Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Vilai Azhage…?
Enna Vilai Azhage…?
Enna Vilai Azhage…?
Ebook140 pages50 minutes

Enna Vilai Azhage…?

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580102603965
Enna Vilai Azhage…?

Read more from Lakshmi Praba

Related to Enna Vilai Azhage…?

Related ebooks

Reviews for Enna Vilai Azhage…?

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Vilai Azhage…? - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    என்ன விலை அழகே....?

    Enna Vilai Azhage…?

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    என்னுரை

    வாசக நெஞ்சங்களுக்கு.

    வணக்கம் நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை சந்திக்க வருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.என்ன விலை அழகே.... நாவலின் நாயகி ரோஜா ஒரு பேரழகி.... அனாதையாய் அரண்மனையில் அண்டி வாழ்ந்தவளுக்கு.... விதி வசத்தால் ஆபத்து நேரிடுகிறது. ஜமீன்தாரர் விரித்த சதி வலையிலிருந்து அவள் எப்படி தப்பித்தாள்…? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    கதைக் களம் மயிலாடும் பாறை எஸ்டேட்ஸ் விறுவிறுப்பான குடும்பக்கதை மட்டுமல்ல.... உங்கள் அனைவருக்கும் பிடித்த அமானுஷ்யமும் உண்டு....

    மிக்க நன்றி....!

    அன்புடன்,

    உங்கள்

    திருமதி. லட்சுமி பிரபா.

    என்ன விலை அழகே....?

    1

    'மயிலாடும் பாறை' எஸ்டேட்......! இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் அற்புதமான வனப் பிரதேசம்....!

    எங்கு திரும்பினாலும் பசுமை தான்....!

    கண்களுக்கு குளிர்ச்சி தந்தும்.... இயற்கை வனப்பில் மனதை லயிக்க வைக்கும் அழகிய வனப்பகுதி அது...!

    மூன்றரை கிரவுண்டுக்கு மேலாக.... இடத்தை அடைத்து ஒரு அரண்மனை அங்கே கட்டப்பட்டிருந்தது.

    அதைச் சுற்றிலும் பசேலென்று புல்வெளி.... அழகான பூந்தோட்டம்....!

    உள்ளே இருக்கும் அரண்மனை கண்ணுக்குப் புலப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக.... பெரிய கோட்டைச் சுவர் போன்று பிரமாண்டமாய் கருங்கல்லால் ஆன மதிற்சுவர் எழுப்பப்பட்டிருந்தது.

    கார் உள்ளே செல்வதற்கோ.... வெளியில் போவதற்கோ… அகலமான காம்டபவுண்ட் கேட்டை காவலாளி திறக்கும் போது மட்டுமே! அந்த அரண்மனை பளிச்சென்று பார்வைக்கு சிக்கும்.

    அப்பப்பா என்ன கம்பீரம்? எவ்ளோ பிரமாண்டம் அரண்மனை மிடுக்கா இருக்குல்ல?

    மிடுக்கு மட்டுமில்ல....மிரட்டற மாதிரி இருக்கு

    அரண்மனையைப் பார்த்து நீ பயப்படறியா?

    அரண்மனனயோட சொந்தக்காரனை நெனச்சு நான் பயப்படறேன் மெல்லிய குரலில் பதில் வந்தது.

    இந்த ஜமீன்தாரர் முரட்டு ஆசாமியோ?

    உஷ்! மெதுவா.... அந்த மதில் சுவருக்குக் கூட காது இருக்கும், ஜாக்கிரதை....!

    இந்த எஸ்டேட்டுக்கு நீ புதுசு. நாலு நாள் எங்க வீட்டுலே விருந்தாளியா தங்க வந்திருக்கே.... வில்லங்கத்தை இழுத்து விட்டுடாதே சாமி…!

    நடுத்தர வயதைத் தாண்டிய ஆண்கள் இருவரும் சற்றே தூரமாய் வந்து நின்று திரும்பிப் பார்த்தனர்.

    கோட்டை கொத்தளத்துக்குரிய மதில் சுவர் மாதிரி எவ்ளோ நீளமா இருக்கு…? நடக்க நடக்க வந்துட்டே இருக்கிற மாதிரி தோணுச்சு…

    ஜமீன் தாரர் எப்படி இருந்தாலும் என்னா அந்த அரண்மனையிலே வாழற அவரோட மனைவியும் பசங்களும் ரொம்ப ரொம்ப குடுத்து வச்சவங்க.

    பணம் கோடி கோடியா கொட்டிக் கிடந்தாலும் மனசு நிறைய வேணாமா? ஜமீன் தாரருக்கு குழந்தைங்க இல்ல....

    அடப் பாவமே! இவ்ளோ பெரிய அரண்மனை இருக்கு. வாரிசு இல்லாம போச்சா?

    அரண்மனை மட்டுமா இருக்கு? மயிலாடும் பாறையில் முக்கால் வாசிக்கு மேலே ஜமீன்தாரருக்கு சொந்தமானது தான்.

    திராட்சை தோட்டம், ஏலக்காய், கிராம்பு, தேயிலை, காபி தோட்டங்கள் மட்டுமில்ல.... மலை அடிவாரத்துலே டீ பேக்டரிகளும் இருக்கு....

    இந்த எஸ்டேட்டுலே, மட்டு மில்லாம.... அக்கம் பக்கத்து எஸ்டேட்டுகள்லே கூட ஜமீன்தாரருக்கு சொத்துக்கள் இருக்கு....

    ஜமீன் பரம்பரையில இருக்கத்தானே செய்யும்?

