Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thuli Thuliyai...
Thuli Thuliyai...
Thuli Thuliyai...
Ebook462 pages4 hours

Thuli Thuliyai...

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109204037
Thuli Thuliyai...

Read more from Infaa Alocious

Related authors

Related to Thuli Thuliyai...

Related ebooks

Reviews for Thuli Thuliyai...

Rating: 4.166666666666667 out of 5 stars
4/5

30 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thuli Thuliyai... - Infaa Alocious

    http://www.pustaka.co.in

    துளி துளியாய்...

    Thuli Thuliyai…

    Author:

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    http://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    1

    மாலை நேர சூரியன் கூட்டுக்குள் அடைந்து பத்து நிமிடங்கள் கடந்திருக்க, தன் டியூட்டி நேரம் முடிய, தலையில் இருந்த நர்ஸ் 'கேப்'பை கழட்டிய மிருதுளா கொண்டைக்குள் சுருண்டிருந்த முடியை கைகளால் அளைந்தவாறே அவர்களுக்கான ஓய்வறைக்குள் நுழைந்தாள்.

    காலை ஆறுமணிமுதல் மாலை ஆறுமணிவரை வேலை பார்த்த களைப்பு அவள் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. மாறாக, மனம் நிறைய ஒருவித திருப்தி, அமைதி நிரம்பி வழிந்தது.

    பிடித்த வேலையை செய்வதில் இருக்கும் திருப்தியை அவள் முகம் பிரதிபலிக்க, அங்கே இருந்த கண்ணாடியைப் பார்த்து தன் முகத்தை சற்று திருத்திக் கொண்டவள், 'அப்பா வந்து வெயிட் பண்ணிட்டு இருப்பாங்களே..' எண்ணியவள் நிதானமான தன் செய்கையை சற்று துரிதமாக்கினாள்.

    தன் வெள்ளை கவுனை அவள் கழற்ற, கதவை படார் என திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள் அவளது தோழி வான்மதி.

    திடுக்கிட்டு போனவள், அறைக்கதவை தட்டாமல் வந்தது யார் எனக் கோபமாக திரும்ப, அங்கே இருந்த தோழியைப் பார்த்தவள், ஏண்டி எரும.., உள்ளே வர முன்னாடி கதவை தட்ட மாட்ட.. வேகமாக தன் உடையை சரி செய்து கொள்ள முயன்றவாறே தோழியிடம் சாடினாள்.

    ம்கும்.., என்கிட்டே இல்லாத என்னத்த நீ புதுசா வச்சிருக்கியாம்.., போடி.. நொடித்துக் கொண்டவள்,கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் வாதாட, தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

    அதுக்கு.. தோழியின் முதுகிலேயே ஒன்று போட, அதை தூசிபோல் தட்டியவள், அதை கண்டுகொள்ளவே இல்லை.

    இப்போ எதுக்குடி இவ்வளவு அவசரமா வந்த..? முதல்ல வெளியே போடி.. அவளைப் பிடித்து தள்ளினாள்.

    ம்.., நீ.. நீச்சல் உடையில் நிப்ப.., அதை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்..., போதுமா.., வ..,வ.. அவள் அளவம் காட்ட, அவளை கொலை வெறியில் முறைத்தாள்.

    இப்போதான் எனவோ நான் என்னத்த புதுசா வச்சிருக்கேன்னு கேட்ட, அதுக்குள்ளே இப்படி சொல்ற, சரி என்னத்துக்கு இப்போ கதவைக் கூட தட்டாமல் உள்ளே வந்த..? உன் டியூட்டி டைம் முடிஞ்சதா என்ன? அவள் உடையை மாற்ற முயல, அப்பொழுதுதான் நினைவிற்கு வந்தவளாக,

    மிரு.., மறந்துட்டேன் பாரேன்.., உன்னை ரொம்ப அவசரமா நம்ம வேலன் டாக்டர் கூப்ட்டார். எமர்ஜன்சி கேஸ்.., உன்னை உடனே ஐசியூக்கு வரச் சொன்னார். அதைச் சொல்லத்தான் வந்தேன்.. அவள் அசால்ட்டாக உரைக்க, பெரும் பரபரப்புக்கே ஆளானாள் மிருதுளா.

    எரும.., இதை முதல்ல சொல்லாமல் என்னடி வம்பு வளக்குற.., போய்ட்டு வந்து உன்னை கவனிக்கறேன்.. தன் உடையை சரி செய்தவள், கூந்தலை மீண்டுமாக வலைக்குள் அடக்கினாள்.

    அறையை விட்டு வெளியேறுகையில், நினைவுக்கு வந்தவளாக, ஏய்.., உனக்கு இன்னைக்கு ஐசியூ டியூட்டி தானே.. சற்று அதிர்வாக கேட்க,

    ஆமா.., இன்னைக்கு மூணு கேஸ் முடியலை.., அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமேன்னு.., ஹி.., ஹி.. அவள் அசடு வழிய,

    பன்னி.., அங்கே டாக்டர் அவசரம்னு என்னை கூப்பிட்டு அனுப்பியிருக்கார், அங்கே இருக்க வேண்டிய நீயும் இங்கே இருக்க.., இதில்.., கடவுளே.., எனக்கு கொஞ்சம்போல பொறுமையை கொடு.. மேலே கை காட்டி வேண்டியவள், அவளை எதிர்பாராமல் வராண்டாவில் கிட்டத்தட்ட ஓடினாள்.

