Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veezhven Endru Ninaithayo?
Veezhven Endru Ninaithayo?
Veezhven Endru Ninaithayo?
Ebook143 pages58 minutes

Veezhven Endru Ninaithayo?

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580105703920
Veezhven Endru Ninaithayo?

Read more from Vidya Subramaniam

Related to Veezhven Endru Ninaithayo?

Related ebooks

Reviews for Veezhven Endru Ninaithayo?

Rating: 3.75 out of 5 stars
4/5

4 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Excellent vidhya madam but why have you not continued in the angle or even a single incident of Ranjani taking a step to teach a lesson to her so called husband and inlaws on the whole a wonderful story no cannot be told as story u brought the incidents to the readers
    I have become crazy after reading your stories and keep on searching for the stories may god bless u with all the good health and more an more writings thanks a bundle

Book preview

Veezhven Endru Ninaithayo? - Vidya Subramaniam

http://www.pustaka.co.in

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

Veezhven Endru Ninaithayo?

Author:

வித்யா சுப்ரமணியம்

Vidya Subramaniam

For more books

http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

1

சரியாக பத்து மணிக்கு அட்டென்டென்ஸ் ரிஜிஸ்தரில் கையெழுத்து போட்டுவிட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள் ரஞ்சினி. எதிரில் கம்ப்யூட்டர் திரை சலனமற்று அவளுக்காகக் காத்திருந்தது. கல்யாண யோகமும் உத்தியோகமும் அவளுக்கு ஒரே சமயத்தில்தான் கிடைத்தது. சரியாக பத்து வருடாமாகிறது இன்றோடு. இன்றே கடைசி நாளாகவும் இருக்கக்கூடும். அப்படி ஒரு முடிவோடுதான் அவள் அன்று அலுவலகம் வந்திருந்தாள்.

யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று போஸ்டிங்கிற்காக காத்திருந்தபோதுதான் கல்யாணம் நிச்சயமாயிற்று. அம்மாவின் சொந்த தம்பியின் மனைவி மீனாட்சியின் தம்பிதான் மாப்பிள்ளை. மாமாவும் மாமி மீனாட்சியும் தான் இந்த கல்யாண பேச்சை முதலில் அம்மாவிடம் ஆரம்பித்தார்கள்.

அம்மாவுக்கு இந்த சம்பந்தத்தில் அவ்வளவாக விருப்பமில்லை. பெண்ணை எடுத்த இடத்தில் பெண்ணை கொடுப்பது சரிவருமா என்று யோசித்தாள். அதுவுமல்லாது மாமியின் அப்பா அம்மா இருவரும் மாமியின் கல்யாணத்தில் நடந்து கொண்ட விதம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. பொதுவாக பிள்ளை வீட்டுக்காரர்கள்தான் தேவையில்லாது பெண் வீட்டுக்காரர்களை ஓட ஓட விரட்டுவார்கள். ஆனால் மாமியின் கல்யாணத்தில் எல்லாமே தலைகீழாக இருந்தது. தாத்தா பாட்டி இருவரும் இல்லாத நிலையில் மாமாவின் கல்யாணத்தை அம்மாவும் அப்பாவும் தான் நடத்தினார்கள். மாமா அட்டை கறுப்பு. பல வரன்கள் இதனாலேயே தட்டிப் போயிற்று. கடைசியாக வந்த வரன்தான் மாமி மீனாட்சி கொஞ்சம் சுமாரான குடும்பம்தான். அதிகம் சீர் செனத்தி செய்ய வசதியற்ற நிலை. மீனாட்சி மாமாவுக்கு நேர்மாறாய் இருந்தாள். பளிரென்று ஒரு நிறம் வசிகரமான ஒரு சிரிப்பு. எல்லாவற்றிற்கும் சிரித்தாள். கலகலவென்று பேசினாள். அந்த அழகில் மாமா வெங்கடேசன் நிலைகுலைந்து போனான். மணந்தால் மீனாட்சியைத்தான் மணப்பது என்று முடிவு செய்தான்.

அஞ்சு பவுன் நகைகூட போட வசதியில்லைன்னு சொல்றாளேடா. அம்மா தம்பியிடம் கேட்டாள்.

பரவால்ல நகையே போடாட்டாலும் பரவால்ல. பொண்ணு அழகார்க்கா அரசாங்க வேலையும் கைல இருக்கு. அப்புறம் என்ன? பேசி முடிச்சுடுங்கோ.

