Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neruppin Nizhalil...
Neruppin Nizhalil...
Neruppin Nizhalil...
Ebook125 pages49 minutes

Neruppin Nizhalil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114204070
Neruppin Nizhalil...

Read more from Hamsa Dhanagopal

Related to Neruppin Nizhalil...

Related ebooks

Reviews for Neruppin Nizhalil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neruppin Nizhalil... - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    நெருப்பின் நிழலில்...

    Neruppin Nizhalil…

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ஆக்க்ஷன் டைரக்டரின் குரலில் அந்த பதுமை உள் நுழைகிறது. அசாத்திய ஒப்பனை. இருபத்தைந்தைப் பதினைந்தாக்கும் உத்தி.

    அக்கா... அக்கா...எங்கேக்கா இருக்கே. இந்த மகாப் பெரிய வசனம் பேசுவதற்குள் மூன்று டேக்குகள் வாங்கி நாலாவது டேக்கில் ஓ.கே. ஆகும் நேரம் அந்த அசம்பாவிதம் நடந்தது. இது மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் மல்லிகாவின் வாழ்க்கை நல்ல திசையில் நல்லபடியாய் போய் இருக்கும். ஆனால் விதி வந்து அங்கு நின்று கைகொட்டி சிரித்தது சத்தமில்லாமல் கண்ணுக்குத் தெரியாமல்.

    படத்தின் கவர்ச்சி நடிகையாய் நடித்துக்கொண்டிருந்த கதாநாயகியின் தாய் அலுமினிய நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள்.

    கதாநாயகி நடிகையின் தாய் எப்படி உட்காருவதும் அவள் விருப்பம், உரிமை. ஆனால் மிக சுறுசுறுப்பாய் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கையில் வெறுமனே உட்கார்ந்திராமல் தங்கத்திலான பொடி டப்பா எடுத்து சத்தமில்லாமல் பொடியை இரு விரல் நுனியில் எடுத்து இரு மூக்குகளிலும் உறிஞ்சினாள். அங்குதான் விதி புகுந்து சிரித்தது.

    அந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகி என்கிற பெயரில் சில காட்சிகளில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த மல்லிகா என்கிற மல்லிஸ்ரீக்கு கொஞ்சம் அலர்ஜி அதிகம். பொடியின் நெடியில் இரண்டு தும்மல்கள் பலமாகப் போட்டாள்.

    கட்... கட்... யாருப்பா அது? டைரக்டரின் தீவிழி மல்லிஸ்ரீயின் மீது பதிந்தது.

    ஏம்மா மல்லிகா, சைலண்டா நிக்கறதவிட்டு, இந்த நாலாவது டேக்காவது ஓ.கே. ஆகும்னு நினைச்சேன். அதுக்குள்ள கெடுத்துட்டியே மல்லிகா அவளின் பார்வை, கதாநாயகியின் தாயாரைத் தொட்டுப் பார்க்க, அவர் பார்வையும் அந்த அம்மாளை உரசிப் பார்த்தது.

    இதற்குள் மீண்டும் டச்சப் செய்துக்கொண்ட கவர்ச்சி கதாநாயகி, தன் தாய் அருகில் வந்தாள்.

    ஸாரி ஸார், நான் நல்லா நடிக்கிறப்ப இவ கெடுத்துட்டா. எனக்கு மூட் போயிருச்சி. நீங்க வேணா நாளைக்கு ஈவினிங் வச்சுக்குங்க. எனக்கு அப்ப ப்ரீதான்

    டைரக்டரும் தயாரிப்பாளருமான அவர் பதறிவிட்டார். தன் இழந்த மார்க்கெட்டை இந்த 'கனியா, கன்னியா' படத்தின் மூலம் எடுத்து நிறுத்த நினைத்தார். அவர் சொத்து முழுவதையும் இதில் முதலீடு செய்திருந்தார்.

    ஸாரி மேடம், இந்தக் காட்சியோட இந்த செட்டை கலைச்சுடறோம். இன்னும் ஒருநாள் எக்ஸ்டண்ட் பண்ணணும்னா பல ஆயிரம் எனக்கு நஷ்டமாகும் மேடம்.

    மிக பவ்வியமாக நடிகையின் காலில் விழாத குறையாய் கெஞ்சினார் டைரக்டர்.

    எனக்கு பிரசாத் போகணும். டப்பிங்குக்கு டைமாச்சு. நாளைக்கு போன் போடுங்க வந்து நடிச்சு தரேன்.

    அவளின் தாய் மலையாய் உருண்டு முன்னால் போக, பின்னால் குதிரை போல கவர்ச்சிக் கன்னி நடந்து போனாள். அவர்கள் நாற்காலிகள் அவர்களுக்கு முன்னால் போய் மாருதி வேனில் ஏறிக்கொண்டன. அது ஏ.வி.எம்மின் பாதையில் ஓடலாயிற்று.

    மல்லிகாவிற்குத் தர்மசங்கடமாயிற்று. டைரக்டர் அருகில் போனாள். லைட்பாய்கள், அசிஸ்டெண்டுகள், ரசிகர்கள் என சூழ்ந்திருக்க... கிளிசரின் போடாத கண்ணீருடன், ஸாரி ஸார். என்னால் உங்களுக்குச் சிரமம் ஸார். பொடியிலே தும்மல் வந்திருச்சி ஸார் என்றாள் மல்லிகா.