    மிரு.., இருடி நானும் வர்றேன்.., என்னை விட்டுட்டு போகாதே.., அந்த வேலன் என்னை வேலாலே குத்திடப் போறார்.. அலறியவாறே அவள் பின்னால் ஓடினாள்.

    இன்னைக்கு குத்து வாங்குடி.. அவளுக்கு பதில் கொடுத்தவாறே ஓடினாள்.

    புயல்போல் ஐசியூவிற்குள் நுழைந்தவள், அங்கே ஸ்டெச்சரில் இருந்து, ரத்த சகதியில், படுக்கைக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த அவன் அருகில் நெருங்கினாள்.

    அவனோ.., ரத்த வெள்ளத்தில் மிதந்த பொழுதும், மயக்கத்துக்குச் செல்லாமல், நோ.., நோ.., ஐ'ம் ஓகே.., ஓகே.. தன் போக்கில் புலம்பியவன் படுக்கையில் இருந்து எழ முயன்று கொண்டிருந்தான்.

    அதைப் பார்த்த வேலன்.., மிஸ்டர் சிவா.., காம்டவுண்.., காம்டவுண்.. தன்னால் முயன்ற அளவுக்கு அவனை அமைதிபடுத்த முயன்று கொண்டிருந்தார்.

    அங்கே இருந்த மற்ற இரு செவிலிகள் அவனது ரத்தம் தோய்ந்த முகத்தை ஆராய,

    அறைக்குள் நுழைந்த மிருதுளாவைப் பார்த்தவர், மிருதுளா, உடனே இன்ஜெக்ஷன் எடுங்க.., குயிக்.. அவளை அவசரப்படுத்த, வேகமாக அவர் கேட்டதை எடுத்துக் கொடுக்கவே, அந்த ஊசியை அவனது புஜத்தில் சொருகினார்.

    அவனது உடம்பில் உபகரணங்களை செலுத்த முயல, அதை அவன் அனுமதிக்கவே இல்லை. ஆக்சிஜன் மாஸ்க்கை கூட பொருத்த அனுமதிக்காமல் அவன் போராடியவன், திமிறித் துடித்தான்.

    நான்கு செவிலிகள் போராடியும் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை.

    அவனோ எதையும் கண்டுகொள்ளாமல், டாக்..டர்.., டாக்..டர்.., அம் ஐ ஓகே.., ஓகே.. படுக்கையில் இருந்து எழ முயன்று கொண்டிருந்தவனுக்கு அது முடியாமல் போக, பெரும் கலவரத்தை அவன் முகம் தாங்கியது.

    அவ்வளவு ரத்தம் அவன் முகத்தில் தோய்ந்திருந்த பொழுதும் அதை மிருதுளாவால் புரிந்துகொள்ள முடிந்தது. கூடவே.., வேலன் போட்ட ஊசியையும் மீறி, அவன் மயக்கத்துக்கு போகாத விதம்.., அவன் மன உறுதியை வியப்பதா, இல்லை.., அவனது நம்பிக்கையின்மையை பயத்தை கண்டு கவலைப்படுவதா எனத் தெரியாமல் குழம்பிப் போனாள்.

    ஒரு நொடி நம்பிக்கையாய் புலம்பியவன், மறு நொடி அதீத பயத்தில் அரற்றினான். அவனுக்கு ஏற்பட்டிருந்த விபத்து மற்றொரு மனிதனுக்கு நேர்ந்திருந்தால், எப்பொழுதோ மயக்கத்துக்குப் போயிருப்பான்.

    அதை உணர்ந்த மருத்துவர், சிவா, நீங்க நல்லா இருக்கீங்க.., கொஞ்சம் அமைதியா இருங்க. நீங்க ஒத்துழைக்காமல் எங்களால் எதுவும் செய்ய முடியாது.., இப்போதைக்கு எதையும் யோசிக்காதீங்க.., அமைதியா இருங்க.. அவனது அடிபட்டிருந்த கரத்தை பற்றிக் கொண்டார்.

    மேலும் வேலன் எதையும் சொல்லும் முன்பாகவே.., ட்ரேயை கையில் எடுத்துக் கொண்டவள், அவன் அணிந்திருந்த கோட், டை, பேண்ட்.., என அனைத்தையும் கத்தரிக்கோலால் வெட்டத் துவங்கினாள்.

    கை அதன் போக்கில் வேலை செய்ய, சிந்தையோ.., 'பார்ட்டிக்கு போக இந்த உடையில் இருக்கிறாரா.., இல்லையென்றால்..' எதையோ சிந்திக்கத் துவங்கியவள், சட்டென நினைவு வந்தவளாக,

    தன் அருகில் நின்ற தோழியை சூடாகப் பார்க்க, மருத்துவரை விட, தோழியின் முறைப்புக்கு பயந்தவள், பஞ்சை இடுக்கியில் பிய்த்து எடுத்து, அவன் முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைக்கத் துவங்கினாள்.

    ஆ.., நோ.., நோ.., லீவ் மீ.. சிவா பலமாக அலற, வேலனின் முகத்தில் பெரும் கவலை.

