Thayumanavan
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Nadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Thodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Kanneerum Aanandham Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thayumanavan
Related ebooks
Poojaikku Vantha Malarey Vaa...! Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsAsaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Theriniley... Rating: 0 out of 5 stars0 ratingsMaariyathu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Enbathu Varam Rating: 0 out of 5 stars0 ratingsKannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsMaarupadum Konangal Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam…! Rating: 4 out of 5 stars4/5Oondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsSarkkarai Nilave Rating: 0 out of 5 stars0 ratingsVidupattavai Viraivil...! Rating: 5 out of 5 stars5/5Idhayam Idam Maarumaa...? Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5செவ்வரளிப்பூ... Rating: 0 out of 5 stars0 ratingsSevvaralip Poo Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Thodarum... Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsVanam Vasapadum Rating: 0 out of 5 stars0 ratingsPhoenix Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAgalya Kaathirukiral Rating: 0 out of 5 stars0 ratingsNilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Oonaagi Uravaagi Uyiraagi! Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5Enaiyalum Ejamaney...! Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Piriyatha Varam Vendum Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsOru Gangaiyin Kadhai Rating: 0 out of 5 stars0 ratingsஎன் கண்ணின் மணியே... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thayumanavan
0 ratings0 reviews
Book preview
Thayumanavan - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
தாயுமானவன்
Thayumanavan
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
பிள்ளையார் கோயிலுக்கு மேலே குடை விரித்தாற் போல பவழமல்லி மரம் கிளை விரித்துப் படர்ந்திருந்தது. சிகப்பு நிறக் காம்புகளோடு மலர்ந்திருந்த பூக்களைக் கோயிலின் மீது சொரிந்திருந்தது. கோயிலைச் சுற்றிலும் நிலத்தில் உதிர்ந்திருந்த பூக்களைப் பொறுக்கி எடுத்துக் கூடையில் சேகரித்துக் கொண்டிருந்த அப்பாவுக்கு வராண்டாவில் நின்றபடி காலை வணக்கம் சொன்னாள் மீரா.
குருமூர்த்தி நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தார். பதில் வணக்கம் சொன்னார்.
என்னம்மா, சீக்கிரம் எழுந்துட்ட?
இனிமே சீக்கிரம் எழுந்துக்கப் போறேன்...
என்ன திடீர்ன்னு?
இனிமே இந்த விடியல் அழகை மிஸ் பண்ணப் போறதில்லை. பூஜை முடிஞ்சாச்சாப்பா?
அரை மணில வந்துடறேன். பால் காய்ச்சி வெச்சிருக்கேன் பாரு. நீ குடி...
மீரா பவழமல்லிப் பூக்களை ஊசியால் கோர்த்துக் கொண்டிருந்த அப்பாவையே பார்த்தாள்.
ஐந்து வருடம் முன்பு அந்தக் கேம்பஸில் அப்பா கட்டின கோயில் அது. கேட்டிலிருந்து பார்த்தாலே தெரியும்படி கிழக்குப் பார்த்த வண்ணம் சின்னப் பிள்ளையார் கோயில். அழகான பிள்ளையார். அவர் தலைக்கு மேலே சிறிய விமானம். அதன் உச்சியில் சிறியதாய் ஒற்றைக் கலசம். அப்பா ஆசை ஆசையாய்க் கட்டின கோயில் என்றாலும், இப்போது அங்கிருந்த எல்லாருக்குமே அது செல்லப் பிள்ளையாராகி விட்டது.சக்தி வினாயகர் என்று அப்பா சூட்டியிருந்த பெயருக்கேற்றாற்போல் சக்தியுள்ள தெய்வம்தான். இருபது வீடுகள் கொண்ட அந்த அபார்ட்மென்ட்டில் மாற்றி மாற்றிப் பூஜை, புனஸ்காரம், நைவேத் தியம் என்று வேண்டுதல்களை நிறைவேற்ற, எந்நேரமும் மாலையும், பூக்களும், புது வேட்டியும், கையில் கொழுக் கட்டையுமாய் ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார் பிள்ளையார். அந்தக் கொண்டாட்டத்தில் அப்பாவுக்கே சில நேரம் அப்பாய்ண்ட்மெண்ட் கிடைப்பது அரிதாகி விடும் என்றாலும். அப்பாவுக்கு அதில் சந்தோஷம்தான் கூடுதலாகும்.
'என் குழந்தையை ஊரே கொண்டாடறது' என்று பூரித்துப் போவார்.
சர்க்கரை போட்டு பால் ஊற்றிய போது அப்பா உள்ளே நுழைய, அவரிடம் ஒரு டம்ளர் பாலைக் கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள்..
அப்பா சி.டி. பிளேயரில் ஒரு சி. டியைப் போட்டுவிட்டு வந்தார். சௌடையாவின் வயலின் இசை மெலிதாய் வீட்டை நிறைத்தது.
