Purusha Nila
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsVeezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsMann Bommai Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Nadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Paarkadal Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5
Related to Purusha Nila
Related ebooks
Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsAnantham Vilaiyadum Veedu Rating: 4 out of 5 stars4/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Poo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Sollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla...! Rating: 4 out of 5 stars4/5En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsTyagathin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsNettruvarai Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Inba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Jayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsTheertha Karaiyiniley Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsMandiyitten Madhana! Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5En Uyire Rating: 4 out of 5 stars4/5Oru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsSavithriyin Kathapaathiram Rating: 4 out of 5 stars4/5Irandu Pengal Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsMagarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Moondru Mudichu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Purusha Nila
0 ratings0 reviews
Book preview
Purusha Nila - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
புருஷ நிலா
Purusha Nila
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1
கல்யாணத்தை நிச்சயம் பண்ணி விடுவதென்ற முடிவுக்கு அப்பாவும் அம்மாவும் வந்தார்கள். அப்பாவின் முடிவு கேட்டதும் மற்றவர்களுக்கு சந்தோஷம். அப்பா மீராவை அழைத்துத் தன் முடிவுச் சொல்ல மீராவின் முகம் மாறியது.
பதினெட்டு வயதில் திடீரென்று தான் இப்படி திருமணத்திற்கு நிர்ப்பந்திக்கப்படுவோம் என்று மீரா கனவிலும் நினைக்கவில்லை. மொத்த குடும்பமும் அவளைச் சுற்றி நின்றிருந்தது. மாப்பிள்ளை சிவராம் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியர்! மீரா. அங்கேயே சொந்தமா வீடு வாசல்னு வசதியா இருக்கார். லட்ச லட்சமா சம்பளம். தவிர சைட் பிசினஸ். அது இதுன்னு மாச வருமானமே கோடியைத் தொடும்கறாங்க. கனவுல கூட இப்படி ஒரு வரனை நம்பாலே தேடிப் பிடிக்க முடியாது. அதிர்ஷ்ட வசமா கிடைச்ச அரைமணி ரெஸ்ட்ல சாடிலைட் சானல்ல உன்னோட பாட்டைக் கேட்டு, உன்னையும் பார்த்து ரொம்ப பிடிச்சுப்போய் உன்னைப் பத்தி விசாரிச்சு உன் சம்மதத்தை கேக்கச் சொல்லி ஆளனுப்பியிருக்கார்.
அவ்ளோதானே? சம்மதமில்லன்னு சொல்லிடுங்க.
மீரா தம்புராவை எடுத்து சுருதி சேர்க்க முனைந்தாள்.
அம்மா அவள் அருகில் வந்து அமர்ந்தாள். அதெப்படி மீரா....? அந்தப் பையனைக் கட்டிக்க ஏகப்பட்ட போட்டியாம். பொண்ணுங்க அவனை ஈ மாதிரி மொய்ச்சுக்கறாங்களாம். ஈக்களை விரட்டி விடவே நேரம் சரியார்க்காம் அவனுக்கு. அப்படியிருக்கச்சே ஏதோ டி.வியில ஒரு மணி நேரம் பாடின உங்கிட்ட மயங்கிப் போயிருக்கான். அவன்ங்கறது எவ்ளோ பெரிய விஷயம். நாங்கள்லாம் இங்க இருக்கற அவன் வீட்டுக்குப் போய் அவனோட அப்பா அம்மா தங்கை தம்பி எல்லாரையும் பார்த்து பேசிட்டோம். எங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நாமளா வரன் தேடறார்ந்தா இப்படி ஒரு இடம் தலைகீழா நின்னாலும் நமக்குக் கிடைக்காது. உன் நேரம் அதிர்ஷ்ட தேவன் வீடு தேடி வந்து கதவைத் தட்றான். உன்ன நல்ல இடத்துல கட்டிக் கொடுக்கத்தானே நாங்க பாடுபடறோம்? மகாராணி மாதிரி உன்னைத் தாங்கும் அந்த குடும்பம். இன்னும் இருபது தலைமுறைக்கு சம்பாதிச்சுட்டானாம் அந்தப் பையன். உன்னை தங்கத்துலயும் வைரத்துலயும் இழைக்க காத்துண்டிருக்கானாம்.
அம்மா ப்ளீஸ்....
மீரா கெஞ்சலோடு குறுக்கிட்டாள். என்னை விட்ருங்கோ எனக்கு வேற லட்சியமிருக்கு. கல்யாணம் பண்ணிக்க இன்னும் வயசு இருக்கு. சங்கீத உலகத்துல இப்பதான் தவழ ஆரம்பிச்சிருக்கேன் என்னைப் பத்தி நல்ல ரெவ்யூ எல்லாம் வர ஆரம்பிச்சிருக்கு. ஸ்டார் சிங்கரா வரணும், சங்கீதம் தான் இப்போதைங்கு என் மூச்சு. தவிர என் படிப்பை பாதில் நிறுத்திட்டு கழுத்துல சுருக்கு மாட்டிக்க எனக்கு இஷ்டமில்ல. அந்த சாஃப்ட்வேர் என்ஜினியர்கிட்ட சொல்லி அவனை மொய்க்கற ஈக்கள்லயே ஒண்ணப் பிடிச்சு தாலிகட்டச் சொல்லுங்க."
மீரா பிடிவாதமாகச் சொல்ல, அம்மா, என்ன செய்வது என்பதைப்போல அப்பாவைப் பார்த்தாள்.
நீ நகரு.
அப்பா அம்மாவை எழுப்பிவிட்டு அவள் அருகில் அமர்ந்தார். அவள் கேசத்தை நெற்றியிலிருந்து வருடியபடி கெஞ்சலாக பேச ஆரம்பித்தார்.
