Kalyana Valaiyosai
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Kaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Kaanikkai Rating: 5 out of 5 stars5/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Vizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Udaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Irumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsPottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5
Related to Kalyana Valaiyosai
Related ebooks
Parijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsKanna Unnai Thedugirean Rating: 0 out of 5 stars0 ratingsEnakkulle Nee Irukka Rating: 4 out of 5 stars4/5Kadai Thenkai Rating: 3 out of 5 stars3/5Kaadhal Kadivalam Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye Kaadhalenbathu… Rating: 0 out of 5 stars0 ratingsUn Perai Sollum Pothae Rating: 2 out of 5 stars2/5Naathanar! Rating: 3 out of 5 stars3/5Idhayathil Pootha Nila Rating: 0 out of 5 stars0 ratingsKannalaney Rating: 0 out of 5 stars0 ratingsDurga Rating: 0 out of 5 stars0 ratingsKowsalya! Rating: 0 out of 5 stars0 ratingsMaavilath Thoranam Rating: 5 out of 5 stars5/5Poorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsPanama... Pasama... Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Varam Rating: 5 out of 5 stars5/5Oru Sol Pothum Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsSu(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Kanmani Un Arugil Rating: 5 out of 5 stars5/5Uruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsVeettukku Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsMaanbumigu Maapillai Rating: 0 out of 5 stars0 ratingsThunaiyiruppaal Durga Rating: 0 out of 5 stars0 ratingsGayathri Manthram Rating: 4 out of 5 stars4/5Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kalyana Valaiyosai
0 ratings0 reviews
Book preview
Kalyana Valaiyosai - Devibala
http://www.pustaka.co.in
கல்யாண வலையோசை
Kalyana Valaiyosai
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
1
சஞ்சனா கண்களை விழித்தபோது காலை ஆறு மணி! வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்! நாலு மணிக்கு அலாரம் அடித்தது தெரியாமல் உறங்கி விட்டாள்!
நேற்று ஆபீஸ் முடிந்து வரும்போது இரவு எட்டரை மணி! குழந்தை நிஷாவுக்கு ஜூரம்! அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் ஊசி போட்டு, மருந்துகள் வாங்கிக் கொண்டு வரும்போது இரவு பத்து மணி!
கணவன் சபரிஷ் நைட் டியூட்டிக்கு புறப்பட்டுப் போய்விட்டான்!
மாமியார் மாலதி முனகிக் கொண்டேயிருந்தாள்!
'எல்லாருக்கும் சப்பாத்தி போட்டு, குருமா பண்ணி, இடுப்பு விட்டுப் போச்சு! உழைக்கற வயசா இது?'
இத்தனைக்கும் ஏதாவது ஒரு நாள்தான் அந்தம்மா சமையல் கட்டுக்கு வருவாள்! அதுவும் பாதிக்கு மேல வேலைகளை பாட்டி - மாமியாரின் அம்மா ஜெயம் செய்து விடுவார்கள்!
மற்றபடி காலை நாலுக்கு சஞ்னாவின் நாள் தொடங்கிவிடும்! எல்லா வேலைகளையும் முடித்து குழந்தையை ப்ளே ஸ்கூலில் விட்டுவிட்டு ஆபீஸுக்கு புறப்படுவாள்! மாலை திரும்ப ஏழு மணியாகிவிடும்! பிறகு இரவு உணவுக்கான ஆயத்தங்கள்! நடுவில் குழந்தை கவனிப்பு! இரவு படுக்கைக்கு வர பத்தரை மணியாகிவிடும்! எந்திர வாழ்க்கை!
நேற்று குழந்தை நிஷா அழுதுகொண்டேயிருந்தது! அதை உறங்க வைத்து சஞ்சனா உறங்க இரவு ஒரு மணியாகி விட்டது!
அதனால் அலாரம் அடித்தது தெரியவில்லை!
அவசரமாக எழுந்து உள்ளே வர, பாட்டி ஜெயம் சமையல்கட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பாட்டி! நீங்க எப்ப எழுந்தீங்க?
நாலுமணிக்கே எழுந்தாச்சு! டிபனும், சமையலும் ரெடியாயிட்டே இருக்கு! நீ நிதானமாக பல் தேச்சு, குளிச்சிட்டு வா!
என்னை எழுப்பக் கூடாதா பாட்டி! நீங்க கஷ்டப்படணுமா?
