Kaadha(le)la Nimmathi…
4/5
()
About this ebook
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Read more from Infaa Alocious
Allikonda Thendral... Rating: 5 out of 5 stars5/5Vanna Nizhalgal... Rating: 5 out of 5 stars5/5Enthan Thanjam Neeye... - Part 1 Rating: 5 out of 5 stars5/5Kanavey Kanivey... Rating: 5 out of 5 stars5/5Kannamoochi Yenada... Rating: 5 out of 5 stars5/5Enthan Thanjam Neeye... - Part 2 Rating: 5 out of 5 stars5/5Puthithai Pirantheaney... Rating: 4 out of 5 stars4/5En Vazhvin Thean Thuli... Rating: 4 out of 5 stars4/5Unakkagavey Naan... Rating: 5 out of 5 stars5/5Velli Nilavey... Rating: 0 out of 5 stars0 ratingsEn Nesa Asura Part - 1 Rating: 4 out of 5 stars4/5Thoonga Vithaigal... Rating: 4 out of 5 stars4/5Ennai Urumaatrinai... Rating: 5 out of 5 stars5/5Kaavalan Naane Rating: 4 out of 5 stars4/5Nerungivaa Nenjamey… Rating: 4 out of 5 stars4/5Poongatrai Vanthavale... Rating: 4 out of 5 stars4/5Nilavey Malarnthidu... Rating: 4 out of 5 stars4/5Solla Thudikkuthu Manasu Rating: 4 out of 5 stars4/5Anbe Anbe... Rating: 4 out of 5 stars4/5Kaathirundhean sakiye… Rating: 4 out of 5 stars4/5Nee Enthan Puthumaiye Rating: 4 out of 5 stars4/5Uyir Thunaiye.... Rating: 4 out of 5 stars4/5Mouna Yutham Rating: 4 out of 5 stars4/5En Nesa Asura Part - 2 Rating: 4 out of 5 stars4/5Pooncholai Kiliye… Rating: 4 out of 5 stars4/5Jeevan Rendum Sernthathey... Rating: 0 out of 5 stars0 ratingsNeeyindri Ponaal…, Naan Veezhnthu Poven… Rating: 4 out of 5 stars4/5Un Nizhalil Naan - Part 1 Rating: 4 out of 5 stars4/5Maathummai... Rating: 5 out of 5 stars5/5
Related authors
Related to Kaadha(le)la Nimmathi…
Related ebooks
Aasaiyil Ore Kaditham Rating: 4 out of 5 stars4/5Thavariya Tharunangal… Rating: 4 out of 5 stars4/5Un Nizhalil Naan - Part 2 Rating: 4 out of 5 stars4/5Un Nizhalil Naan - Part 1 Rating: 4 out of 5 stars4/5Pooncholai Kiliye… Rating: 4 out of 5 stars4/5En Vazhvin Thean Thuli... Rating: 4 out of 5 stars4/5Puthithai Pirantheaney... Rating: 4 out of 5 stars4/5Azhagin Muzhumathi Neeye...! - Part - 2 Rating: 5 out of 5 stars5/5Anbe Anbe... Rating: 4 out of 5 stars4/5Kaigal Korthu... Rating: 4 out of 5 stars4/5Nizhale... Nijamanal... Rating: 4 out of 5 stars4/5Infaa Alociousyin Sirukathaigal Rating: 5 out of 5 stars5/5Azhagin Muzhumathi Neeye...! - Part - 1 Rating: 5 out of 5 stars5/5Kannanin Seethai Rating: 3 out of 5 stars3/5Theeyiniley Valar Jyothiye Rating: 5 out of 5 stars5/5Nilavey Malarnthidu... Rating: 4 out of 5 stars4/5Maya Rating: 3 out of 5 stars3/5Enna Solla Pogirai...? Rating: 5 out of 5 stars5/5Kaavalan Naane Rating: 4 out of 5 stars4/5Poongatrai Vanthavale... Rating: 4 out of 5 stars4/5Thuli Thuliyai... Rating: 4 out of 5 stars4/5Ninaivey Sangeethamai... Rating: 4 out of 5 stars4/5Thedal Sugamanathu Rating: 3 out of 5 stars3/5Magarantha Pookkal... Rating: 4 out of 5 stars4/5Nee Enthan Puthumaiye Rating: 4 out of 5 stars4/5En Nesa Asura Part - 2 Rating: 4 out of 5 stars4/5Neeyindri Ponaal…, Naan Veezhnthu Poven… Rating: 4 out of 5 stars4/5Agalathe Un Ninaivu...! Rating: 5 out of 5 stars5/5En Nesa Asura Part - 1 Rating: 4 out of 5 stars4/5Ennai Urumaatrinai... Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kaadha(le)la Nimmathi…
33 ratings2 reviews
- Rating: 5 out of 5 stars5/5prasanna and shanthi character very nice., lovely novel.