    சிவா.., சிவா.., இங்கே பாருங்க.., சிவா.. வேலனின் அழைப்பை அவன் கண்டுகொண்டதாகவே இல்லை.

    ம்ச்.., என்ன இவன்.. அவர் வாய் விட்டே புலம்ப, நிலைமையை எப்பொழுதும் சுலபமாகக் கையாளும் வேலனே திணறுவதை சிறு திகைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.

    அதைவிட, சிவாவின் செய்கை.., பிடிவாதமாக விழித்திருக்க போராடுவோமே, அப்படி ஒரு நிலையில் இருந்தான். எங்கே விழி மூடினால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து விடுவோமோ.., என அஞ்சியவன் போன்று இருந்தது அவனது நடத்தை.

    அவனது உடைகளை அகற்றி, மருத்துவமனையின் உடையான பச்சை வர்ண உடையை அணிவிக்க, அவன் முகம் அதீத வலியை பிரதிபலிக்க, கூடவே, அவன் தலை தோய்ந்து விழ, முயன்று அவன் விழிக்க போராட, இதழ்களோ விடாமல் புலம்பியது.

    வான்மதி சற்று ஒதுங்கிக் கொள்ள, அவள் கரத்தில் ஒரு அலைபேசியை கொடுத்த மருத்துவர், மதி.., சிவாவோட வீட்டுக்கு கொஞ்சம் தகவல் சொல்லுங்க.. பொறுப்பை அவளிடம் ஒப்படைக்க, அலைபேசியோடு வெளியேறினாள்.

    அவனது அலைபேசியை கொடுத்ததை உணர்ந்தானோ என்னவோ.., அவன் கரம் உயர முயன்று தோற்க, அவன் படும் துன்பத்தை காண சகிக்காமல், அவன் அமைதி இப்பொழுது எவ்வளவு தேவை எனப் புரிய, உயர்ந்த அவன் கரத்தை சட்டென பற்றிக் கொண்டாள்.

    மிஸ்டர் சிவா.., உங்களுக்கு ஒண்ணும் இல்லை.., நாங்க எல்லோரும் இருக்கிறோம். இங்கே பாருங்க.., உங்களுக்கு எதுவும் ஆகாது.., நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க. கொஞ்ச நேரம் தூங்குங்க.., கண்ணை மூடுங்க. நான் சொல்றது கேக்குதா..? இங்கே பாருங்க..

    பிடிவாதமாக அவனை தன் முகம் காண வைத்தவள், அனைத்தையும் அழுத்தமாக, அதே நேரம் மென்மையாக உரைக்க, அவ்வளவு நேரமாக யாரையும் கவனிக்காமல் இருந்தவன், முதல் முறையாக அவளை கவனித்தான்.

    அதை உணர்ந்த வேலன்.., மிருதுளா.., கண்டினியூ.. அவளுக்கு மட்டும் கேட்குமாறு உரைக்க,

    சிவாவின் கண்கள் சட்டென ஒரு பிரகாசத்துக்குப் போக, உள்ளுக்குள் சிறிது நடுங்கிப் போனாள் மிருதுளா. அவளது இரண்டு வருட அனுபவத்தில், எத்தனையோ மரணங்களை அவள் பார்த்திருக்கிறாள்.., அணையப்போகும் சுடரின் ஒளி, சட்டென பிரகாசிப்பதுபோல், அவனது கண்களின் ஒளியோ..? என ஒருநொடி பயந்தாள்.

    ஆனால், அவளது மன தைரியம் அதை வெளிவிடாமல் செய்ய, சிவா, இப்போ நீங்க ரெஸ்ட் எடுக்கணும் அவ்வளவுதான். உங்களுக்கு ஒண்ணுமே இல்லை.., நீங்க ரொம்ப தைரியமான ஆள் தானே.., தூங்குங்க.. அவன் கரத்தை கெட்டியாக பற்றிக் கொண்டாள்.

    அதைவிட அழுத்தமாக அவள் கரத்தை பற்றியவன்.., ம்.., ம்.. எதையோ உணர்ந்தவன் போன்று முனகியவாறே கண்களை சட்டென மூடிக் கொண்டான்.

    அடுத்த நிமிடம் அவன் ஆழ்ந்த மயக்கத்துக்குச் செல்ல, பட்டென அவன் கரம் தோய்ந்து விழ, பதறியவள், வேகமாக வேலனைப் பார்க்க, குட் ஜாப் மிருதுளா.., குயிக்.., நெக்ஸ்ட் ப்ரொசீஜர்.. அவர் துரிதப்படுத்த, அடுத்த நிமிடம் அனைத்து உபகரணங்களும் அவனுக்கு பொருத்தப் பட்டது.

    வேலன் அவனை முழுதாக ஆராய.., ஒரு கால் முழுவதும் சிதைந்திருக்க, மறு காலும் சற்று உடைந்திருந்தது. இடக்கை முறிந்திருக்க, வலது கை மூட்டு விலகியிருந்தது. நெற்றியில் கண்ணாடி குத்தி கிழித்திருக்க, ரத்தம் ஆறாய் பெருக, அதை நிறுத்த பெரிய கட்டு போடப் பட்டிருந்தது.