எதுக்குடி? குழந்தை கைவிடாம அழுதிருக்கும்! நான் பாத்துக்கறேன். போம்மா!
அதற்குள் மாமியார் மாலதி உள்ளே வந்து விட்டாள்.
அம்மா! உனக்கு பீபி, ஷுகர் எல்லாம் இருக்கு! நீ படுத்த படுக்கையாயிட்டா, என் பாடுதான் நரகம்! புரியுதா?
என்னடீ பேசற? அப்ப நீ எழுந்து செய்யணும். அவளும் மனுஷிதானே? உன் பொண்ணா இருந்தா இப்படி பேசுவியா?
மாலதி அம்மாவை முறைத்தாள்.
சஞ்சனா! நீ இன்னிக்கு லீவுதானே?
எதுக்கு அத்தே?
எதுக்கா? குழந்தைக்கு முடியல. ஜூரம் இன்னும் விடலை! நீ இல்லாம அது இருக்குமா? அப்புறமா எனக்குத்தான் அவஸ்தை!
இன்னிக்கு காலைல ஒன்பது மணிக்கு பட்ஜெட் மீட்டிங் அத்தே நான் லீவு போட முடியாது!
மூணு வயசுக் குழந்தைக்கு நீ அம்மாங்கற ஞாபகம் உனக்கு வேணும்! காவ்யாவோட வளைகாப்புக்கு நாள் குறிச்சாச்சு! வாங்க வேண்டிய பொருட்கள் நிறைய இருக்கு! நானும் அப்பாவும் கடை கண்ணிக்குப் போக வேண்டாமா? குழந்தையைப் பாத்துட்டு வீட்ல இருக்க முடியுமா?
பாட்டி குறுக்கே வந்தாள்!
சஞ்சனா! நீ புறப்படு! குழந்தையை நான் பாத்துக்கறேன்!
ஏம்மா! உன்னால முடியுமா?
இந்த வயசுல வீட்டு வேலைகளை நான் செஞ்சுகிட்டுத்தானே இருக்கேன்! வேலைக்குப் போற பொண்ணு அவ! கொண்டு வர்ற சம்பளம் மட்டும் வேணும்னா, அவளுக்கு ஒத்துழைப்பு தரத்தான் வேணும்! சஞ்சனா! நீ குளிக்கப் போ!
சரி பாட்டி!
சஞ்சனா உள்ளே போனதும், மாலதி பாட்டியிடம் வந்தாள்!
அவளுக்கு நான் மாமியார். அவ முன்னால் என்னை நீ மட்டம் தட்டினா, அவ எப்படி என்னை மதிப்பா? ஏற்கெனவே அவனைவிட அதிகம் சம்பாதிக்கற காரணமா, அவளுக்கு அகங்காரம் அதிகம்! இதுல நீயும் பேசினா, இந்த வீட்ல நான் செல்லாக் காசா ஆயிடுவேன்! நான் உனக்குப் பொண்ணுனு ஞாபகம் வச்சுக்கோ!
அடுத்த அரைமணியில் சபரிஷ் நைட் டியூட்டி முடிந்து வந்துவிட்டான்! பல் தேய்த்து காபிக்கு காத்திருக்க, சஞ்சனா காபியுடன் வந்தாள்.
குழந்தைக்கு எப்படி இருக்கு?
இப்ப தூங்கறா! நீங்க கொஞ்சம் பாத்துக்குங்க! நான் கிளம்பறேன்! பாவம் பாட்டிதான் எல்லாம் செஞ்சாங்க.
அவன் நைட் டியூட்டி பாத்துட்டு வந்து தூங்க வேண்டாமா? சபரிஷ்! அடுத்த வாரம் உன் தங்கை காவ்யாவுக்கு வளைகாப்பு!
சரிம்மா!
பட்டுப்புடவை வாங்கணும்! வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யணும்! அம்பது பேராவது சாப்பாட்டுக்கு இருப்பாங்க!
செஞ்சிடலாம்மா!
உங்கப்பா ரிடையர் ஆயாச்சு! எங்க கைல பணமில்லை! அவளுக்கு தங்க வளையல் போட ஆசை! பணமில்லை! எல்லாத்துக்கும் மத்தவங்க கைகளை நாங்க எதிர்பாக்க வேண்டியிருக்கு!
