Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathaigal Vithaigal
Kathaigal Vithaigal
Kathaigal Vithaigal
Ebook201 pages1 hour

Kathaigal Vithaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703921
Kathaigal Vithaigal

Read more from Indira Soundarajan

Related to Kathaigal Vithaigal

Related ebooks

Reviews for Kathaigal Vithaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathaigal Vithaigal - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    கதைகள் விதைகள்

    Kathaigal Vithaigal

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    கதைகள் விதைகள் என்னும் தலைப்பிலிருந்தே தொடங்குகிறேன். 'தை' என்றால் தைப்பது என்று ஒரு பொருள்! அதாவது இரண்டு விஷயங்கள் ஒன்றாவது... துணியை வெட்டித் தைக்கும் போதும் இரண்டும் சேர்ந்து ஒன்றாகிப் பயன் தருகிறது. மண்ணில் விதையை புதைக்கவும் மண்ணோடு கூடிப்பிணைந்து அது விருட்சமாகிறது.

    இந்த தைத்தலில் உள்ள தை எனும் பொருள் பெதிந்த காரணப் பெயருக்கு முன் சில எழுத்துக்கள் சேரும் போது அதனால் புதிய பொருள் உண்டாகிறது. விதை, சிதை, புதை என்கிற சொற்களில் விதை என்பதன் முதல் எழுத்து விருத்தியைக் குறிக்கிறது. ஒரு விதையை நட்டவுடன் அந்த விதை முளைத்து விருத்தி தானே ஏற்படுகிறது! சிதையும் அப்படியே... சிதை என்றால் உயிரில்லாத பிணம். இதை புதைக்கும் போது மண்ணோடு மண்ணாகி சிதிலமாகி விடுகிறது.

    இந்த தை என்னும் எழுத்து இப்படி தனக்கு முன் விழும் எழுத்தைக் கொண்டே பொருளைச் சொல்லி விடுவதோடு நம் தமிழ் மொழியின் செழுமையையும், வலிமையையும் சேர்த்தே கூறி விடுகிறது.

    அந்த வகையில் கதைகள் என்றால் கற்பனையானவை. ஆனாலும் மனதில் இவை படியும் போது மனதோடு கற்பனை தைக்கப்பட்டு ஒன்றாகி விடுகிறது. கற்பனையின் முதல் எழுத்தெடுத்து தையோடு சேர்த்து கதை என்றனர். கவிதை என்ற சொல்லோ ஒருபடி மேலே போய் அதைக் கேட்பவர் மனதில் புதிதாய் ஒரு சிந்தனையோ இல்லை கருத்தோ தோன்றக் காரணமாகிவிடுகிறது. அந்த வகையில் கதையை விட கவிதை ஒருபடி மேலானதாக வலிமை மிக்கதாய், கேட்பவர் மனதில் முளைத்து எழுவதாய் உள்ளது. கற்பனையான விருத்தியைச் செய்வதால் இந்த இரு சொற்களின் முதல் எழுத்தை எடுத்து கவிதை என்றனர். அதனாலேயே நம் இதிகாசங்களும் சரி, புராணங்களும் சரி பாடல் வடிவில் அமைந்து இன்னும் அழியாது உள்ளன. இவை என்றும் அழியாது என்பதும் சத்தியம்.

    நமது இதிகாச புராணங்களை புளுகுமூட்டை என்று மிக மலிவாக எதிர்மறையாக விமர்சிப்போரும் இருக்கவே செய்கின்றனர். ஒரு உண்மையை இந்த எதிர்மறையாளர்களால் கூட மறுக்கமுடியாது. அது என்னவென்றால் எந்த ஒரு புளுகும் காலம் கடந்து வாழாது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரிந்துவிடும் என்பார்கள். ஆனால் நம் புராணங்களும் இதிகாசங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் கருக்கழியாமல் அப்படியே இருக்கிறதென்றால் அவை பொய்யானவை அல்ல மிக பொருள் பொதிந்தவை என்பதே உண்மை.

    இந்த இதிகாச புராணங்களுக்குள் அள்ள அள்ளக் குறையாத செய்திகள்! அவை மனிதன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று சொல்பவையாக அறக்களன்களாகவே உள்ளன. குறிப்பாக வியாசர் எனும் மகாமுனிவர் அருளிச்செய்த மகாபாரதம் நம் பாரத தேசம் முழுக்கவே பிரசித்தம். மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியிராத ஒரு பாமரனுக்கு கூட பாரதக் கதை தெரிந்திருக்கும்.