infaa mam novels all are very nice and romantic novel keep rocking1 person found this helpful
- Rating: 5 out of 5 stars5/5Beautiful story ??. Very interesting and emotional. Enjoyed very nice
1 person found this helpful
Book preview
Kaadha(le)la Nimmathi… - Infaa Alocious
http://www.pustaka.co.in
காத(லே)லா நிம்மதி..
Kaadha(le)lo Nimmathi…
Author:
இன்பா அலோசியஸ்
Infaa Alocious
For more books
http://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
வடபழனி முருகன் கோயிலில் கண்மூடி முருகனை மனமுருக வேண்டிக் கொண்டிருந்தாள் சாந்தி. அவள் பெயரில் இருக்கும் சாந்தி அவள் மனதுக்குள் கொஞ்சம் கூட இருக்கவில்லை. இமைகள் அழுத்தமாக மூடியிருக்க, அந்த அழுத்தத்தை மீறி கண்கள் லேசாக கலங்கி, கண்ணீர்த்துளி வெளியே எட்டிப் பார்த்தது.
அம்மாடி... பிரசாதம் வாங்கிக்கோ...
அவளை வாரம் தவறாமல் அங்கே பார்ப்பதால் ஏற்பட்ட பரிட்சயத்தில் குருக்கள் குரல் கொடுக்க, விழிகளை பட்டென திறந்து கை நீட்டி அவர் கொடுத்த குங்குமத்தையும், விபூதியையும் பெற்றுக் கொண்டாள்.
அவள் கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்தவர், ஒரு நொடி தயங்கி நின்று, கல்யாண நாளும் அதுவுமா ஏம்மா கண்ணில் ஜலம் வச்சுண்டு இருக்க? எல்லாம் அந்த முருகன் பாத்துப்பான்...
விஷயம் என்னவென்று தெரியவில்லை என்றாலும், அவளை இத்தனை வருடங்களாக பார்ப்பவர் என்ற விதத்தில் ஆறுதல் சொன்னார்.
அவரைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தவள், தன் கண்ணீரை நாசூக்காக புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.
அவளிடம் என்ன பிரச்சனை என கேட்க இதழ்கள் வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டாலும், இத்தனை வருடங்களில் அவளாக அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசியிராத காரணத்தால், அவளிடம் விஷயம் என்னதென்று கேட்காமல் அமைதியானார்.
அதைவிட சந்நிதியில் தங்கள் பாரத்தை இறக்கி வைக்கும் மக்கள் அனைவரிடமும் சட்டென அவர்கள் விஷயத்தை அவரால் கேட்டுவிட முடியுமா என்ன? அப்படியே கேட்டாலும் அவர்கள் சொல்ல வேண்டும் என்பது என்ன கட்டாயம்?
இவையெல்லாம் விட, மற்றவர் விஷயத்தில் தானாக மூக்கை நுழைக்க முடியாதே. அதை எத்தனைபேர் விரும்புவார்கள் என்றும் சொல்வதற்கு இல்லையே, எனவே அமைதியாக அவள் முகம் பார்த்தார்.