    மிருதுளா.., உடனே எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கணும். கூடவே ஆப்பரேஷன் செய்து காலை சரி பண்ணணும்.., இல்லன்னா காலையே எடுக்க வேண்டி வரும். மதி போன் பண்ணிட்டாங்களான்னு பாருங்க.., பேரன்ஸ் சைன் வேணும்.., சீக்கிரம்.. அவசரப்படுத்தினார்.

    பம்பரமாக சுழன்றவள், அவனுக்கு தேவையானவற்றை கவனித்துவிட்டு, வேகமாக மதியைத் தேடிச் சென்றாள்.

    மதி, என்ன ஆச்சு..? அவங்க பேரன்ட்ஸ் போனை எடுத்தாங்களா? விஷயத்தை சொல்லிட்டியா..? வராண்டாவில் நின்ற தோழியிடம் விரைந்தாள்.

    போன் லாக்ல இருக்கு.., என்ன செய்யன்னு தெரியலை.., பாஸ்வேர்ட் கேக்குது.. அவஸ்தையாக கையைப் பிசைந்தாள்.

    கொடு பாக்கறேன்.. அலைபேசியை வாங்கியவள், அதில் பிங்கர் பிரின்ட் ஆப்ஷன் இருப்பதைப் பார்த்து, வேகமாக அலைபேசியை எடுத்துக் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்து, அவனது வலக்கை கட்டை விரலை பதிக்க, உடனே திறந்து கொண்டது.

    பெரும் விடுதலை உணர்வோடு கால் ஹிஸ்ட்டரியை திறக்க, 'அப்பா..' என்ற பெயர் இருப்பதைப் பார்த்து, வேகமாக அதை அழைத்தவாறே வெளியே வந்தாள்.

    ரிங் போன மறு நொடி அதை எடுத்தவர், சிவா, வேர் ஆர் யூ? வீ ஆர் வெயிட்டிங் ஹியர்..? இட்ஸ் கெட்டிங் லேட்.. மிருதுளா பேச வருவதை கேட்காமல், அந்தப் பக்கம் அவர் பேசிக்கொண்டே செல்ல,

    ஹல்லோ சார்.., ஒரு நிமிஷம்.. அவள் இடையிட,

    ஹல்லோ.., ஹூ ஆர் யூ..? இந்த போன் உங்க கிட்டே எப்படி..? அவர் படபடக்க,

    நாங்க காவேரி ஹாஸ்பிடல்ல இருந்து பேசறோம்.., இந்த நம்பர்க்கு சொந்தக் காரருக்கு சின்ன ஆக்சிடன்ட்.., நீங்க உடனே வாங்க.., அதைச் சொல்லத்தான் கால் பண்ணோம்.. அவள் உரைக்க,

    என்ன.., காவேரி ஹாஸ்பிடலா..? அங்கே மிஸ்டர் வேலன் இருக்காரா? அவர்கிட்டே போனை கொடுங்க.. நிலைமையின் தீவிரம் புரியாமல் அவர் பேச, கேட்டுக் கொண்டிருந்த மிருதுளாவுக்கு அவரது எதிர்வினையை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

    சற்று தெளிந்தவள், டாக்டர் பேஷண்டை பாத்துட்டு இருக்காங்க.., கொஞ்சம் சீக்கிரம் வாங்க.. உரைத்தவள் அலைபேசியை வைத்துவிட்டாள்.

    'பெற்ற மகனுக்கு விபத்து எனச் சொல்கிறேன்.., பதறிப் போகாமல், வேலனிடம் போனைக் கொடு என்றால்.., என்ன அர்த்தம்..' குழம்பிப் போனாள்.

    அதே நேரம்.., அலைபேசி ஒலியெழுப்ப, 'அம்மா..' என ஒளிர, அதை ஆன் செய்த அடுத்த நிமிடம்,

    சிவா.., ஹௌ லாங் வீ ஆர் வெயிட்டிங்.., கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல்.., இங்கே எல்லோரும் வந்துட்டாங்க.., நீ இல்லாமல்.., நாங்க எப்படி சம்மாளிக்கிறது.., எல்லோரும் உன்னைத்தான் கேக்கறாங்க.., உடனே, என்னை ஏன் கேக்கறாங்கன்னு ஆரம்பிக்காதே.., எங்கே இருந்தாலும் உடனே வா.. கடித்த பற்களுக்கிடையே அவர் உரையாடுவதை, அவர் முகம் காணாமலேயே மிருதுளாவால் உணர முடிந்தது.

    மேடம்.., அது.. அவள் திணற,

    ஹேய்.., யார் நீ..? சிவா போன்ல நீ எப்படி? முதல்ல அவன்கிட்டே போனைக் கொடு.. அதிகாரமாக உரைக்க, புரியாத ஒரு நிலையில் விழித்தாள்.

    அவள் கையில் போனோடு முழித்துக்கொண்டு இருக்க, அவள் கையில் இருந்து போனை வாங்கிய மதி, ஹல்லோ.., நாங்க காவேரி ஹாஸ்பிடல்ல இருந்து பேசறோம். சிவாங்கறவர்க்கு ஆக்சிடண்ட்.., கொஞ்சம் சீக்கிரம் வாங்க.. அவள் உரைக்க,

    என்ன..? ஆக்சிடண்டா..? ஷிட்.. அலைபேசியில் தன்னை மீறி கேட்டவர், சட்டென தெளிந்து,

    'இல்ல.., சிவா மீட்டிங்ல மாட்டிட்டானாம்.., அதான்..' அங்கே யாரிடமோ சம்மாளிப்பது புரிய, வான்மதிக்கு மிருதுளா ஏன் அப்படி நின்றாள் என்பதற்கான விடை கிடைத்தது.

    அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, விஷ்ணு என்ற பெயர் வெயிட்டிங்கில் வர, அதை அட்டென் செய்த மதி, ஸ்பீக்கரில் போட, "புரோ.., எங்கே இருந்தாலும் அப்படியே எஸ்கேப் ஆகிடு.., அந்த பார்ட்டிக்கு மட்டும் போய்டாதே.., அங்கே அந்த பிசாசு மோகனா கூட உனக்கு என்கேஜ்மெட் செய்ய பிளான் நடக்குது.

    எனக்கு உளவுத்துறை ரிப்போட் வந்தது.., சொல்றதை சொல்லிட்டேன், பிறகு உன் இஷ்டம்.. இவர்கள் பதில் பேசும் முன்பாகவே அலைபேசி வைக்கப்பட, இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

    என்ன குடும்பம்டி இது..? இதுங்க எல்லாம் பேஜர்ல பேசத்தான் லாயக்கு, தெரியாத்தனமா செல்போன் வாங்கிடுச்சுங்க போல.., ச்சே.. மதி வாய்விட்டே புலம்ப,

    தன் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டு, தன் முகத்தை ஒருவித ஒளியோடு பார்த்த சிவாவின் முகம் அசந்தர்ப்பமாகத் தோன்றி மிருதுளாவை திகைக்கச் செய்தது.

    இப்போ டாக்டர் கிட்டே என்னடி சொல்றது? வான்மதி கேட்க, வேலனே அங்கே வந்தார்.

    என்ன பேசிட்டீங்களா..? அவனோட பேரன்ட்ஸ் என்ன சொன்னாங்க..? அவரது கேள்வியே, பதிலை பெரிதாக எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை.

    மீண்டுமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, வான்மதியின் கையில் இருந்த அலைபேசி, 'அப்பா..' என ஒளிர, வேகமாக அதை அவர் பக்கம் நீட்டினார்கள்.

    அதை வாங்கியவர், மிஸ்டர் ராம்.., மேஜர் ஆக்சிடண்ட்.., உங்க சைன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. நீங்க லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும், உங்க பையன் வாழ்நாள் முடம் ஆகற நேரம்னு நினைச்சுக்கோங்க, இதற்குமேல் நான் எதுவும் சொல்லதுக்கில்லை.. அலைபேசியை அணைத்து விட்டார்.

    வேலன் இவ்வளவு கோபமாக மற்றவர்களிடம் பேசி பார்த்திராத அவர்கள் விழிக்க, பணம், பணம்.., அதைக் கட்டிக்கிட்டு என்னதான் செய்யப் போறாங்களோ.., ச்சே.., சிவா பாவம்.., அந்த குடும்பத்தில் தப்பிப் பொறந்துட்டான்.. தன் போக்கில் புலம்பியவர்,

    ராம் வந்த உடனே என்னை வந்து பாக்கச் சொல்லுங்க.. அலைபேசியை மிருதுளாவின் கையில் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

    அவர் செல்லவே.., மிரு.., நீ கிளம்பு.., எனக்கு நைட் டியூட்டி தான்.., நான் பாத்துக்கறேன். அப்பா காத்துட்டு இருப்பாங்க.. அவள் உரைத்த பிறகுதான் தந்தையின் நினைவே வந்தது.

    அதற்குள்ளாகவே நேரம் இரண்டுமணி நேரங்களை கடந்திருக்க, உடை மாற்றச் சென்றாள். உடை மாற்றி, மருத்துவமனையை விட்டு வெளியேறி தந்தையோடு இணைந்த பிறகும், மனதை அழுத்திய பாரம் மட்டும் விலக மறுத்தது.

    சற்று நேரத்துக்கு முன்பாக இருந்த மன நிம்மதி பறி போயிருக்க, கூடவே.., சிவாவின் விழிப் பார்வையும் சேர்ந்து அவளை அலைக்கழித்தது.

    2

    மிருதுளா மருத்துவமனை வாயிலை நெருங்க, எதிரில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த அவளது தந்தை மணிவண்ணன் இருக்கையில் இருந்து எழுந்து, மெதுவாக அவளை நோக்கி வந்தார்.

    சற்று தேங்கிய நடை.., இடக்கை சற்று செயலற்று போயிருக்க, வலக்கையால் அதைத் தாங்கியவாறே, சற்று தேங்கிய இடக் காலை சிரமமாக தூக்கி வைத்து நடந்து வந்தார்.

    'எப்படி இருந்த அப்பா..' அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

    மணிவண்ணன்.., பேன்க் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். ஆறு வருடங்களுக்கு முன்பு, சட்டென ஏற்பட்ட பக்கவாதத்தால் அவரது ஒரு பக்க உறுப்புகள் செயலாற்றுப் போக, குடும்பமே நிலை குலைந்துதான் போயிற்று.

