Naan Vellai Nila
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Deva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Unnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Ingu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsNila Sirikkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKiliye Un Peyar Kolaiya? Rating: 0 out of 5 stars0 ratingsThevatha Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsKandu Kondren Kandu Kondren Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsThunai Thedum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyum Manithargal...! Rating: 0 out of 5 stars0 ratingsNaga Keeralgal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Naan Vellai Nila
Related ebooks
Sorna Rating: 0 out of 5 stars0 ratingsPon Malar Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Vaaimaiyidathu Rating: 5 out of 5 stars5/5Vaanavil Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsKinatru Thavalaigal Rating: 5 out of 5 stars5/5Thirumbi Vaa! Theerpai Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Ennai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsDowry Tharatha Gowri Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsSikaram Silandhikkum Ettum Rating: 0 out of 5 stars0 ratingsPriyasagaa Rating: 5 out of 5 stars5/5Chittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Uthikatha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAaram Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsKan Ketta Pin Rating: 0 out of 5 stars0 ratingsThaniyadha Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsKekkathey - Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsTamil Selvi Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Nimidam Rating: 0 out of 5 stars0 ratingsKarpanaiyo… Kaivanthatho… Rating: 3 out of 5 stars3/5Ore Oru Vaarthai Rating: 5 out of 5 stars5/5En Su(vaasa) Malare... Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Manasu Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Swasikiren… Rating: 0 out of 5 stars0 ratingsMalarodu Thaniyaga... Rating: 0 out of 5 stars0 ratingsAatkal Velai Seikiraargal Rating: 0 out of 5 stars0 ratings...Enavey, Ennodu Vaa! Rating: 5 out of 5 stars5/5Olindhirukkiren Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Naan Vellai Nila
0 ratings0 reviews
Book preview
Naan Vellai Nila - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
நான் வெள்ளை நிலா
Naan Vellai Nila
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
குளியலறையிலிருந்து வந்த நெஞ்சைப் பிளக்கும் 'வீல்' சமையலறையிலிருக்கும் பார்வதியை உசுப்புகிறது.
பர்ர்வதிம்மா, ஓடி வாங்க... ஓடிவாங்க.... இங்கே..... இங்கே பெரிய பல்லி... ஐயோ! குயிக்கா வாங்களேன்...
வித்யாவின் குரலில் காஸ் அடுப்பை அணைத்துவிட்டு வெளியே வரும் பார்வதி, இந்த நெஞ்சைத் தொடும் பயவொலியிலும் அமைதியாய் 'இந்து' படிக்கும் சரத்சந்தைப் பார்த்து வியக்கிறாள்.
தம்பி, ஒடுங்க... பாவம் வித்யா. பயந்து கத்துது. போங்க, தம்பி.
நான் மாடேம்மா. நீங்க வேணா போங்க. என்னைப் பார்த்தா அதுவும் பாத்ரூம்லே பார்த்தா உதைப்பா. நீங்க போங்கம்மா.
என்ன தம்பி பிடிவாதம்? அது பயத்திலே மயக்கம் போட்டுடப் போவுது. எனக்கும் பல்லி பாச்சைன்னா ரொம்ப பயம் தம்பி. போங்க.
பார்வதியின் முகத்தில் சிறு விஷமச் சிரிப்பு.
அவன் எழுந்திருப்பதற்குள், வித்யாமா....... எனக்கும் அதையெல்லாம் கண்டா வயத்தைக் கலக்கும். தம்பியை அனுப்பட்டுமா?
என்கிறாள், பார்வதி.
குயிக்... குயிக்... அனுப்பித் தொலை.
குளியலறை உரக்கக் கத்துகிறது.
சரத், குளியலறை நோக்கி நடப்பதை அர்த்தத்துடன் பார்த்திருந்த பார்வதி, சமையலறையில் நுழைகிறாள்.
மோர்க் குழம்பிற்காக பீங்கான் கிண்ணத்தில் வைத்திருந்த கட்டித் தயிரை எலியொன்று துவம்சம் செய்து கொண்டிருக்கிறது.
பார்வதி விளக்குமாற்றை எடுத்து ஒரே போடு போடுகிறாள். அவ்வளவுதான். 'கிறீச்' சென்று கத்தியபடி தன் கடைசி ஓலத்தை முடிக்கிறது அந்த எலி.