ரொம்ப நன்றி...
அவள் திருவாய் மலர, அவளது குரல் இனிமையில் ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டார்.
அம்மாடி... முருகனை நினைச்சு ஒரு பாட்டு பாடேன்... உன் மனசில் இருக்கும் குறை எல்லாம் காணாமல் போய்டும்
வாரம் தவறாமல் வருபவள், சில வாரங்களில் மனமுருக கடவுளை வணங்கி பாடுகையில், அங்கே இருக்கும் மனிதர்கள் அனைவருமே ஒரு நிமிடம் அதில் கட்டுண்டுதான் போவார்கள்.
எனவே, பாடினால் அவளது மன பாரம் குறையலாம் என்பதால் சற்று வற்புறுத்தும் குரலிலேயே உரைத்தார். தான் பேசியதற்கு அவள் சிறு முகச்சுழிப்பாவது காட்டியிருந்தால் தன் வேலையைப் பார்க்க விலகிச் சென்றிருப்பாரோ என்னவோ, அவள் மனம் கலங்கி இருக்கையில் அவளை அப்படியே விட அவருக்கு மனமில்லை.
அவர், அவளை பாடச் சொல்ல, அவள் இதழ்களில் மெல்லிய விரக்தி புன்னகை. அவளது நினைவுகள் முழுவதும் அந்த நேரம் தன் கணவனையே சுற்றி வந்தது. திருமணம் முடிந்து இன்றோடு நான்கு வருடங்கள் கடந்து, ஐந்தாவது வருடத்தில் அடியெடுத்து வைத்து விட்டார்கள்.
ஆனால், அவளது கணவனுக்கு மனைவி பாடுவாள் என்பது கூட தெரியவே தெரியாது. அவ்வளவு ஏன்...? அவளுக்கு என்ன பிடிக்கும்? அவளது ரசனை, விருப்பம்? ஆசை...? கனவுகள்...? எதுவும் தெரியாது. அதில் பெரிய விஷயம், அவள் அவன்மேல் உயிரையே வைத்திருக்கிறாள் என்பது கூட தெரியாது.
இதையெல்லாம் விட மிகவும் கொடுமையான விஷயம், இன்று அவர்களது திருமணநாள் என்றாவது அவனுக்குத் தெரியுமோ என்னவோ? காலையில் பால் பாயாசம் வைத்து கொடுத்தபொழுது கூட, ஒரு வார்த்தை ஏன் எதற்கு என்று கேட்காமல் குடித்துவிட்டு சென்றுவிட்டான்.
அவனுக்கு திருமணநாள் நினைவில்லை என்பது கூட அவளுக்குப் பரவாயில்லை, ஆனால்... தான் அவனுக்கு பாயாசம் கொடுத்தபொழுது ‘இதை எதற்காக செய்தாய்? இன்று என்ன விசேஷம்?’ என அவன் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பாளே.
அவனுக்கு நினைவில்லை என்பதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், அவனிடம் அவளே உண்மையைச் சொல்லியிருப்பாள். ஆனால், அப்படி எதையும் செய்யாமல், கிடைத்ததை குடித்துவிட்டு அவன் விலகிச் சென்றிருக்க, மனதுக்குள் பெரும் பாரம் அழுத்தியது.
அவனுக்கு கடவுள் நம்பிக்கை விட்டுப்போய் பல வருடங்கள் கடந்துவிட்டன என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், தங்கள் திருமண நாளுக்காவது, அவனுக்காக இல்லை என்றாலும், அவளுக்காக, அவளது விருப்பத்துக்காக உடன் வரவேண்டும் என்று கூட இல்லை, அழைத்துவந்து வாசலில் இறக்கி விட்டுச் சென்றால் கூட சந்தோஷப்படுவாளே.