    பாதிக்கு மேலே அநியாயமா அடாவடியா சம்பாதிச்சது தான்....

    அநியாயமா சம்பாதிச்சாரா? எப்படி?

    இந்த மலைப் பகுதியிலே பெரும்புள்ளின்னா… ஜமீன்தாரர் மட்டும் தான். பிரசிடெண்ட் பதவி வேற....

    பணக்கஷ்டத்துலே இருக்கிறவங்களுக்கு கடன் தர வேண்டியது...... அடமானமா எதையாவது எழுதி வாங்கிக்க வேண்டியது.... ஜமீன்தாரரோட ராசி அடமானம் வச்சவங்க மீட்டதா.... இது வரைக்கும் சரித்திரமே இல்ல…

    "அப்படியே கடன்வே மூழ்கிப் போச்சுன்னு சொல்லி தகவல் அனுப்பிட்டு.... சொத்தை அமுக்கிடுவாப்பல…

    அரண்மனைக்குள்ளே கார் ஒண்ணு உள்ளே போச்சே? முன் சீட்டுலே உட்கார்ந்து போனது யாரு?

    ஜமீன்தாரர் ராஜலிங்கம் தான்....

    நெத்தியிலே விபூதி பூசிக்கிட்டு.... பார்க்கிறதுக்கு பக்திமான் மாதிரி பாந்தமா இருக்கிறாரே? இவரா இவ்ளோ அக்கிரமங்கள் செய்றாரு?

    எல்லாம் வெளி வேஷம் பெரிய மனித தோரணை இருக்கு.... ஆனா பண்றது அத்தனையும் சின்னத் தனம்....

    அவரோட சம்சாரம் எப்படி எல்லாத்தையும் சகிச்சுக்கிறாங்க?

    சகிக்க முடியாம.... பொறுத்துப் பொறுத்து பார்த்துட்டு வெறுத்துப் போய் புத்தி பேதலிச்சுப் போயிட்டாங்க.

    அடக்கடவுளே! இத்தன பெரிய அரண்மனையிலே வாழற மகராசி.... மனசு நிறைஞ்ச சந்தோஷத்தோட இருப்பாங்கன்னு இல்ல நான் நெனச்சேன்.

    வெளிப் பார்வைக்கு பட்டுப்புடவை உடுத்தி சதா வைர நகைகள் போட்டு ஜம்முனு தான் இருந்தாங்க.... ஆனா உள்ளுக்குள்ளார...... அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தா...உள்ளே அத்தனையும் சொத்தை அப்படின்னு சும்மாவா சொல்லி வச்சாங்க?

    ஐயோ பாவம்!

    புருஷன் பண்ற அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா, அந்தப் பாவத்தை அனுபவிச்சுத் தானே தீரணும்?

    அவரு செய்யற பாவத்துக்கு...... இந்தம்மாவுக்கு தண்டனையா?

    உஷ்...... அதோ... எதிரே வர்றான் பாரு... அவன் ஜமீன்தாரரோட வீட்டுலே பல வருஷமா வேலை பார்க்கிறான், பேரு காசி., பயங்கர விசுவாசமான ஆளு...

    இருவரும் கப் சிப் பென்று அடங்கிப் போனார்கள்.

    கனத்த பைகளை இரு கைகளில் சுமந்தபடி மூச்சிரைக்க வந்த காசி... மூடப்பட்டிருந்த கோட்டை ஒரு தரம் தட்டினான்.

    காசியா? என்றபடி விக்கெட் கேட்டைத் திறந்து விட்டான் வாட்ச்மேன்.

    எஜமான் வந்துட்டாரு... காசி சாமான் வாங்கி வந்ததும்.... நேரா ரூமுக்கு வரச் சொல்லுன்னு சொன்னாரு... என்றான்.

    தோ... போயி அவரைப் பார்க்கிறேன்......

    அவசரமாக பங்களாவுக்குள் நுழைந்து அடுக்களையை நோக்கிப் போனான்.

    அவனது மனைவி கனகம், கீழே அமர்ந்து ஒற்றை காலை நீட்டியே படி அலுப்புடன் அரிவாள் மனையில் காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.

    கனத்த பைகளை ஓரமாய் வைத்து விட்டு நிமிர்ந்த கணவன் காசியை ஏறிட்டாள்.

    எருமான் கூப்பிட்டாராம்.... என்னன்னு கேட்டுக்கிட்டு வந்துடறேன்....

    எஜமான் குணத்துக்கு சமையல் வேலைக்கு வந்து இறங்கினவங்க.... ஒரு மாச சம்பளம் வாங்கறதுக்குள்ளே தாக்குப்பிடிக்க முடி யாம ஓட்டம் எடுத்துடறாங்க.

    வசவுகளை வாங்கிக் கட்டறதுக்கு.... யாருக்கு சகிப்புத் தன்மை இருக்கு?

    ருக்மணி அம்மா பொறுமைசாலி.... பத்து வருஷமா பூமா தேவி மாதிரி அத்தன வசவுச் சொற்களை சகிச்சுக்கிட்டு.... வாய்க்கு ருசியா ஆக்கிப் போட்டாங்க...

    அவங்க போனதுக்கு அப்புறம்.... ஒரு பய வேலையில நீடிக்க மாட்டேங்கிறான்.... சுத்து வேலை செய்யறவங்க ஏதோ ஆக்கிப் போடறோம்....

    "இந்த மட்டுமாவது சமைக்க ஆள் இருக்கே?ன்னு நெனக்காம....

    Enjoying the preview?
    Page 1 of 1