மாமா பிடிவாதம் பிடிக்க மாமியின் அப்பா நீலகண்டனுக்கும் அம்மா தைலாவுக்கும் அலட்டல் கூடியது. அழகிருந்தாலும் கூட அதிகச் சீர் செய்ய முடியாத காரணத்தால் பல வரன்கள் மீனாட்சிக்கும் தட்டிப் போயிருந்த நிலையில் போட்டது போதும் பெண்ணைக் கொடு என்று இவன் கேட்டதும் அவர்களது கர்வம் அதிகரித்தது. வெற்றிலை பாக்கு குதப்பிய வாயோடு அலட்சியமாய் நீலகண்டன் பேச ஆரம்பித்தார். அவர் சொன்னதற்கெல்லாம் மாமா பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினான். யாராவது ஏதாவது கேட்டால் இவர் பெண் தர மறுத்து விடுவாரோ என்று பயந்தான். எனவே யாரையும் பேசவிடாது செய்தான். இதனால் நீலகண்டன் பேசியதே பேச்சாயிற்று. அவர் வைத்ததே சட்டமாயிற்று. அழகான பெண்ணைத் தரப்போகும் மாமனாருக்கு அடிமை சாசனமே எழுதிக் கொடுத்து விட்டாற்போலிருந்தது அவன் நடவடிக்கை. நீலகண்டனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இதுதான் நமக்கு ஏற்ற இடம் என்று வீட்டில் எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்தார்.

பையனுக்கு அப்பா அம்மா யாரும் கிடையாது. ஓரே பையன் அக்காக்களுக்கும் கல்யாணமாயாச்சு. ஸோ கல்யாணத்துக்கப்புறம் அங்கு மீனாட்சி வெச்சதுதான் சட்டம். நாமளும் உரிமையோட போய் தங்கிட்டு வரலாம். மாப்பிள்ளை நம்ம பெண்ணோட அழகுல மதிமயங்கி கிடக்கான், இந்த மயக்கத்துல நாம கேட்டா அவன் நமக்கு வரதட்சணை தருவான் போலிருக்கு. ஏதோ கல்யாணத்தை ஒப்பேத்திட்டா அப்புறம் வருஷாந்திர சீர் செய்யாட்டாலும் கேக்க ஆள் கிடையாது. முடிஞ்சா செய்யறது முடியாட்டா விட்டுடறது. என்ன சொல்ற?

தைலாவும் வாஸ்தவம்தான் என்று தலையாட்டினாள். அதன் பிறகு மாப்பிள்ளையைப் பார்க்கும் போதெல்லாம் மாசம் நாலாயிரம் சம்பாதிக்கற பெண்ணை அதுவும் தேவதையாட்டமா ஒரு பெண்ணை கட்டிக் கொடுக்கப் போறேன் உங்களுக்கு. இதுக்கு நீங்க ரொம்ப பாக்யம் பண்ணியிருக்கணும். நீங்க தலைகீழா நின்னாலும் இப்படி ஒரு பொண்ணு உங்களுக்கு கிடைப்பாளான்னு யோசிங்கோ என்பார் நீலகண்டன். ஆமாம் என்று தலையாட்டுவான் வெங்கடேசன்.

நிச்சயதார்த்தத்தன்று மாமனாரை விழுந்து விழுந்து உபசரித்தான். மீனாட்சி சொக்க வைக்கும் அழகோடு வந்திருந்தாள். அந்த அழகில் இறங்கி அவள் காலடியில் சுருண்டான்.

டேய் வெங்கு கொஞ்சம் கம்பீரமா நடந்துக்கோடா. இப்படி குழைஞ்சா உங்க மாமானார் உன்னை வெத்தலைல தடவி நாலா மடிச்சுப் போட்டுண்டுடுவார். அக்காக்கள் கிண்டலாக எச்சரித்ததை அவன் சட்டை செய்யவில்லை. பெண்ணின் அழகு அந்த அளவுக்கு அவன் புத்தியை மழுங்கடித்திருந்தது. இதன் பலனை கல்யாணத்தில் அவனைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் அனுபவித்தார்கள்.

கல்யாணச் சத்திரத்தில் வசதியான அறையை பிள்ளை விட்டுக்கு கொடுக்காமல் தங்களுக்கு வைத்துக் கொண்டார்கள். பதிலுக்கு சமையல் கட்டுப்பக்கமிருந்த புகை சூழ்ந்த சிறிய அறை ஒன்றை மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு ஒதுக்கினார்கள்.