அதை வாலைப் பிடித்து ஜன்னல் வழியே தெருவில் எறிகிறாள். பார்வதி. டெட்டால் போட்டு அவ்விடத்தைச் சுத்தம் செய்கையில், இடுக்கி பெரிய வெள்ளைப் பல்லியொன்றைக் கவ்வியிருக்க சரத் வருகிறான்.
பார்வதிம்மா, இதுக்குத்தான் இந்தக் கத்தல்?
நீங்க உள்ளே போனதுக்கு.......
பல்லியில்லாமல் போயிருந்தா...... நேரா மறுபடி கோர்ட்டிலே போய் நின்னிருப்பார். இந்தப் பாச்சை பாம்புக்குத் தர மரியாதைகூட எனக்கில்லை. நீங்களே போய் பிடிச்சிருக்கலாம்."
தம்பி, எனக்கும் அதுங்களை கண்டா பயம்தான். சரி, சரி, ஆபீசுக்கு நேரமாகலை. சுருக்கா வாங்க. டிபன் ரெடி.
யெஸ்.
டைனிங் டேபிளில் வித்யா ஆங்கில நாளிதழில் பெண்கள் பத்தியைப் பார்த்திருக்க, சரத் அரசியலை அலசிக் கொண்டிருக்கிறான்.
"நான் பலமுறை ரெண்டு பேருக்கும் சொல்லிட்டேன். டைனிங் டேபிள்லே சாப்பிடுங்க. படிக்காதீங்கன்னு.
இடை வரை கருநிற கூந்தல் மேகமாய் அளவாய்ப் படர்ந்து புரள, காதுகளில் பொன் வளையங்கள் ஊஞ்சல் ஆட, கழுத்தில் சிறு டாலருடன் கூடிய சங்கிலியும் வெள்ளை ஷிபானுமாய்ப் பொற்சிலையாய் உட்கார்ந்திருக்கும் வித்யா தன் அழகிய மை விழிகளில் கோபத்தை வீசுகிறாள்.
ஆமாம். இங்கே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறதுக்கு பேப்பர் படிக்கலாம். தப்பில்லை. தனித் தனியா போடச் சொன்னா உங்களுக்குக் கால் வலி கை வலி வருது. இல்லை விடுங்க. தனியா நானே சாப்பிட்டுக்கறேன்.
அம்மா, நான் அப்பவே சொன்னேன். நீங்க கேட்கலே. அவங்க விரும்பாததை நீங்க செய்யாதீங்க.
'சரி. தம்பி. வந்து...... எனக்கு மூணு நாள் லீவு வேணும்பா. எம் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சண்டையாம். கடுதாசி போட்டிருக்கு."
உம்..... என்ன சண்டையாம்?
மாப்பிள்ளைக்கும் யாரோ ஒரு பொண்ணுக்கும் சினேகிதமாம். அதனால் இவ...
சும்மா பேசியிருப்பாங்க. அதுக்காக உங்க பொண்ணு கோவிச்சுக்கிட்டு.....
சரத்தும், பார்வதியும் பேசிக் கொண்டதை இதுநேரம் காதுகளில் வாங்கியபடி வாய் சாப்பிட, கண்களில் பேப்பர் உறவாட, உட்கார்ந்திருந்த வித்யா, வெடுக்கென்று பேப்பரை நகர்த்தி முறைக்கிறாள்.
'அதெப்படி சும்மா பேசினாங்க? அல்லது வேறு என்ன செயதாங்கன்னு உங்களுக்குத் தெரியும்? பாவம், அந்தப் பொண்ணு பார்வதியம்மா, நீங்க ஊருக்குப் போய் உங்க பொண்ணை இங்கே அழைச்சிட்டு வந்திடுங்க. இந்த ஆண்களே பெணணுன்னு கடைச்சா போதும். பல்லளிக்கிற சாதி...
பார்வதியையும் வித்யாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தட்டில் அவனுக்குப் பிடித்த பூரி உருளைக் கிழங்கு சாம்பார் அப்படியே இருக்க எழுந்து போய் வாஷ் பேசினில் கை கழுவுகிறான், சரத்.
தம்பி,என்னப்பா சாப்பிடாமல் அப்படியே போறீங்க?
வேணாம்மா... வயிறு சரியில்லே. என் ரூமுக்கு வந்து பணம் வாங்கிட்டுப் போங்க. நீங்க எப்ப புறப்படறீங்கன்னு சொல்லுங்க. நான் ஏற்பாடு பண்றேன்
பார்வதிம்மா, என் ரூம் டிரெஸிங் டேபிள்லே எழுபது ரூபாய் இருக்கு. எடுத்துப் போங்க.