    'பாண்டவர்கள் ஐந்து பேர் கௌரவர்கள் நூறு பேர். இருசாராரும் உறவுக்காரர்கள் தான். பங்காளிகள். இவர்கள் மண்ணுக்காக சண்டை போட்டுக் கொண்டார்கள்' என்று இவர்கள் படித்தவர்களை விடவே தெளிவாக கூறிவிடுவார்கள். இதே கருத்து ராமாயணத்துக்கும் பொருந்தும். அதில் மண்ணாசை பிரதானம் என்றால் இதில் பெண்ணாசை பிரதானம்!

    உலகில் இதுபோல் பலகோடி பேர்களை சென்றடைந்த ஒரு படைப்பு வேறு எந்த மொழியிலும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. இத்தனைக்கும் நம் இந்திய தேசம் ஒரு ஆச்சரியமான பூமி. இங்கே ஏராளமான மொழிகள். அவைகளுக்கென்று தனியே லிபி எனும் எழுத்துக்கள். கலாச்சார பூர்வத்திலும் நிறையவே வேற்றுமைகள். ஆயினும் இந்த இதிகாசங்களை மதித்து ஏற்றுக் கொண்டதில் எவரிடமும் எந்த வேற்றுமையும் இல்லை.

    இந்த இதிகாச பாத்திரங்களான ராமனும், கிருஷ்ணனும் மட்டுமல்ல, பஞ்சபாண்டவர்களும், சீதையும் திரௌபதியும் பூஜைக்கு உரிய தெய்வங்களாகவே ஆகிவிட்டனர். அப்படிப்பட்ட இந்த இதிகாசங்களும் சரி இவைகளோடு சேர்ந்து வியாசரால் நமக்கு அளிக்கப்பட்ட பதினெட்டு புராணங்களும் நம் மனநலன் சார்ந்தவை மட்டுமல்ல. உடல் நலனுக்கும் இவை சான்றாக உள்ளன. அதனால் இவை புத்தகவடிவில் இருக்கும் போதிலும் பூஜைக்குரியதாக கருதப்பட்டு பூஜிக்கவும் படுகின்றன. அதற்கு சான்றுகளும் உள்ளன.

    காஞ்சி மாமுனிவர் வாழ்வில் ஒரு அதிசய சம்பவம்!

    கல்கத்தாவை சேர்ந்த ஒரு சேட்ஜி மிகுந்த பண்பாளர். அறச்செயல்களுக்கு அள்ளி அள்ளித் தருபவர்! தமிழ் நாட்டில் இருந்து வழுத்தூர் ராஜகோபாலசர்மா என்னும் உபன்யாசகர் கல்கத்தா சென்று இந்த பாரதத்தை ஒரு வாரகாலம் சொற்பொழிவாக செய்த தருணத்தில் அந்த ஒரு வாரகாலம் அந்த சேட்ஜி முன்வரிசையில் அமர்ந்து கதை கேட்டதோடு, அந்த உபன்யாசம் நிகழ்த்த தேவையான செலவினங்களையும் அவரே ஏற்றுக்கொண்டாராம்.

    அற்புதமான தயாள குணம் படைத்த அந்த செல்வந்தருக்கும் ஒரு குறை. குறை என்றால் நமக்கெல்லாம் இருக்கின்ற சொத்திலான குறை இல்லை. இந்தக் குறையை நாம் கேள்விப் பட்டால் விக்கித்துப் போவோம். நம்மை கடவுள் மிக நன்றாக வைத்திருக்கிறான் என்று ஒரு முடவன் கூட எண்ணிக் கொள்வான். அப்படி ஒரு விசித்திரமான குறைபாடு.

    அதை குறை என்பதா இல்லை கொடுமை என்பதா என்கிற கேள்வியெல்லாம் நமக்கு எழும். கூட்டிக் கழித்தால் அது குறையில்லை. கொடுமை தான்! கொடுமையே தான்! அந்த மனிதரால் வாயால் எதையும் உட்கொள்ள முடியாது என்பது பெரும் கொடுமையானது தானே?

    அப்படி ஒரு நோய்!