    ஆனாலும் அதில் இருந்து மீண்டு, அவரையும் மீட்டு, தந்தையின் வேலை, பறி போக, அவர் வேலை பார்த்தது அரசாங்க பேன்க் என்பதால், வாரிசு அடிப்படையில் அவரது மனைவிக்கு, அவரது தகுதியின் அடிப்படையில் கிளார்க் பணி கிடைக்க, குடும்பம் வருமான விஷயத்தில் சற்று மீண்டது.

    ஆனாலும், அவரது மருத்துவமனை செலவுகள் அதிகரிக்கவே, மருத்துவராக வேண்டும் என்ற மிருதுளாவின் கனவு தகர்ந்து போக, அதை ஒற்றி வைத்தவள், பிஎஸ்சி நர்சிங் படித்து முடித்து விட்டாள்.

    தந்தை தங்களுக்கு உயிரோடு கிடைத்தால் போதும், அவர் எந்த வேலையுமே செய்ய வேண்டாம் என்ற வேண்டுதலின் பலனா, இல்லை.., அவர்களது கவனிப்பின் பலனா எனத் தெரியவில்லை, படுக்கையிலேயே காலம் தள்ளியிருக்க வேண்டியவர், நடக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தார்.

    மிகவும் பாசமான அப்பா, சில மாதங்களாக சற்று முரடாக மாறிப்போன உணர்வு. அவர் உடல்நிலை கருதி யாரும் அவரிடம் அதைப்பற்றி பேசும் தைரியம் வராமல் அமைதி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மிருதுளாவுக்கு தாயை எண்ணித்தான் அவ்வளவு கவலையாக இருந்தது. கூடவே, தம்பி நவீனின் நினைவும் சேர, மனம் கனத்துப் போனது.

    தந்தை அவள் அருகே வரும் வரைக்கும் அங்கேயே நிற்க, அவர் நெருங்கி வரவே, சாரிப்பா, ஒரு எமர்ஜன்சி கேஸ் அதான் வர லேட் ஆகிடுச்சு. நீங்க வீட்டுக்கு போயிருக்கலாமேப்பா, ரெண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டுக்கு நான் வர மாட்டேனா? மன்னிப்பை வேண்டியவள், செல்லமாக அலுத்துக் கொண்டாள்.

    அவளைப் பார்த்து ஆதூரமாக சிரித்தவர், நீ லேட்டா வரன்னு சொன்னாலே ஏதாவது எமர்ஜன்சியா இருக்கும்னு எனக்குத் தெரியாதா என்ன.., நீ வாம்மா.., காலையில் இருந்து வீட்டில் ஒத்தையா உக்காந்து போர் அடிச்சு கிடக்கேன், வெளியே வரது கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு.., விடு.. உரைத்தவர் அவளோடு நடக்கத் துவங்கினார்.

    அம்மா வந்துட்டாங்களாப்பா..? தம்பி டியூஷன் போயிட்டானா? வழக்கமான கேள்விகளை அவள் தொடுக்க,

    உங்க அம்மா இன்னைக்கு உனக்காக ஆப்பம் தயார் பண்ணிட்டு இருக்கா.., நவீன் டியூஷன் போய்ட்டான்.. அவளுக்கு பதில் கொடுத்தவர், அவளோடு நடந்தார்.

    வழக்கமாக அவளுக்காக தாய் ஸ்பெஷலாக ஏதாவது செய்கிறாள் எனச் சொன்னால் கோபம் கொள்ளும் மகள், இன்று அமைதியாக வரவே, அவள் முகத்தை ஆராய்ச்சியாய் நோக்கினார்.

    அவர் பார்வையின் பொருள் புரிய, வீட்டுக்கு போய் சொல்றேன்ப்பா.. உரைத்தவள் அதன் பிறகு எதையும் சொல்லவில்லை. சட்டென சொல்ல முடியாத அளவுக்கு மனதுக்குள் ஒரு அழுத்தம்.

    அதுவும் சிவாவின் வீட்டு மனிதர்களின் நடத்தையை ஏனோ சாதாரணமாக அவளால் எடுக்க முடியவில்லை. ஒரு மனிதனுக்கு சட்டென உடல்நிலை சரியில்லை என்றால், அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என அவளுக்கு நன்றாகவே தெரியும்.

    வாழ்க்கையில் ஒரு நிலையில் இருந்த அவளது தந்தையே அப்பொழுது தகர்ந்து போனதை கண்களால் கண்டவள் அவள். அப்படியிருக்கையில் இளைஞன் அவன்.., அவனது மனம் இப்பொழுது ஒரு ஆறுதலுக்காகவும், பற்றுதலுக்காகவும் வீட்டு ஆட்களை எப்படித் தேடும்..

    அதை உணர்ந்து கொள்ளாமல், அவனுக்கு நேர்ந்ததை, ஏதோ செய்தித்தாளில், மூன்றாம் மனிதனுக்கு நேர்ந்த நிகழ்ச்சியைப் போல், சாதாரணமாக கேட்டு கடந்ததை நம்பவே முடியவில்லை.

    இப்பொழுது கூட, அவனது வீட்டில் இருந்து யாராவது உடனே வந்து, அவனது காலை காப்பாற்றிவிட மாட்டார்களா என்றே மனம் அடித்துக் கொண்டது.