ஆனால், அவளே பிடிக்காத மனைவி என்கையில், தான் நினைப்பது ரொம்பவே அதிகப்படி என்பது அவளுக்குப் புரிந்தது. சில விஷயங்கள் புத்திக்குத் தெரிந்தாலும், மனதுக்கு கொஞ்சம் கூட புரிவதே இல்லை. அவள் மட்டுமா ஆகாத மனைவி? அவளது பெயர் முதற்கொண்டு எதுவுமே அவனுக்குப் பிடிக்காதே.
‘சாந்தியாம் சாந்தி... பேரைப் பார்...? என் பாட்டிக்கு வைக்க வேண்டிய பேர்...’ அவன் வெறுப்பாய் உமிழும் வார்த்தைகள் செவியில் இப்பொழுதும் ஒலிப்பது போன்ற பிரம்மை.
ஆனால் அவளுக்கு... அவனை கொள்ளை கொள்ளையாய் பிடிக்கும். தனது கணவனாக வரப் போகிறவன் என என்றைக்கு அவனது புகைப்படம் அவளது கரத்தில் கொடுக்கப்பட்டதோ... அன்றைக்கு முதலே அவனை அவ்வளவு பிடித்தது.
இத்தனைக்கும் பார்த்தவுடன் வசீகரிக்கும் தோற்றம் எதுவும் அவனிடம் இருக்கவில்லை. வெகு சாதாரண தோற்றமே. ஆனால்... அவனிடம் அவளுக்கு ஒரு விஷயம் பார்த்தவுடன் பிடித்தது என்றால், அது அவனது கீழ் தாடையின் நடுவில் இருந்த அந்த குழி.
மிகச் சரியாக நடுவில், சுட்டுவிரலின் நுனி உள்ளுக்குள் அடைக்கலம் ஆகும் அளவுக்கான அழகான குழி. அதில் விழுந்தவள்தான் என்று சொல்லலாம். அவனது தாடை குழிக்குள் தன் விரலால் விளையாட வேண்டும் என்ற அவளது ஆசை இத்தனை வருடமாகியும் நிறைவேறவே இல்லை.
அவ்வளவு ஏன்? அவனை அவளாக தொட்டுப் பேசுவது கூட கிடையாதே. ஆனால் அவன்மேல் அவள் கொண்ட கண்மூடித்தனமான நேசம் மட்டுமே அவர்களது வாழ்க்கையை இத்தனை வருடங்கள் கடத்தி வரச் செய்திருக்கிறது எனச் சொன்னால் மிகையில்லை.
பாடும்மா...
குருக்களின் குரல் அவளைக் கலைக்க, தன் நினைவுகளில் இருந்து கலைந்தவள், தன் திருவாய் மலர்ந்தாள்.
அவள் கண்களை மூடி, கரம் குவித்து பாடத் துவங்கவே, சுற்றுப்புறம் அனைத்தும் ஒரு நொடி உறைந்தாற்போல் இருந்தது. சாந்தி... நடுத்தர வர்க்கத்து பெண்... வயது இருபத்து ஆறு... மூன்று வயது ஹர்ஷத்தின் அம்மா.
பிரசன்னாவின் மனைவி... பிரசன்னா திராவிட நிறமென்றால், சாந்தி இளம் மஞ்சள் நிறம். இடையைத் தொடும் கூந்தல். பார்ப்பவர் அனைவரும், நிச்சயம் அழகி என சொல்லும் முகவெட்டு. ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேசத் தெரியாத குணம்.
அந்த குணமே பிரசன்னாவுக்கு சாதகமாக இருக்கிறதோ? அது அந்த கடவுளுக்கே தெரியும். சாந்தி கண்ணை மூடி முருகனை துதித்து பாடி முடிக்க, அங்கே இருந்த அனைவருமே அவளைப் பார்த்து புன்முறுவல் புரிந்தார்கள்.
அனைவரது முகங்களிலும் மெல்லிய பிரமிப்பும், கூடவே வாழ்த்தும் நிறைந்து இருந்தது. அருமையா பாடினம்மா... ஆம்படையான் ஊர்ல கிடையாதோ?