    அவரது நாவண்ணங்களில் மருத்துவர்களால் கண்டறியப்பட முடியாத ஒரு வியாதி. அதன் காரணமாக விழுங்குவது என்பதே அவருக்கு இயலாத ஒன்று! இப்படி ஒரு வியாதி வந்தவர்களால் எப்படி உயிர் வாழ முடியும்? உணவு வயிற்றுக்குள் சென்று செரித்தாலல்லவா சக்தி கிட்டும். தண்ணீர் கூட அருந்த முடியாது என்றால் அது என்ன வாழ்வு?

    அவரும் பார்க்காத மருத்துவரில்லை. செய்து கொள்ளாத வைத்தியம் இல்லை. மேல்நாடுகளுக்கு சென்றால் அவர்கள் தான் கொம்பு முளைத்தவர்களாயிற்றே அவர்களால் எதாவது விமோசனம் கிட்டாதா என்று அங்கெல்லாமும் சென்று பார்த்ததில் மருத்துவர்கள் உயிர் வாழ வழி கண்டனர். ஆனால் அவர் வியாதிக்கு மருந்தை வருங்காலத்தில் கண்டறிந்தால் தான் உண்டு என்று கூறிவிட்டனர்.

    அந்த மருத்துவர்கள் கண்ட வழி விசித்திரமானது. வயிற்றைத் துளை போட்டு ஒரு குழாயைச்செருகி அதன் மூலமாக இரைப்பைக்கு நீரும் உணவும் சென்று சேரும்படி செய்து விட்டனர். அதனால் தான் அவரால் நடமாட முடிந்தது. அவர் முன் சோத்துக்கு செத்த ஒரு பிச்சைக்காரன் கூட பெரிய புண்ணியவானாகி விட்டான். பழைய சோறோ இல்லை எச்சில் சோறோ வக்கணையாக சப்புக் கொட்டி சாப்பிட அவனால் முடியுமே?

    இப்படி ஒரு பெருங் கொடுமையோடு வாழ்ந்த நிலையில்தான் அவர் பாரத உபன்யாசம் கேட்டார். உபன்யாசம் என்றால் ஏராளமான அறக்கருத்துகள், மெய்சிலிர்க்கும் சம்பவங்களும் நிரம்பியிருக்குமே? அதிலும் பாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கமாய் இருந்து கொண்டு புத்தி பூர்வமாகவும், சக்தி பூர்வமாகவும் அவர்களுக்கு துன்பம் வந்த தருணங்களில் துணை செய்த தன்மை சேட்ஜியின் மனதை தொட்டுவிட்டது.

    பாண்டவர்களுக்கு ஒரு கிருஷ்ணன் கிடைத்த மாதிரி தனக்கொருவர் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவர் மனது ஏங்கத் தொடங்கிவிட்டது. உபன்யாசம். முடிந்த நிலையில் சர்மாமுன் தன் வயிற்றில் உள்ள துவாரத்தையும், ட்யூபையும் காட்டி அவர் முன் கண்ணீர் விட்டார் சேட்ஜி.

    "சுவாமி... அருமையாக கதை சொன்னீர்கள்! என் மனதுக்கும் மகிழ்ச்சி கிட்டியது. தர்மம் எப்படியும் வெல்லும் அதர்மம் நிலைக்காது என்பதை அழகாக புரிய வைத்தீர்கள். எனக்கு தெரிந்து நான் ஒரு பாவமும் செய்தவனில்லை. நல்ல காரியங்களைத் தவிர நான் எதையும் செய்வதுமில்லை. அப்படிப்பட்ட எனக்கு எப்படி இப்படி ஒரு வியாதி வரலாம்? கேட்டால் பூர்வ ஜென்ம கர்மவினை என்கிறார்கள்... அப்படியே தான் இருக்கட்டுமே... அந்த வினையில் இருந்து விடுபட வழி இல்லையா?

    உங்கள் மகாபாரதத்தில் கூட எவ்வளவோ பாவிகள். அவர்களுக்கெல்லாம் தண்டனை கிடைக்கிறது. நல்லவர்கள் இறுதியில் வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் ஒரு வழி தெரியவில்லையே?