இன்னிக்கு என்ன புரோக்ராம் வெச்சிருக்கம்மா?
ஒரு வேலையும் கிடையாது. இன்னிக்குப் பூரா உங்களோடதான். ரெண்டு பேரும் ஜாலியா சமைப்போம், சாப்டுவோம், டி. வி. பார்ப்போம், ரம்மி ஆடுவோம்...
சரி, என்ன சமைக்கலாம். சொல்லு...
நம்ம டயட்டை இன்னிக்கு ஒரு நாள் கை விட்டுட்டு, காரசாரமா சாப்ட்டா என்ன?
அவர் சிரித்தார்.
சேப்பங்கிழங்கு ரோஸ்ட், காரசாரமா மோர்க்குழம்பு, பூண்டு ரசம் - என மெனு எப்படி?
ஜமாய்ப்போம்...
அடுத்த வாரம் எனக்குக் கோயம்புத்தூர்ல ஆடிட் கேம்ப் இருக்குப்பா...
எவ்ளோ நாள்?
நாலு நாள்ல வந்துருவேன். உங்களுக்குப் போரடிக்கும் இல்ல?
பொண்ணைப் பெத்தவன் பிரிவுக்கு பிராக்டிஸ் பண்ணிக்கத்தானே வேணும்?
நான் உங்களைப் பிரிய மாட்டேன்...
அதெப்படி...? பழம் கனிஞ்சா மரத்துல விட்டு வெக்க முடியாதே? அல்லது பழம் போற இடத்துக்கெல்லாம் மரமும் போக முடியுமா?
நான் பழமும் இல்ல, நீங்க மரமும் இல்ல. இந்தப் பேச்சை இதோட விட்ருவோமா?
"நான் சீரியஸா கேக்கறேன் மீரா... உனக்கு வயசு இருபத்தி நாலு. நல்லாப் படிச்சிருக்க. நல்ல உத்யோகத்துலயும் இருக்க. வாழ்க்கைங்கறதே படிப்படியா முன்னேர்றதுதானே?
படிப்பு, உத்யோகம், இதுக்கடுத்தபடி கல்யாணம், குழந்தைன்னு போயிண்டே இருக்கறதுதானே மனுஷ வாழ்க்கை. அடுத்தபடி ஏறமாட்டேன்னு அடம் பிடிச்சா எப்படி?
நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலையே... உங்களைப் பிரிய விரும்பலைன்னுதான் சொல்றேன்...
பிரிட்டிஷ் ராஜகுமாரிலேர்ந்து ஆரம்பிச்சு, அமிஞ்சிக் கரை மிடில் கிளாஸ் பொண்ணு வரைக்கும் பொண்ணுங்க புருஷன் வீட்டுக்குப் போறதுதான் வழக்கம். யாரும் யாருக்கும் துணையா இருக்க முடியாது. தனியாத்தான் பொறக்கறோம். தனியாத்தான் போகப் போறோம். இதுக்கு நடுவுல எல்லாமே ரயில் சிநேகம்தானே?
அது சரி. நீங்க பேசறதைப் பார்த்தா நாளைக்கே என்னைக் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டுதான் மறு வேலைங்கறாப்பல இருக்கு!
சரி, இன்னும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடு. உன் சாய்ஸ் லவ் மேரேஜா, அரேன்ஜ்டு மேரேஜா?
நான் எப்படிக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நீங்க நினைக்கறீங்க?
நான் பார்த்தாலும் சரி, நீ பார்த்துண்டாலும் சரி - நல்லவனா இருக்கணும். சிகரெட்டும், மதுவும் தொடாத வனா இருக்கணும். இதான் என் கண்டிஷன்ஸ்...
உங்க இஷ்டப்படிதான் என் கல்யாணம் நடக்கும். போறுமா?
இவ்ளோ தீர்மானமா சொல்ற? அப்போ ஆள் ரெடியா?
ரெடியானா உங்கக் கிட்டதான் முதல்ல சொல்லுவேன்...
மீரா சிரித்தபடி எழுந்து சென்று காய்கறிக் கூடையை எடுத்தாள். அப்பா உதவி செய்ய, முக்கால் மணியில் சமையல் செய்து முடித்தாள்.
நிதானமான குளியல், டி.வி. பார்த்தபடி பேச்சும் சிரிப்புமாய் சாப்பாடு என்று நேரம் நகர, உண்ட மயக்கத்தில் அப்பா சோபாவிலேயே சற்று கண்ணயர, மீரா டி.வி. யை அணைத்து விட்டு தன் அறைக்கு வந்தாள்.