இத்தனை வருடங்களாக அவரும் பார்க்கிறார், ஒரு நாள் கூட அவளுடன் அவன் கோவிலுக்கு வந்ததே இல்லை.
அப்படி இருக்கையில், கணவன் ஊரில் இருக்கவில்லையோ என்று அவர் நினைப்பதில் வியப்பேதும் இல்லையே. ஒரு நொடி அவரது கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் திகைத்து, சோர்ந்து, மீண்டும் கண்கள் கலங்கவே வேகமாக முகத்தை இயல்பாக்க போராடினாள்.
‘தான் இந்த கேள்வியை அவளிடம் கேட்டிருக்கக் கூடாது’ என்பது தாமதமாகப் புரிய, அவள் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடந்தார்.
அவர் செல்லவே, ஆழமாக மூச்செடுத்தவள், அங்கே இருந்த குளத்தின் அருகே சென்று அமர்ந்தாள். அது விசேஷ நாள் இல்லை என்பதால், கோவிலில் அவ்வளவாக கூட்டம் இருக்கவில்லை. அமைதியாக சென்று அமர்ந்தவள், ‘வாழ்க்கை இப்படியேத்தான் போகுமா?’ ஏக்கமாக எண்ணிக் கொண்டாள்.
அவனது அலட்சியம், பாராமுகம், பேச்சுக்கள்... அனைத்தையும் நான்கு வருடங்களாக கடந்து வந்துகொண்டுதான் இருக்கிறாள். இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட, ‘என்னைப் பிடிக்காதவர் ஏன் என்னைத் திருமணம் செய்து கொண்டார்?’ என அவள் எண்ணியதே இல்லை.
அவளுக்குத் தெரியும், அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை என்பதை விட, அவளை விட, வேறு ஒருத்தியை அதிகம் பிடித்திருக்கிறது என்பதுதான் அதிகம் வலித்தது. அதையும், ஒவ்வொரு நாளும் அவளது நடத்தை, பேச்சு இவற்றால் சொல்லிக் காட்டுகையில்... அவளது கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் கன்னத்தில் வழிந்தே விட்டது.
இன்று காலையில் எழுந்தது முதல், அவன் அலுவலகம் கிளம்பிச் செல்லும் வரைக்கும், அவன் முகத்தையே பாராமல் பார்த்திருந்த தன் செய்கை? அவன் வாழ்த்தப் போவதில்லை, அவனுக்கு நினைவுக்கு இருக்காது என நன்றாகவே தெரிந்தாலும், மனம் கேட்காமல் ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து ஏமாந்த அந்த வலி...
ஆழமாக மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக் கொள்ள போராடினாள். கடந்த வருடங்களில் கூட இந்த நாள் இப்படித்தான் கழிந்தது, இந்த வருடம் மட்டும் என்ன?’ தன்னையே கேட்டுக் கொண்டவளுக்கு விடை மட்டும் தெரியவே இல்லை.
அவளின் மனதில் வலி அதிகரிக்கையில் எல்லாம், அவன்மேல் அவள் கொண்டிருக்கும் காதல் ஒரு படி அதிகரிப்பதை உணர்ந்தாள். அந்த காதல் அதிகரிக்கப் போய்த்தான், ஏமாற்றம் அதிகம் தாக்குகிறது என்பது புரிய, தன்னைக் குறித்தே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பிரசன்னா இந்த அளவுக்கு அவளிடம் நடந்து கொள்கையிலேயே அவன்மேல் பையித்தியமாக இருக்கிறாள் என்றால், அவன் கொஞ்சமே கொஞ்சம் மாறிவிட்டால்... அவன் ‘உயிரை விட்டுவிடு’ எனச் சொன்னால் கூட கண்ணை மூடிக்கொண்டு செய்து விடுவாள் என எண்ணிக் கொண்டாள்.