என்னடா இது இப்படி ஒரு ரூம்? நா போய் நல்ல ரூமா கேட்கட்டா? என்று கிளம்பின அக்காவை பாய்ந்து தடுத்தான். அதெல்லாம் எதுவும் கேட்க வேண்டாம். இருக்கற இடத்திலேயே அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ போதும் என்றான்.

ஜானவாச சாப்பாட்டில் பாதி இலைக்கு போளி வரவேயில்லை. இந்த பக்கம் போளி வரலையே வெங்கடேசனின் உறவுக்காரர் அந்த பக்கம் வந்த நீலகண்டனிடம் கேட்க அவர் உள் பக்கம் பார்த்து சத்தமாய் ஒரு குரல் கொடுத்தார்.

டேய்.... இங்க சில பேர் போளியே பார்த்ததில்லையாம். கொண்டு வந்து கொட்டுங்கோ. முடிஞ்ச வரை திங்கட்டும் என்று சொல்லிக் கொண்டே நடக்க போளி கேட்ட உறவினர் முகம் செத்துப் போயிற்று. பாதி சாப்பாட்டில் எழுந்து போய் விட்டார் அவர். இந்த செய்தி வெங்கடேசன் காதுக்கு போனதும் அவன் மாமனாரை கூப்பிட்டு கண்டிப்பான் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். பந்தில உட்கார்ந்து எதுக்கு இப்படி எதையானும் கேட்டு என் மானத்தை வாங்கித் தொலைக்கணும்? காணாததைக் கண்டா மாதிரி கேட்பானேன்? வாங்கிக் கட்டிப்பானேன்? போளி இல்லாமல் சாப்டாட்டா செத்தா போய்டுவேள் என்று எறிந்து விழுந்தவனை அயர்ந்து போய் பார்த்தது அவன் உறவுகள். இனி அவனிடம் எந்த குறை சொன்னாலும் பயனில்லை என்று புரிந்தது. எக்கேடும் கெட்டு ஒழியட்டும் என்று வாய்மூடிக் கொண்டன. நீலகண்டனிடம் ஏதாவது பேசுவதற்குக்கூட பயந்து ஒதுங்கிச் சென்றன.

ஜானவாசம் - உறவுகளுக்கு வனவாசம் போலிருந்தது. முகூர்த்தத்தன்று காலை அதைவிட மோசமாயிற்று நிலைமை. முதல் டிகாக்ஷன் காப்பி பெண் வீட்டுக்கு போயிற்று. நாலு மணிக்கே எழுந்து விட்ட பிள்ளை வீட்டினருக்கு காப்பி வருவதற்கு ஆறுமணியாயிற்று. அதிலும் ஒரே புகை வாசனை. வெங்கடேசன் யாரையும் வாயைத் திறக்கக்கூடாது என்றான். தன் நண்பர்களை மட்டும் அருகிலிருந்த டீக்கடைக்கு அழைத்துச் சென்று நல்ல காப்பியாக வாங்கிக் கொடுத்தான்.

முகூர்த்தத்திற்கு முன்பே இந்த கூத்து என்றால் பெண் கழுத்தில் தாலி ஏறிய பிறகு கேட்கவா வேண்டும் அத்தனை பேரும் வாய் திறக்கவே அச்சம் என்பது போல் நடந்து கொண்டார்கள் முகூர்த்த சாப்பாடு சகிக்காமல் இருந்தது. சாம்பார் ரசம் போலவும், ரசம் வெந்நீர் போலவுமிருந்தது. சாதம் ஒரு பக்கமாய் வெந்து பாதி அரிசியாகவும் பாதி சாதமாகவும் பொருக்கரிசி தட்டிப்போயிருந்தது. இதென்ன வேகவேல்லயே - பாதி அப்டியே அரிசியார்க்கே சாப்பிட உட்கார்ந்த யாரோ ஒருவர் கேட்டதுதான் தாமதம் நீலகண்டன் கிடுகிடுவென்று வந்து அவர் சட்டையைப் பிடித்துக் கொண்டார். "சாப்பிடறது ஓசி, இதுல குறை வேறயா....? ஒரு கல்யாணம் பண்ணி பார்த்தாதானேய்யா தெரியும்? பெண்ணைப் பெத்தவன்னா கேவலமா போச்சா உங்களுக்கெல்லாம்? பத்து ரூபாய்

Enjoying the preview?
Page 1 of 1