கல்யாணம் பண்ணிண்டு உன்னை யாராவது பாட வேண்டாம்னு சொன்னாளா? சொல்லப் போனா எங்களை விட அவா. உன்னை ரொம்பவே என்கரேஜ் பண்ணுவா. பண பலமும் இருக்கறதால ஈஸியா நீ முன்னுக்கு வந்து நம்பர் ஒன் இடத்தைப் பிடிச்சுடலாம். அதே மாதிரிதான் படிப்பும். மொத்தத்துல கல்யாணம் பண்ணிக்கறதால உன்னோட எந்த லட்சியத்துக்கும் ஆபத்து வந்துடாது. இதை நீ புரிஞ்சுக்கணும். என்னடா அமெரிக்கா போய்ட்டா எப்படி பாட்டுக் கத்துக்கறது யார் அங்க கத்துத் தருவாங்கன்னு யோசிக்க வேண்டாம். நமக்கு பஸ் மாதிரி அவாளுக்கு ஏரோப்பிளேன். சென்னை அவாளுக்கு கொல்லைப் பக்கம் மாதிரி. நீ நினைச்சப்போ இங்க வந்துட்டு போலாம். அல்லது உனக்காக ஒரு நல்ல குருவையே கூட அங்க வரவழிச்சு உன்னை மெருகேத்த பணபலம் அவாகிட்ட இருக்கு. மொத்தத்துல இது ஒரு நல்ல சான்ஸ். இதை மிஸ் பண்றது அவ்ளோ புத்திசாலித்தனமில்ல.
நீங்க சொல்றதெல்லாம் இப்ப கேக்க நல்லாதாம்பா இருக்கு. ஆனா, லைஃப்ங்கறது வேற. எனக்கு தெரிஞ்சு நிறைய ஆண்களுக்கு கல்யாண வாக்குறுதிகள் எல்லாம் அரசியல் வாக்குறுதி மாதிரிதான். நிறைவேத்தணும்னு அவசியமில்ல. புருஷன்ங்கற உறவு ஏற்பட்டதும் ஏன் நிறைவேத்தலன்னு எந்த பொண்ணும் கேட்டுடவும் முடியாது. இந்த மாதிரி வாக்குறுதிகளை நம்பி, கல்யாணத்துக்கப்புறம் ஏமாந்து தன் ஆசைகளையும் லட்சியங்களையும் அடி மனசுல புதைச்சுண்டு வளைய வர எத்தனையோ பேரை எனக்கும் தெரியும். ஸோ.... உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன் என்னை விட்டுருங்கோ.
த பார் மீரா.... கல்யாணத்துக்கப்புறம் ஷைன் பண்ற பெண்களே இல்லாத மாதிரியில்ல நீ பேசற?
அண்ணா மெல்லிய எரிச்சலோடு கேட்டான்.
மீரா அவனை அமைதியாகப் பார்த்தாள்.
ஆஹா நிறையப் பேர் இருக்காளே. உன் பெண்டாட்டியைக் கூடச் சொல்லலாம். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி அவ எவ்ளோ ஷைன் பண்ணினான்னு. ஒரு ஆர்ட் கேலரில் அவளோட பெயிண்டிங்ல மயங்கித் தானே நீ அவளைக் கல்யாணம் பண்ணிண்டதே. இப்ப நீ அவளை வரைய விடறயோ?
சுடச்சுட தங்கை வீசிய திராவகத்தில் சந்துருவின் முகம் விகாரமாயிற்று. அதை மறைக்க அவன் பட்டபாடு பயனின்றி போயிற்று.
என்ன மீரா நீ இப்படி சொல்ற? அவரா என்னை வரைய வேண்டாம்றார்? எனக்கே ஆர்வம் குறைஞ்சுடுத்து. அதுக்கு அவர் என்ன செய்வார் பாவம்!
புருஷனுக்கு பரிந்து கொண்டு வந்த மன்னியை லேசான கேலியோடு பார்த்தாள் மீரா.
போதுமே மன்னி. எனக்கு தெரியாதா நீங்கள்லாம் டிபிகல் இந்திய மனைவின்னு. அதனாலதான் சொல்றேன். அந்த மாதிரி என்னையும் மாத்திட வேண்டாம்னு.
இப்ப நீ என்ன தான் சொல்ற?
அம்மா பொறுமையைக் கைவிட்டு வெடித்தாள்.
இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்.
வேணும்னு நீ நினைக்கறபோது இப்படி ஒரு வரன் கிடைக்காது.
பரவால்ல அப்போ எது கிடைக்கறதோ அதையே சந்தோஷமா அக்ஸெப்ட் பண்ணிக்கறேன்.
எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு மீரா போனா போகட்டும்னு உங்கிட்ட ஒரு அபிப்ராயம் கேட்டா ரொம்பத்தான் பேசறே?
அண்ணா கத்த அப்பா அவனை அடக்கினார். அவளைப் பரிதாபமாகப் பார்த்தார்.
"எங்க மனசு அலைபாயறது மீரா. வாழ்க்கைங்கற கடல்ல எப்பவாவதுதான் அதிர்ஷ்டப் பெட்டி மிதந்து வரும். அதை எடுத்து உடனே படகுல போட்டுக்க நினைக்கறதுல ஒரு தப்புமில்ல. எங்க கண்ணுக்கெதிர்க்க நீ அதை வேண்டாம்னு ஒதுக்கினா எங்க மனசு அலைபாயாம என்ன செய்யும்? பெத்த குழந்தைகள் எல்லா விஷயத்துலயும் நன்னார்க்கணும்னு நினைக்கற உரிமை எங்களுக்கு இல்லன்றயா?