எவ்வளவு நேரமோ தெரியாது... தன்னை மறந்து யோசனையிலேயே அமர்ந்திருந்தவள், வெயில் கொஞ்சமாக உறைக்க, தன் மணிக்கட்டை திருப்பிப் பார்த்தவள், படியில் இருந்து எழுந்து கொண்டாள்.
வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை விட, ஹர்ஷத்தை பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டும் என்பதற்காக மட்டுமே அங்கிருந்து அகன்றாள். கோயிலுக்கு வருகையில், அலைபேசியை கூட அவள் எடுத்து வருவதில்லை.
பொதுவாகவே அவன் அலைபேசியில் அழைப்பதில்லை என்பதால் பெரிதாக அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இன்றைக்கு, தனது தாயும் தங்கையும் நிச்சயம் அழைப்பார்கள் என்பது தெரிந்தும் எடுத்துவரவில்லை.
அவர்கள் கேட்கும் கேள்விக்கும், தங்கையின் கேலிக்கும் இன்று பதில் சொல்லி சம்மாளிக்க முடியும் என்ற நம்பிக்கையே அவளுக்கு இருக்கவில்லை. எனவே வேண்டும் என்றே அதை வீட்டில் விட்டுச் சென்றிருந்தாள்.
தன் டூவீலரை பார்கிங்கில் இருந்து எடுத்தவள், அடுத்த பத்தாவது நிமிடம் தன் வீட்டில் இருந்தாள். அலைபேசியை எடுத்துப் பார்க்க விருப்பம் இல்லை என்றாலும், கைகள் தாமாகவே அதை எடுக்க, அதில் இருந்த மிஸ்ட் கால்களைப் பார்த்தவள் இனிதாக அதிர்ந்தாள்.
2
சாந்தி தன் அலைபேசியை எடுத்துப் பார்க்கப் போகையில், நிச்சயம் பிரசன்னாவிடம் இருந்து எந்தவிதமான அழைப்பும் இருக்கப் போவதில்லை எனத் தெரிந்தேதான் எடுத்தாள். ஆனால், அவள் எதிர்பார்த்ததுக்கு மாறாக, அவனிடமிருந்து இரண்டு அழைப்புகள் இருக்க, இனிதாக அதிர்ந்தாள்.
அவளது தாயின் அழைப்பு, தங்கையின் அழைப்பு, அதைவிட ஹர்ஷத்தின் பள்ளியில் இருந்து வந்திருந்த இரண்டு மூன்று அழைப்புகளை கூட விடுத்து, அவனுக்கு அழைத்தாள்.
இந்த நான்கு வருடங்களில் அவனுக்கு அழைத்ததே இல்லை என சொல்லிவிட முடியாது. அதே நேரம், கடைசியாக என்றைக்கு அவனிடம் அலைபேசியில் பேசினாள் என்பதும் அவளுக்கு நினைவில்லை.
அவனது எண்ணை அழுத்துவிட்டு படபடப்பாக காத்திருக்க, முதல் ரிங் முடிவதற்கு முன்பாகவே அவளது அழைப்பை ஏற்றான். அவளது அழைப்புக்காக காத்துக்கொண்டே இருந்திருப்பான் போல, இல்லையேல் அலைபேசியை கரத்திலேயே வைத்திருந்தானோ? ஏதோ ஒன்று.
‘என்ன சொல்வார்? வாழ்த்துவாரா? இல்லன்னா...’ அந்த ஒரு ரிங் முடிவதற்கு முன்பே அவளது எண்ணம் வேகமாக சுழன்று, இதயம் மெல்லியதாக பரவசமாகி, அவனது வார்த்தைகளுக்காக ஏங்கிப் போனாள்.
ஆனால் அவனுக்கு அப்படியெல்லாம் எந்த எண்ணமும் இல்லை என்பதை வாயைத் திறந்த மறு நொடியே நிரூபித்தான். அழைப்பை ஏற்றவன், "போனை வச்சுட்டு எங்கே போய் தொலைஞ்ச...? உனக்கெல்லாம் எதுக்கு போன்? உன் பிள்ளை ஸ்கூல்ல விழுந்து வாரிட்டானாம்... போய் என்னன்னு பாரு...