ஜாடை மாடையாக ஆரம்பித்தாள்!
சஞ்சனா அருகில் வந்தாள்!
அத்தே! நான் லோன் போட்டிருக்கேன்! இன்னிக்கு பணம் வந்துடும்! உங்ககிட்ட குடுத்துர்றேன். காவ்யாவை கூட்டிட்டுப் போய் வாங்கிக் குடுத்துடுங்க!
என்னது? பட்டுப்புடவை மட்டும்தானே?
இல்லை, வளையலும் வாங்கிக் குடுத்துடுங்க.
அதிகமாகுமே?
ரெண்டு வளையல் - நாப்பத்தி அஞ்சாயிரம் - பட்டுப்புடவை ஆறாயிரம் - மாப்ளைக்கு டிரெஸ் சாப்பாடு எல்லாம் சேர்த்து அறுபதாயிரம் வருது! எழுபதுக்கு பி.எஃப்.ல லோன் போட்டிருக்கேன்! வந்துடும்! வாங்கிடுங்க!
உள்ளே வந்தாள்!
பாட்டி அவள் தோளைப்பிடித்து நிறுத்தினாள்!
எதுக்குடி நீ இத்தனை கஷ்டப்படற? சம்பளத்துல பிடித்தம் போனா நீதானே கஷ்டப்படணும்? இத்தனை செஞ்சும், உன்னைப் புரிஞ்சுக்கறாளா அவ?
இருக்கட்டும் பாட்டி! காவ்யா இந்த வீட்ல பொறந்த பொண்ணு! அவளுக்குச் செய்ய வேண்டியது எங்க கடமைதானே பாட்டி? செலவைக் குறைக்கணும்னு நினைக்கறதை விட வரவைப் பெருக்கணும்னு சிந்திக்கறது உசத்தியில்லையா? வாழ்க்கைல எப்பயுமே ஒரு கமிட்மெண்ட் இருந்தாத்தானே பாட்டி வாழ்க்கை ருசிகரமா இருக்கும்
பாட்டி அவளை பிரமிப்புடன் பார்த்தாள்!
நன்றாக உழைக்க வேண்டும்!
முன்னுக்கு வரவேண்டும்! நாலு பேர் மெச்ச சமூகத்தில் வாழ வேண்டும்!
'வானமே எல்லை' என்பதுதான் இலக்கு!
இதுதான் சஞ்சனா!
சரியாக ஒன்பது அடித்தபோது ஆபீஸுக்குள் காலை வைத்துவிட்டாள்!
ஒரு நாள்கூடத் தாமதமாக வரமாட்டாள்.
என்ன பிரச்னை தலைக்கு மேல வெடித்தாலும் தாமதம் மட்டும் கூடவே கூடாது!
அதேபோல வேலையில கண்டிப்புடன் இருப்பாள். தவறுகளை மன்னிப்பாள். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் விடமாட்டாள்!
பொய் சொல்வது பிடிக்காது!
வாங்கும் சம்பளத்துக்கு நியாயமாக உழைக்க வேண்டும்!
முப்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் சஞ்சனா கம்பெனியில் இன்று ஒரு அதிகாரி!
இன்னும் உயரத் துடிக்கும் ஒரு உற்சாகமான பெண்!
அவள் கணவன் சபரிஷ் நேரெதிர்!
சோம்பேறி! உழைக்கவோ, கஷ்டப்படவோ பிடிக்காது!
இருப்பது போதும் என்று நினைப்பவன்!
அதனால் முப்பத்து மூன்று வயதில் சாதாரண சூப்பர்வைஸர். கையில் வாங்கும் சம்பளம் வெறும் பதினெட்டாயிரம்!
சஞ்சனாவின் சம்பளம் முப்பதாயிரம்.
சஞ்சனாவின் உழைப்பு இல்லாவிட்டால், அந்தக் குடும்பத்தில் எதுவும் கூடாது!
மாமனார் தேவராஜ் பென்ஷன் வாங்குபவர்!
அதில் சல்லிக்காசுகூட வீட்டுக்காகத் தரமாட்டார். மாமியார் மாலதி தர விடமாட்டாள்!
சஞ்சனாவுக்கு 12 மணிக்குள் பி.எஃப். லோன் செக் எழுபதாயிரம் கைக்கு வந்துவிட்டது!
காவ்யாவின் வளைகாப்பை தடபுடலாக நடத்தி விடலாம்!