    மகளது அமைதியைப் பார்த்து என்ன நினைத்தாரோ, அவளது கரத்தை தன் வலக் கரத்தால் மெதுவாக பற்றிக் கொண்டவர், மிருதுளா, இன்னைக்கு வான்மதி எதுவும் சேட்டை செய்யலையா? ரொம்ப சோகமா இருக்க.. மகளது மனநிலையை மாற்ற விரும்பி பேசினார்.

    ஹையோ அப்பா.., அதை ஏன் கேக்கறீங்க.., வேலன் டாக்டர் எமர்ஜென்சின்னு என்னை கூட்டி வரச் சொன்னால், அதை மறந்துட்டு, ரிலாக்ஸ் பண்ணிட்டு உக்காந்து இருக்கா.., அவளோட எனக்கு டென்ஷன் தான் ஆகுது.. தோழியைப் பற்றி குறையாக சொன்னாலும், அவள் முகத்தில் ஒரு மலர்ந்த புன்னகை.

    அதைக் கண்ட பிறகுதான் மணிவண்ணனின் மனம் நிறைந்தது. அதற்குள்ளாகவே அவர்களது வீடு வந்துவிட,

    அவள் வாசல் கதவை திறக்கவே, அவளை எதிர்கொண்ட தாய் தனபாக்கியம், என்னம்மா இன்னைக்கு ரொம்ப டயடா தெரியற.., ரொம்ப வேலையா? சரி உள்ளே வா.., ஹீட்டர் போட்டிருக்கேன், முதல்ல குளிச்சுட்டு வா.., நிதானமா பேசலாம்.. அவள் கையில் இருந்த பேகை வாங்கிக் கொண்டார்.

    ம்ச்.., நான் டயடா இருக்கறது இருக்கட்டும்.., இன்னைக்கே ஆப்பம் செய்தாகணுமா? நீங்களும் டயடா தானே இருப்பீங்க.., கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ஜஸ்ட் லைட்டா ஏதாவது பண்ண வேண்டியது தானே.. தாயை கடிந்து கொண்டாள்.

    ஆமா.., நான் சாயங்காலம் வந்து ஆப்பத்துக்கு அரைத்து உடனே சுடறேன் பார். நீ வேற.., எல்லாம் உன் அப்பா செய்து வைத்த வேலை தான்.. மகளோடு அவளது அறைக்குள் நுழைந்தவர், அங்கே இருந்த மேஜைமேல் அவளது பேகை வைத்துவிட்டு, படுக்கையில் அமர்ந்து கொண்டார்.

    மகள் கேட்டாள் என்பதற்காக, ஆப்ப மாவு எங்கே கிடைக்கும் என தேடி அலைந்து வாங்கி வைத்தவர் அவர் தானே. அது புரிய, தந்தையை ஒரு பார்வை பார்த்தவள், குளிக்கச் செல்லாமல் தாயின் அருகில் அமர்ந்து, அவர் மடியில் தலை சாய்க்க, மகளது முக வாட்டம் அவருக்கும் புலப்பட, சட்டென திரும்பி வாசல் கதவை நோக்க, மணிவண்ணன் மனைவியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

    'கேள்..' மனைவியை ஜாடையாகப் பார்த்து தலையசைக்க, 'கேக்கறேன்..' அவருக்கு பதில் கொடுத்தவர் மகளை ஏறிட்டார்.

    என்னம்மா, அப்படியே உக்காந்துட்ட.., குளிக்க போகல.. மகளின் தலையை வருட, போகணும்மா.. தாயின் இடையை கட்டிக் கொண்டவள், அவர் வயிற்றில் முகம் பதித்தாள்.

    என்னம்மா.., ஹாஸ்பிட்டல்ல ஏதாவது டெத்தா..? அவ்வாறு இருந்தால்தான் மகள் இப்படி இருப்பாள் என்பதால் கேட்டார்.

    இல்லம்மா.., அது.., இப்போதான்.., நான் வர முன்னாடி ஒரு ஆக்சிடண்ட் கேஸ்.. எனத் துவங்கி அனைத்தையும் உரைக்க, கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கும் மனம் கனத்துப் போனது.

    "இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆப்பரேஷன் பண்ணலன்னா.., அந்த காலுக்கு போக வேண்டிய ரத்தம் சரியா போகாமல், நரம்பெல்லாம் பாதிச்சு அந்த காலையே எடுக்க வேண்டிய நிலைக்கு போய்டும். அவ்வளவு வலியிலும் அவர் மயக்கத்துக்கே போகல தெரியுமா?

    தன்னை தானே கவனிச்சுக்கணும் என்ற நிலையில் இருப்போமே.., அப்படி ஒரு இன்செக்கியூர் பீல் அவர்கிட்டே. கூடவே.., ஒரு பயம்.., அப்படியே அவர் கண்ணில் தெரிந்தது.. கவலைக் குரலில் அவள் உரைக்க, அவள் தலை கோதியவாறு அமர்ந்திருந்தார்.