வேலை நேரத்தில் தேவையில்லாத டென்ஷன் எனக்கு. நான் ஆபீஸ் வேலையைப் பாக்குறதா இல்லன்னா உன் வேலையைப் பாக்குறதா? அதுசரி... என் நம்பரை எல்லாம் அங்கே ஏன் கொடுத்து வச்சிருக்க? உன்னை...
பல்லைக் கடித்தவன் அலைபேசியை பட்டென வைத்துவிட்டான்.
எங்கேயோ வானத்தில் பறந்த அவளது உணர்வுகளை எல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு, பட்டென அவன் அலைபேசியை வைத்துவிட, துடித்துப் போனாள். அவன் குரலில் இருந்த கோபத்தை விட, அவன் வார்த்தைகள் ஏற்படுத்திய வலிதான் அதிகம் இருந்தது.
‘உன் பிள்ளை...’ என்ற அவனது வார்த்தைகள்... ‘அவன் என்ன எனக்கு மட்டுமா பிள்ளை? ஏன் அவருக்கு அதில் பங்கில்லையா?’ அந்த எண்ணத்தை கோபமாக இல்லை, ஆற்றாமையாக எண்ணிக் கொண்டாள்.
‘வேலை நேரத்தில் தேவையில்லாத டென்ஷன்...’ அப்படியென்றால் பிள்ளைக்கு அடிபட்டிருப்பது அவருக்கு தேவையில்லாத டென்ஷனா? மூன்று வயது குழந்தைக்கு அடிபட்டுவிட்டது எனச் சொன்னால், மூன்றாவது மனிதனே கலங்குவானே... இவர்...?’ கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது.
அதையெல்லாம் விட, ‘என் நம்பரை எல்லாம் அங்கே ஏன் கொடுத்து வச்சிருக்க?’ இந்த வார்த்தைகளை எப்படி அர்த்தம்கொள்ளவென்றே அவளுக்குத் தெரியவில்லை.
அவனது அப்பாவின் எண்ணை பள்ளியில் கொடுப்பது அவ்வளவு பெரிய கொலைக் குற்றமா என்ன? எதுவாக இருந்தாலும் முதலில் அவளது எண்ணுக்கு தொடர்பு கொண்டு, பிறகு அவள் எடுக்கவில்லை என்றால் மட்டுமே பிரசன்னாவுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என சொல்லித்தான் கொடுத்திருந்தாள்.
அதேபோல் அவளுக்கு தொடர்பு கொண்டு, அவள் எடுக்கவில்லை என்று சொன்ன பிறகுதான் அவனுக்கு அழைத்து சொல்லியிருக்கிறார்கள். அப்பொழுது கூட, குழந்தைக்கு அடிபட்டுவிட்டதே என்ற பதைப்பு கொஞ்சம் கூட இல்லாமல், அவளுக்குத்தான் அவன் அழைத்திருக்கிறான்.
இதுவே வேறு தகப்பனாக இருந்திருந்தால், இந்நேரம் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றிருப்பான். இங்கே அவள் மட்டுமா ஆகாத மனைவி, குழந்தையும் கூடத்தானே.
எத்தனையோ ஆண்களுக்கு, ஆண் குழந்தை வேண்டும்... தன் பேர் சொல்ல ஒரு ஆண் வாரிசு வேண்டும் என வெறியே இருக்க, இவன் அதிலும் மிகவும் வித்தியாசமானவன் தான்.
ஹர்ஷத் பிறக்கும் முன்பே, ‘எனக்கு பெண் குழந்தை வேண்டும், அதற்கு அவனது முன்னாள் காதலியின் பெயர் வைக்க வேண்டும்’ என அவன் சொன்ன பொழுது அவள் மனதுக்குள் தவித்த தவிப்பு சாந்திக்கு மட்டுமே தெரியும்.
