்லாம் சுருங்கிவிட்டது
என்றாள் வண்ண நிலா.
காட்டில் உள்ள நதிக்கரையிலிருந்து நதிக்குள் தன் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கரடி கண்ணம்மா அதைப்பார்த்து சுந்தரிகுட்டி பள்ளிக்குச் செல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
என்றாள்.
கண்ணம்மா அத்தை, நான் சிவப்பாக மாறியிருக்கிறேனா?
என்று கேட்டாள்.
இது என்ன கேள்வி? நாம் பிறவியிலேயே கறுப்பு நிறம்தானே. எதற்காக சிவப்பாக வேண்டும்? போக கறுப்பே அழகு, காந்தலே ருசி என்று கூறும் பழமொழி தெரியுமா?
என்றாள்.
போங்க அத்தை, நான் கறுப்பாக, குண்டாக இருக்கிறேன். ஒல்லியாக, சிவப்பாக மாறி அழகுராணிப் போட்டியில் முதல் பரிசு வாங்கப் போகிறேன்
என்றாள் சுந்தரி.
போட்டியன்று அழகாக - அனைத்துப் பெண்களும், விதவிதமான உடையில், அழகாக கொண்டைகள் போட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு செல்லத் துவங்கினர்.
சுந்தரி சிறிது தூரம் நடந்தாள். அதற்குள் வியர்த்து மிகவும் சோர்ந்துவிட்டாள். உடனே ஆட்டோவில் ஏறி கரடி மாமா என்னை அழகுப் போட்டிக்கு அழைச்சிட்டு போயிடுங்க
என்று வியர்வையைத் துடைத்தபடி கூறினாள்.
மிகப்பெரிய திடல், மேடையில் பலர் நீதிபதியாக அமர்ந்திருந்தனர். சிங்கராஜாதான் முக்கிய விருந்தினர்.
ஒட்டகச்சிவிங்கி ஓமனா ஒவ்வொருவராக அழைக்கத் துவங்கினாள். மல்லிகா
என்று ஓமனா அழைத்தவுடன், ஓடிவந்து அழகு நடை நடந்து, பாட்டு, நடனம் எல்லாம் செய்தாள் மல்லிகா.
அடுத்துவந்த கரடிக்குட்டி கமலா தேனினும்