போன் அடித்தது! எடுத்தாள்!
தங்கை வந்தனாவின் அழைப்பு!
அக்கா! அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. நான் இப்ப ஆட்டோல ஆஸ்பத்திரிக்கு போயிட்டு இருக்கேன்! பயம்மா இருக்குக்கா!
இதோ நான் வர்றேண்டி!
படபடப்புடன் புறப்பட்டாள் சஞ்சனா!
2
படபடப்புடன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாள் சஞ்சனா அதற்குள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அம்மா ஜானகியை எடுத்துப் போயிருந்தார்கள்!
வந்தனா இவளைப் பார்த்ததும் ஓடி வந்தாள்!
என்னடீ ஆச்சு?
ரெண்டு நாளாவே அம்மா சரியா இல்லை, சுருண்டு சுருண்டு படுக்கறாங்க! கால்ல வீக்கம் இருந்தது. இன்னிக்கு காலைல முகத்துல கூட கொஞ்சம் வீக்கம் இருந்ததுக்கா! தலைசுத்தல்னு சொன்னாங்க. ரெண்டு தடவை வாந்தி எடுத்தாங்க! கடைசியா மயக்கம் போட்டுட்டாங்க!
பத்து நிமிடங்கள் கழித்து டாக்டர் வெளியே வந்தார்.
எல்லா டெஸ்ட்டும் எடுக்கணும்மா! அட்மிட் பண்ணிடுங்க! பல்ஸ் சரியா இல்லை. வீக்கம் வரக் கூடாது! ஏற்கெனவே ட்ரீட்மெண்ட் போகுதா?
வந்தனா மெடிக்கல் ரிப்போர்ட்டுகளை தந்தாள்!
அதற்குள் தலைமை நர்ஸ் வந்தாள்!
உடனே பத்தாயிரம் ரூபாய் கட்டுங்கம்மா! இந்த மருந்துகளை வாங்கிட்டு வந்துடுங்க!
சஞ்சனா யாருக்கோ போன் செய்தாள்!
அதற்குள் இங்கே அம்மாவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க,
உடன் வேலை பார்க்கும் சுகுமார் வந்துவிட்டார்!
இந்தாங்க மேடம்! இதுல இருபதாயிரம் இருக்கு.
தேங்க்யூ ஸார்! லோன் செக் வந்தாச்சு! இதை டெபாஸிட் பண்ணிடுங்க! க்ளியர் ஆனதும் இந்த இருபதாயிரத்தைக் குடுத்துர்றேன்!
பணத்தைக் கொண்டுபோய் கட்டினாள்.
மருந்துகளை வாங்கி நர்ஸிடம் தந்தாள்!
ஒரு மணி நேரம் கழித்து டாக்டர் அழைக்க, இருவரும் உள்ளே போனார்கள்!
என்ன டாக்டர்?
கிட்னி ரெண்டுமே பழுதாயிடுச்சும்மா! ஒவர் பீபி, சர்க்கரை, கொலஸ்ட்ரால் எல்லாமே இருக்கு! நிறைய டென்ஷன் படுவாங்களா?
உண்டு டாக்டர்! இப்ப என்ன செய்யலாம்?
எங்க கண்ட்ரோல்ல நாலு நாள் இருக்கட்டும்! ஆனா டயாலிசிஸ் போகணும்! வேற வழியில்லை.
நிறைய செலவாகுமா?
வந்தனா கேட்க,
இப்ப வாரத்துக்கு ஒரு டயாலிசிஸ் போகலாம். போகப் போக கூடும். இதுவும் செலவுதான்! மாற்று சிறுநீரகம்னா லட்சங்கள்ல ஆகும்! சரியானது கிடைக்கணும்! மயக்கம் தெளிஞ்சதும் வார்டுக்கு மாத்திடலாம்மா! அட்மிஷன் ஃபார்மாலிட்டிகளை முடிச்சிடுங்க.
இருவரும் வெளியே வந்தார்கள்!
அக்கா! என்ன செய்யப் போறே?
தெரியலை! எந்தக் கேள்விக்கும் உடனே பதில் சொல்லிட முடியாது! நீ புறப்பட்டு இப்ப வீட்டுக்குப் போ! சொப்னா காலேஜ் முடிஞ்சு வந்துடுவா! அவளைத் தனியா விடக் கூடாது!