இதோ என்பதற்குள் வாழ்க்கையில் இருபத்தி நாலு வருடங்கள் ஓடிவிட்டது. இப்போதுதான் ப்ளஸ் டூ எழுதினாற் போல் இருக்கிறது. காலம் விரைவாக ஓடுகிறதே என்று மகிழ்வதா, கவலைப்படுவதா? பாவம் அப்பா! அவருக்குள் எத்தனை எத்தனை கனவுகளோ? தொட்டிலில் கிடந்த காலத்திலிருந்து அப்பாவின் முகம் மட்டுமே அவளுக்குப் பரிச்சயம். பெற்றுப் போட்ட சிறிது நாட்களிலேயே அம்மா இறந்திருக்க வேண்டும். அம்மாவைப் பற்றி எது கேட்டாலும் அப்பாவின் முகம் வாடிவிடும் என்பதால் அம்மாவைப் பற்றி கேட்பதை அவளும் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டாள். அவளுக்கு நன்றாக நினைவு இருக்கிறது. இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அம்மாவோடு கொஞ்சும் மற்ற குழந்தைகளைப் பார்த்துவிட்டு, தனக்கும் அம்மா வேண்டும் என்று அவள் அழுது அடம் பிடித்தபோது அப்பா அவளைச் சமாதானப்படுத்தி விட்டு உள்ளே போனவர், சற்று நேரத்தில் வெளியில் வந்தபோது அழகாய்ப் புடவை உடுத்தி, நெற்றியில் பொட்டும், கை நிறையக் கண்ணாடி வளையலும், ஹேர்ப்பின்னில் குத்திய மல்லிகைப் பூவுமாய் அவளைப் பார்த்துச் சிரித்தபோது அவள் விழிகள் வியப்பில் விரிந்தன.
அம்மா வந்துட்டேன். அம்மாட்ட வாடா செல்லம்...
இரு கை விரித்து அவளை வாரியணைத்து முத்தமிட்டார்.
நாந்தான் அப்பா. நானேதான் அம்மாவும். உனக்கு அம்மா வேணும்னா நான் புடவை உடுத்தி பொட்டு வெச்சுப்பேனாம். அப்பா வேணும்னா வேட்டி கட்டிப்பேன். மத்தபடி அம்மான்னாலும், அன்புதான். அப்பான்னாலும் அதே அன்புதான். சரியா?
அன்று அவரைக் கட்டிக் கொண்டு அழுத்து இன்றளவும் அவளுக்கு மறக்கவில்லை. அதற்குப் பிறகு அம்மா வேண்டும் என்று அவள் கேட்டதில்லை. தோற்றத்தில் என்ன இருக்கிறது? தகப்பனே தாயும் ஆக முடியும் என்பது புரிந்த பிறகு தாயைப் பற்றி அவள் நினைத்ததில்லை. அவரே எல்லாமாக, அவரது விரல் பற்றி வளர்ந்தாள்.
அவர் மடியில் உட்கார்ந்து, அட்சரங்கள் பயின்று, அவரது விரல் ருசியோடு உணவுண்டு, அவரது நெஞ்சுக் கசகசப்பில் முகம் புதைத்து உறங்கி, அவரது கண் பார்வையில் துளித்துளியாய் வளர்ந்து பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு உத்யோகப் பரீட்சைகள் என்று அனைத்தையும் கடந்து... காலத்திற்குத்தான் எவ்வளவு வேகம்! கல்யாணம் என்ற பெயரில் இந்த அப்பாவை விட்டுப் பிரிவதா?
நினைக்கும்போதே துக்கம் பீறிட, அவளையும் மீறி கண்ணீர் திரண்டு சூடாகக் கன்னத்தில் வழிந்தது.
அப்பாவை விட்டு ஒரு கல்யாணம் வேண்டுமா என்று தோன்றியது. அவளோடு வர அப்பா சம்மதிக்கமாட்டார். மனைவியின் வீட்டுக்கு வருவதை தன்மானக் குறைவாய் நினைப்பான் புருஷன். கெளரவம் பார்க்கும் இரண்டு ஆண்களுக்கிடையில் பாசத்தால் அல்லாடப் போவது அவள்தான். எதற்கு இத்தனை வேதனை? அப்பா போதும் அவளுக்கு.
அவள் வெளியில் எட்டிப் பார்த்தாள். அப்பா நல்ல தூக்கத்திலிருந்தார். அறைக் கதவைச் சார்த்திவிட்டு தனது மொபைல் போனை எடுத்து எண்களை அழுத்தினாள்.
ஹாய் மீரா...
- எதிர்முனையில் வாசுவின் குரல் துள்ளலாய்க் கேட்டது.
ஆச்சர்யமாயிருக்கு. ஒரு வாரம் டைம் வேணும்னு கேட்ட. ஒரே நாள்லயே போன் பண்ணிட்ட...?