    நான் எதற்காக உயிர் வாழ்கிறேன் என்றே தெரியவில்லை. இந்த உடம்பை சாகவிடாதபடி செய்து கொண்டு மனதால் இறந்தவனாக ஏதோ நானும் இருக்கிறேன். பெரும் பக்திமானான உங்களிடம் கேட்கிறேன் எனக்கு விமோசனம் உண்டா இல்லையா?" அந்த சேட்ஜி கேட்ட கேள்வி ராஜகோபாலசர்மாவை உலுக்கி விட்டது. சர்மாவுக்கு என்ன பதில் கூறுவது என்றும் தெரியவில்லை. அவர் வரையில் ஆன்மீக உலகில் அந்த பரமேஸ்வரனாகவே அவருக்கு காட்சி தருபவர் காஞ்சி மகாபெரியவர் ஒருவர் தான். நிச்சயம் பெரியவர் ஒரு நல்லவழி காட்டுவார் என்று நம்பி பெரியவர் மேல் பாரத்தை போட்டு சேட்ஜிக்கு ஒரு உறுதியை அளித்தார்.

    சேட்ஜி... தைரியமாக இருங்கள். காரணமில்லாமல் காரியமில்லை. உங்களுக்கு இப்படி இருப்பதன் பின்னாலும் சரியான காரணங்கள் இருக்கின்றன. அது என்னவென்று தான் தெரியவில்லை. அதை கண்டறிந்து உங்களுக்கு நல் வழி காட்டவும் ஒருவர் இருக்கிறார். அவர் தான் காஞ்சி மகாபெரியவர் எனப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்! நான் அவரது அணுக்க தொண்டன். அவரிடம் கேட்டு உங்கள் கொடுமையான வியாதிக்கு மருந்து இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்றவராக கல்கத்தா விட்டு புறப்பட்டார்.

    இரு தினங்களில் காஞ்சிபுரம் வந்தவர் மகாபெரியவரிடம் சேட்ஜியின் சிக்கலை உருக்கமாக எடுத்தும் கூறினார். ஆனால் பெரியவரிடம் உடனே ஒரு பதிலில்லை. மௌனமாக எதுவும் பேசாமல் சென்று விட்டார்.

    அதை எப்படி எடுத்துக் கொள்வது? என்னிடமும் இதற்கு விடை இல்லை என்று எடுத்துக் கொள்வதா? இல்லை சேட்ஜி ஒரு கொடும்பாவி அவர் பற்றியெல்லாம் பேசவே பேசாதே என்று எடுத்துக் கொள்வதா?

    சர்மாவுக்கு புரியவில்லை. சரி விட்டுப் பிடிப்போம் என்று கருதியவர் இரு தினங்கள் கழித்து மறுபடியும் சேட்ஜியின் பிரச்சனை குறித்து பேசிட, பெரியவரிடம் அதே ஒதுங்கல்! இதற்கு நடுவில் சேட்ஜி கல்கத்தாவிலிருந்து கேள்வி பதில் கேள்வி கேட்டவராக சென்னைக்கு புறப்பட்டு வந்து விட்டார். அவரிடம் பெரியவர் எதுவும் சொல்லவில்லை என்றால் நிச்சயம் உடைந்து விடுவார். சும்மாகிடந்த சங்கை எடுத்து ஊதி ஊதி கெடுப்பது என்பார்களே அப்படியல்லவா ஆகிவிடும்?

    சர்மாஜி! அவரை சமாளித்ததோடு பெரியவரிடமும் விடாமல் முயன்றார். அந்த விடாமுயற்சிக்கும் பயன் கிடைத்தது. சர்மா... எனக்கு தெரிஞ்சு ஒரு பரிகாரம் இருக்கு. ஆனா அதை அந்த சேட்டால் செய்ய முடியாது என்றார். அதை அப்படியே சேட்டிடம் கூறவும் சேட்ஜிக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. சர்மாஜி... எதுவாக இருந்தாலும் செய்கிறேன். இப்படி உயிர் வாழ்வதற்கு விக்கிரமாதித்தன் போல் தலையை கூட காணிக்கை தர சித்தம் என்றார்.

    அந்த தகவலை அறிந்த மகாபெரியவர் இறுதியாக கூறிய பரிகாரச் செயல்பாடு என்ன தெரியுமா?

    "வியாசர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களை மூலத்தில் உள்ளபடி அச்சிட்டு காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையில் வாழ்ந்து வரும் வேத பண்டிதர்களை

    Enjoying the preview?
    Page 1 of 1