‘ஹையோ... அப்படி பெண் குழந்தை பிறந்துவிட்டால், அவன் அந்த குழந்தையை அந்த பெயரிட்டு அழைப்பதை வேறு தாங்கிக் கொள்ள வேண்டுமா?’ கருவை வயிற்றில் சுமந்த நாளெல்லாம் அவ்வளவு பயந்தாள்.
ஆனால், அப்பொழுதும் கூட மனதின் ஓரம், அவரது ஆசைப்படி நடந்துவிட்டால் பரவாயில்லை என ஒரு மனம் விரும்பியதை எந்த விதத்தில் சேர்க்க? அதுவும், அவள் கருவை சுமந்த அந்த ஒன்பது மாதங்களில் பெண் குழந்தை என எண்ணிக் கொண்டு அவள் மேடிட்ட வயிற்றை அவன் மெல்லியதாக வருடும் நேரம்... அது பெண்குழந்தையாக மட்டுமே இருக்க வேண்டும் என அவள் விரும்பி இருக்கிறாள்.
அது அவன்மேல் வைத்த காதலுக்காக மட்டுமே. அந்த குழந்தை பிறந்து வளர்ந்து, அந்த ஜென்மம் முழுவதும் அந்த குழந்தையை அவனது முன்னாள் காதலியின் பெயரைச் சொல்லி அவன் அழைப்பதை எப்படி சகித்துக் கொள்வாள்? என்பதைப் பற்றியெல்லாம் அந்த நொடி அவள் சிந்தித்ததே இல்லை.
ஆனால், அவள் சிந்திக்காத அந்த விஷயத்தை, கடவுள் சிந்தித்தார் போல... அவள் வயிற்றில் ஆண் குழந்தையை உருவாக்கிக் கொடுத்தார். பிரசன்னா அவளை வார்த்தைக்கு வார்த்தை, கிடைக்கும் சந்தர்ப்பங்கள் என அனைத்திலும் அவளை காயப்படுத்தினாலும், ஒரு விஷயத்தில் அவனை பாராட்டியே ஆக வேண்டும்.
இந்த நான்கு வருடங்களில் அவர்களது தாம்பத்திய உறவை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆசை அறுபதுநாள், மோகம் முப்பதுநாள் என்ற தொண்ணூறு நாள் கணக்கு கூட பிரசன்னாவிடம் இருந்தது இல்லை. அவ்வளவு ஏன்? திருமணம் முடிந்து, முதலிரவுக்குப் பிறகு அவளை அவன் நாடுகையில், ஹர்ஷத் அவளது வயிற்றில் இரண்டு மாத கருவாக இருந்தான்.
முதலிரவில் அவனது அணுகுமுறையில் கூட அவள் பெரிதாக எந்த வித்தியாசத்தையோ, பிடித்தமின்மையையோ உணரவில்லை. அவளை வெகு மென்மையாக அணுகிய விதம்... அவனுக்கான தேவையை விட, அவளுக்காக பார்த்தானோ என்றுதான் அவளுக்கு இன்று வரைக்கும் தோன்றும்.
அவனது நெருக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் கலங்கியபொழுது, என்ன... முடியலையா...? விலகிடவா...?
அவளிடம் கேட்ட அந்த நொடி, தன்னை அறியாமலே அவனை இறுக அணைத்திருந்தாள்.
‘சாந்தி... உள்ளே என்ன நடந்தாலும் தாங்கிக்கோ... மாப்பிள்ளை மனசறிஞ்சு நடந்துக்கோ. எதையும் முடியலன்னு சொல்லிடாதே...’ அவளது ஒன்றுவிட்ட அத்தை அவளுக்கு சொல்லி அனுப்பியது நினைவுக்கு வர, சற்று தெளிய முயன்றாள்.
கூடவே, இல்ல... பரவாயில்லை...
அவள் சொல்ல, அதன் பிறகே அவளை