சரிம்மா.
வித்யாவும் சாப்பிடாமலே காப்பி குடித்துக் கொண்டிருக்கிறாள்.
பார்வதி மீந்து போன சிற்றுண்டிகளைப் பார்த்தபடி காப்பிக் கோப்பையைச் சரத்சந்துக்கு எடுத்துப் போகிறாள்.
கொசுவலை பரப்பின மரக்கட்டினுள் அமிழ்ந்தபடி பேப்பரை இன்னமும் விடாதிருக்கிறான். சரத் வெள்ளை பைஜாமாவும் ஜிப்பாவு மாய்த்தலையில் அடர்ந்த கிராப்பம் முகத்தில் சிறிய மீசையும் அடர்ந்த புருவங்களும் சதுர முகம் பரந்த மார்பகமும் அவன் கோதுமை நிறத்திற்கும் ஆண்மைக்கும் அழகு சேர்க்கின்றன.
இந்த வாலிபனுடன் வாழ இந்தப் பெண்ணுக்குக் கொடுப்பினை இல்லையே.
தம்பி, காப்பி.
கதவருகே கேட்ட குரலில் அவன் கொசுவலை நகர்கிறது.
எதுக்கும்மா உங்களுக்குச் சிரமம்? என்னை அழைக்கக் கூடாதா? சரி, பணம் நூறு ரூபாய் போதுமா? அதிகம் கொடுக்கட்டுமா?
வேணாம், தம்பி.
உங்களை இங்கே சமையற்காரம்மா வா வச்சிருக்கலேம்மா. அம்மா இல்லாத எனக்கு அம்மாவா நினைச்சுத்தான் வச்சிருக்கேன்.
தெரியும் தம்பி. அதுக்குத்தான் வேண்டாம்னு சொன்னேன்.
'அம்மா, உங்க மகளுக்கு..."
எனக்கு இருக்கிறது ஒரே மகன்பா. அது நீதான்.
அம்மா.......
ஆமாம்பா, என் புருஷன் என்னை விட்டு ஓடி வருஷம் முப்பது ஆகப் போவுது. இந்தப் பூவும் மஞ்சளும்தான் துணைன்னு இருக்கிற போது உங்க வீட்டுக்கு வந்தேன் சமையல்காரியா. ஆனா எனக்கோ இங்கே ஒரு மகனே கிடைச்சிட்டாம்பா. ஆனா, நீயும் உன் மனைவியும் இப்படி டைவர்ஸ் செய்துகிட்டு கீரியும் பாம்புமா.....
ஷ்.....ஷ்..... சத்தம் போடாதீங்க. அவ காதிலே விழுந்தா உங்களை எண்ணெயில் போட்டுப் புரட்டி எடுத்துடுவா. எதுக்கு இப்படிப் பொய் சொன்னீங்க?
வித்யாம்மாவுக்கு உறைக்காதானு தான் சொன்னேன்.
வித்யா பிடிவாதக்காரி. பெண் விடுதலைன்னு அலையறவள். உங்களாலே அவளை மாத்த முடியாதும்மா. மீறினா இங்கிருந்து வெளியே போயிடுவாள். அவளுக்கு உலகம் இன்னும் தெரியாது. நம்ம கிட்டே கத்த மட்டும்தான் தெரியும்.
வித்யாவின் குரல் அந்தச் சின்ன பங்களாவில் ஓங்கி ஒலிக்கிறது.
பார்வதிம்மா... என் கர்சிப்பும் பேனாவையும் காணோம். வந்து எடுத்துத் தாங்க.
அன்றிரவு.
சரத்சந்திரன் தன் அறையிலும் வித்யா தன் அறையிலும் படித்துக் கொண்டிருக்க, ஹால் பாயில் பார்வதி படுத்திருக்கிறாள்.
அழைப்பு மணி சிணுங்குகிறது.
பார்வதி கதவைத் திறக்க, தந்திச் சேவகன்.
சரத் கையெழுத்து போட்டு வாங்குகிறான்.
இதற்குள் மெல்லிய நைட்டியில் உடல் தெரிய, ஓடிவரும் வித்யா, தந்தியில் தன் பெயரைப் பார்த்து வெடுக்கென அதைப் பிடுங்குகிறாள்.
இரவில்