    விடும்மா.., எல்லாம் விதிப்படிதான் நடக்கும். இப்படி ஒவ்வொரு பேஷண்டுக்கும் நீ கவலைப்பட ஆரம்பித்தால், இந்த வேலைக்கு நீ ஃபிட்டே கிடையாது புரியுதா.., எல்லாம் அந்த ஆண்டவன் பாத்துப்பான். முதல்ல எழுந்து குளி.., சாப்பிட்டால் மனசு கொஞ்சம் தெம்பா இருக்கும்.. மகளை பிடிவாதமாக எழுப்பி குளிக்க அனுப்பினார்.

    தாய் சொல்வதில் இருந்த உண்மை புரிய, அவனது உறவினர்கள் வந்திருக்க வேண்டும்.., என்ற வேண்டுதலோடு எழுந்து குளிக்கச் சென்றாள்.

    அவள் குளித்து விட்டு வெளியே வரவும், அவளது தம்பி நவீனின் குரல் வெளியே கேட்கவும் சரியாக இருந்தது.

    அக்கா.., எங்கே இருக்க..? கேட்டவாறு, தன் பேகோடு அவளது அறைக்குள் நுழைந்தவன், இன்னைக்கு ஏன் நீங்க லேட்..? உங்களால் நான் டியூஷனுக்கும் லேட்.., பத்மாக்கா என்னை திட்டிட்டாங்க.. வந்ததும் வராததுமாக புகார் வாசித்தான்.

    பத்மாக்கா திட்டுற அளவுக்கு நீ என்ன பண்ண? பாடம் படிக்கலையா?.

    அதெல்லாம் நல்லாத்தான் படிக்கறேன். லேட்டா போயிட்டேன்னுதான் திட்டுனாங்க.. அவன் குறை பட்டான்.

    சாரிடா நவீ.., அக்காவுக்கு இன்னைக்கு ஒரு அவசர வேலை அதான் வர முடியலை.. அவன் தலையைக் கலைத்தாள்.

    நவீன் இரண்டாம் வகுப்பில் படிக்கும் பொழுதுதான் மணிவண்ணனுக்கு ஸ்ட்ரோக் வந்தது என்பதால், தாய் அவரை கவனித்துக் கொள்ள, நவீனை முழுதாக ஒரு தாயாக கவனித்துக் கொண்டது மிருதுளாதான். எனவே அவனுக்கும் தன் தாயை விட, தமக்கை என்றால் உயிர்.

    அதைவிட, தன்னைவிட எட்டு வயது சிறிய தம்பியை பிறந்தது முதல் ஆசையாக பார்த்துக் கொண்டது அவள்தான். அவளுக்கும் அவன் என்றால் அவ்வளவு பிரியம்.

    பள்ளியில் நடக்கும் விஷயம் துவங்கி, நண்பர்களோடான அரட்டை, கேலி, சண்டை.., என அனைத்தையும் அவளிடம்தான் பகிந்து கொள்வான்.

    இப்பொழுது எட்டாம் வகுப்பில் படிக்கிறான் என்றாலும், இன்னும் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் சிறுவனின் மனநிலையிலேயே நடந்து கொள்வான்.

    அவனது குரல் கேட்டு அங்கே வந்த மணிவண்ணன், டேய்.., அவளே ரொம்ப டயடா வந்திருக்கா, வந்ததும் வராததுமா உன் புராணத்தை ஆரம்பிக்கணுமா? முதல்ல பேகை வச்சுட்டு ரெண்டு பேரும் சாப்பிட வாங்கடா.. குரல் கொடுத்தார்.

    போங்கப்பா.., நான் அக்காகிட்டே தானே பேசறேன். உங்களுக்கு என்ன..? கோபமாக கேட்டவன், தன் அக்காவின் இடையை கட்டிக் கொண்டான்.

    நவீ.., அப்பாகிட்டே இப்படி பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா? அவள் கடிந்துகொள்ள,

    பின்ன என்னக்கா.., நான் உன்கிட்டே தானே பேசறேன்.. அவன் அதிலேயே இருக்க, அவனை இப்பொழுது கோபமாக முறைத்தார் மணிவண்ணன்.

    டேய்.., இன்னும் நீயென்ன சின்னப் பிள்ளையா..? அதென்ன.. அவர் எதையோ துவங்க,

    அப்பா.. மிருதுளாவின் கண்டிப்பான அழைப்பில் அப்படியே வார்த்தைகளை நிறுத்திக் கொண்டார்.

    அவர் சொல்ல வருவதைப் புரிந்த நவீன், நீ எனக்கு அம்மா மாதிரின்னு நீதனக்கா சொன்ன.., அப்பாகிட்டே சொல்லு.., எப்போ பாத்தாலும் உன்னை தொட்டு பேசக் கூடாதுன்னு சொல்றாங்க. நான் என்ன வெளியிலே வைத்தா பேசினேன். வீட்டில் தானே.. குறைபட்டுக் கொண்டாலும், வேகமாக விலகி நின்றான்.

    அதை உணர்ந்தவள், என்னைக்கும் நான் உனக்கு அம்மா தாண்டா.. அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைக்க, மணிவண்ணன் இருவரையும் பாசமாகப் பார்த்திருந்தார்.

    அதை மறைத்து, முதல்ல சாப்பிட வாங்க.., அம்மா காத்துட்டு இருக்காங்க.. அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

    தமக்கையின் கையை பிடித்தவாறே வெளியே வந்தவன், "அக்கா, இந்த பிறந்தநாளுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1