    விடு மல்லிகா, அவளுக்கு ஏதாவது சாக்கு கிடைக்குமான்னு நினைச்சா. அவளுக்கு இன்னும் கொஞ்சம் பணம் பாக்கியிருக்கு. அதான் போயிட்டா. அதுக்கு உன்னைக் காரணம் காட்டிட்டா.

    நான் வேணா படத்திலேந்து விலகிருட்டுமா ஸார்.

    வேலைக்காரியின் ஒப்பனையில் இருந்த மல்லிகா டைரக்டரின் அருகில் நின்று, மெல்லிய குரலில் சொன்னாள்.

    அவளுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கல ஸார். அதான் இப்படி சொல்றேன். என்னால் உங்களுக்கு வீணான தொந்தரவு இருக்கக் கூடாது இல்ல

    டைரக்டர் நெற்றியைத் தேய்த்து விட்டுக்கொண்டார். சில விநாடிகள் பொறுத்து கண்ணைத் திறந்தார். பேக்கப்

    அவளிடம் மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினார்.

    நீ அவளைவிட அழகா, நிறமா, உயரமா இருக்கிறதில் அவளுக்குக் காம்ப்ளெக்ஸ் நிறைய இருக்கு மல்லி. பார்க்கலாம், திரும்ப இப்படி நடந்துகிட்டா அப்புறம் ஒரு டிசிஷனுக்கு வருவோம்.

    டைரக்டர் தன் அம்பாசிடர் நோக்கி போய்விட்டார். ரசிகர்கள், சான்ஸ் கேட்டு வந்தவர்கள் அவருடன் நடந்தார்கள்.

    சாதாரண நூல் சேலையும், முத்து மாலையும், கருப்பு வளையயுமாய் இருந்த மல்லிகா பளிச்சென பெரிய விழிகளுடன் தேவமகள் போலிருந்தாள். அவளைச் சில விழிகள் மட்டுமே திருட்டுத்தனமாய் கொச்சைப்படுத்திக் கொண்டிருந்தன.

    மல்லிகா செட்டைவிட்டு வெளியே வந்தபோது மரங்களுக்கடியில் துணை நடிக நடிகையர் பேசியும் சிரித்தும்... இவர்களால் எப்படி சந்தோஷிக்க முடிகிறது. நிச்சயம் இல்லாத வருமானம். மேனியில் பூத்திருக்கும் இளமையும், அழகும் கழன்று போகும்வரை. அதன்பின்... இரவின் தனிமையில்... இச்சைகளில் அடிப்பட்டு வெந்து கருகி...

    மல்லிகா அவர்களைப் பார்த்தபடி ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபாதையில் நடக்கலானாள். அங்கே நிர்வாகியின் அறையருகில் பார்க்கிங் லாட்டில் அந்த டயோட்டாவின் ஒற்றை ஜன்னல் திறந்திருக்க... திரைப்படத்தின் அச்சாணி என்று வருணிக்கப்படும் நேற்றைய மாபெரும் நடிகர். இன்றும் அவர் மகிமை உதிர்ந்து, உலர்ந்து போகவில்லை என்பது நிஜம்.

    மனதில் கரிப்பு கூடுகட்ட காறி உமிழ்ந்தாள். அம்மா... அம்மா... இவளின் அம்மா... நினைவை நெருடி இவளின் விழிகளில் வழிந்தாள். அம்மா உன்னால் எப்படியம்மா அப்படி வாழ முடிந்தது. இவரைப் போய்...

    நடைபாதையில் மழைநீர் இறங்கப் போடப்பட்டிருந்த பெரிய பைப்புகள் காலில் இடறி செருப்பை அறுத்துவிட்டது. இந்த அறுந்த செருப்புடன் மேலே நடக்க முடியாது. செருப்பை எடுத்துக்கொண்டு நடப்பதும் முடியாத காரியம். செலுலாயிட்டில் இவள் முகம் தோன்றினால் ரசிகனுக்கு இந்த செருப்பு நடைக்காட்சிதான் நினைவுக்கு வரும். தூக்கி எறிந்தாள். வாழ்க்கைக்கு வேண்டாதவைகளையும் இப்படி உதறி எறிய முடிந்தால்...

    நடிப்பு என்றதும் கவர்ச்சி கன்னி வருவதற்கு முன்பு டைரக்டரிடம், அந்த இளைஞன் நடித்துக்காட்டிய காட்சிகள்... தத்ரூபமாய் பெரிய நடிகர்களை இமிடேட் செய்து... அவன் யாரோ...

    எல்லாம் சரிப்பா. இது மத்தவங்க நடிப்பு இந்த காட்சியில் நீ எப்படி நடிப்ப, அதை நடிச்சு காட்டு டைரக்டரின் குரலுக்கு அவன் கட்டுப்பட்டு.

    தாய் என்றோ தன்னை தவிக்கவிட்டுப்போன மனிதனைப் பார்த்து விட்டு வந்த அதிர்ச்சியில் சவமாகி விடுகிறாள். மகன் புலம்புகிறான். இந்தக் காட்சியை மிகையில்லாமல் அதி அற்புதமாய் அந்த இளைஞன் செய்த போது...

    Enjoying the preview?
    Page 1 of 1