இங்கே நீ இருப்பியாக்கா?
வீட்ல குழந்தை வேற இருக்கு! நான் போயாகணும்! ஏதாவது ஏற்பாடு செய்யலாம்! நீ புறப்படு! நான் போன் பண்றேன்!
வந்தனா புறப்பட்டுப் போனாள்!
சஞ்சனா குடும்பத்துக்கு மூத்தவள்! கல்லூரிப் படிப்பை அவள் முடிக்கும்போது, அப்பா விபத்தில் இறந்தார்! அந்த அதிர்ச்சியில் அம்மா உடைந்து போனாள்!
சஞ்சனாவுக்கு உடனே வேலை கிடைத்துவிட்டது!
அடுத்தவள் வந்தனா பள்ளிக்கு மேல் தாண்டவில்லை. ஒரு கார்மெண்ட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து, அங்கு பாஸ்கர் என்பவனைக் காதலித்து கசமுசா ஆகி, அவசரமாக கல்யாணம் நடத்தி - அவன் எந்தத் தகுதியும் இல்லாதவன்! குடிகாரன்! அவளைத் துன்புறுத்தி, சந்தேகப்பட்டு... சஞ்சனா போராடி வந்தனாவை மீட்டுக் கொண்டு வந்தாள்.
விவாகரத்து ஆகவில்லை!
ஆனால் வந்தனா வாழாவெட்டி!
இப்போதும் குடிகார பாஸ்கரின் தொல்லை அவ்வப்போது உண்டு!
அடுத்த தங்கை சொப்னா கல்லூரி மாணவி!
குடும்பத்தை சஞ்சனா தாங்கியே ஆக வேண்டிய நிலை. கணவரும் இறந்து ஒரு மகளும் வாழாவெட்டி ஆன நிலையில் அம்மா ஜானகி நோயாளியே ஆகிவிட்டாள்!
இந்த நிலையில் சஞ்சனாவுக்குக் கல்யாணம் நடந்தது ஒரு பெரிய கதை!
நர்ஸ் அழைத்தாள்.
வார்டுக்கு மாத்தியாச்சும்மா! நீங்க வரலாம்!
சஞ்சனா உள்ளே வந்தாள்!
எனக்கு என்னடி சஞ்சனா?
நீ பதட்டப்பட்டா, எந்த நோயா இருந்தாலும் அதிகமாகும்!
எல்லா கஷ்டமும் உன் தலைல வந்து விடியுதேம்மா!
என்னம்மா பண்ண முடியும்? செஞ்சுதானே ஆகணும்? தப்பிச்சு ஓட முடியுமா? பிரச்னைகளுக்கு பயந்து இங்கே யாருமே ஓட முடியாதம்மா! அதை எதிர்கொள்ளத்தான் வேணும்!
நானும், வந்தனாவும் சேர்ந்து கொஞ்சம் ஊறுகாய், பொடி வகைகளைத் தயார் பண்ணி சம்பாதிச்சுக்கிட்டு இருந்தோம்! இப்ப அதுல மண்ணா?
நீ விடு! அவ பார்த்துப்பா!
ஆஸ்பத்திரிக்கு என்ன செலவாகும்?
தெரிஞ்சு நீ என்ன செய்யப் போறே?
ஏண்டி கோவப்படற? நான் கையாலாகாத அம்மாதான்! ஆனாலும் மனசு கெடந்து அடிச்சுக்குதே!
அம்மா! நான் கோவப்படலை. இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டா, உனக்கு பதட்டம் அதிகமாகும்! நோய் பெரிசாகும்! யாருக்குப் பிரச்னை? சமாளிக்கலாம்! செஞ்சுதான் ஆகணும்?
டாக்டர் வந்து பரிசோதித்தார்.
மறுபடியும் பீபி ஏறுது! அதிகம் பேச விடாதீங்க!
நேரம் மாலை ஐந்து மணி! போன் அடித்தது! அம்மா அட்மிட் ஆனதை கணவன் சபரிஷுக்குக் கூட சொல்லவில்லை.
அவன்தான்! சஞ்சனா! குழந்தையைச் சமாளிக்க முடியலை. அப்பா, அம்மா காவ்யாவைப் பாக்கப் போயிருக்காங்க! பாட்டி கஷ்டப்படறாங்க! நீ சீக்கிரம் வர்றியா?