என்னால முடியாது வாசு. யோசிச்சுப் பார்த்தேன். காதல் எல்லாம் எனக்குச் சரிப்படாது. பெட்டர் நீ வேற யாரையாவது டிரை பண்ணு. என்னை விட்ரு...
அவள் சட்டென்று தொடர்பைத் துண்டித்து விட்டு, மொபைலைக் கட்டிலில் போட்டாள்.
பெரும் பாரமொன்று நீங்கினாற் போல் ஆசுவாசம் ஏற்பட்டது.
மொபைல் போன் ராகமிசைத்தது. வாசுவின் அழைப்பு அதில் தெரிய, அவள் அதை எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அது அடித்துவிட்டு ஓய்ந்தது. அடிப்பது நின்றதும் அதை அணைத்து வைத்துவிட்டு வெளியில் வந்த போது அப்பா வாசற் கதவுக்கு வெளியில், பால்கனியில் நின்றிருந்தார்.
என்னம்மா... நீயும் தூங்கிட்டியா?
அவளைப் பார்த்ததும் கேட்டபடி உள்ளே வந்தார். என்னம்மா கண்ணு கலங்கியிருக்கு? அழுதயான்ன?
அவள் முகத்தைப் பார்த்துவிட்டுப் பதறினார்.
ஆமா, அழுதேன்...
எதுக்குடா?
உங்களாலதான். நீங்கதானே கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சது...
நல்ல பொண்ணு! அதுக்கா அழுத?
அவர் சிரித்தார். பிறகு கேட்டார்.
கல்யாணம் வேணாம்னு சொல்றதுக்குக் காரணம் பாசமா, பயமா மகளே?
எனக்கொரு சந்தேகம்?
என்ன?
கல்யாணம் பண்ணிக்காம இருந்தா என்ன நஷ்டம் வந்துடும்?
நஷ்டம்தான். ஒரு சி. வி. ராமனோ, இந்திரா காந்தியோ, சச்சின் டெண்டுல்கரோ, சிவாஜிகணேசனோ, சாவித்திரியோ, ருக்மணி அருண்டேலோ, எம். எஸ்ஸோ நாட்டுக்குக் கிடைக்காமப் போனா நஷ்டம்தானே?
அப்பா சொல்ல, அடக்க முடியாமல் சிரித்தவள், செல்லச் சிணுங்கலுடன் அவரது நெஞ்சில் குத்தினாள்.
உண்மையைச் சொல்லணும்னா ஒரு சில பேர் வேணா ஒரு லட்சியத்துக்காகக் கல்யாணம் வேணாம்னு இருந்திருக்கலாம். அவங்களோட முழு கவனமும் அந்த லட்சியத்திலேயே இருக்கும்போது இந்தச் சிந்தனை இருக்காது. ஆனா எல்லார்க்கும் இது சாத்தியம் இல்ல. இளமை இருக்கும் வரை அந்த வீம்பும் திமிரும் இருக்கும். யாரையும் சார்ந்து வாழ வேணாம்னு தோணும். ஆனா போகப்போக அவாளோட முகங்கள்ள - அது ஆணாயிருந்தாலும், பெண்ணா இருந்தாலும் ஒரு விரக்தி நிரந்தரமாப் படிஞ்சு போய்டும். எந்த ஒரு பிடிப்புமில்லாம தான் அந்தரத்துல மிதக்கறாப்போல ஒரு பயம் தோணிடும். நாம யாருக்காக உழைக்கறோம்? யாருக்காக உயிர் வாழறோம்? னு பல கேள்விகள் தோணும். வாழ்க்கையோட சுவாரசியங்கள் படிப்படியா குறைஞ்சு, செய்யற செயல்கள் எல்லாம் யந்திரத்தனமாகி, பாசத்தைக் கொடுத்து வாங்க ஆளில்லாத துக்கம் வெறுப்பாகவும், எரிச்சலாகவும் வெளிப்படும். சுத்தியிருக்கற மனுஷா மேல் தேவையில்லாத துவேஷங்கள் ஏற்படும். மொத்தத்துல மனசுக்குள்ள ஒரு சூன்யம்தான் மிஞ்சும். உனக்கு சூன்யம் வேணுமா, தம்புரா சுருதி மாதிரி ஒரு சந்தோஷம் வேணுமா?
மீரா அப்பாவையே பார்த்தாள்.
"நீ நூறு வயசு இருக்கற வரை நான் இருக்க மாட்டேம்மா. நான் அரை செஞ்சுரி போட்டவன். எனக்கப்புறம் பாசம் காட்ட உனக்கும் ஒருத்தன் வேணும். அந்த ஒருத்தனை உடம்புல இளமை இருக்கும்போதே தேடிக்கறது தான் நல்லது. நீ