Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathavillatha Veedu
Kathavillatha Veedu
Kathavillatha Veedu
Ebook143 pages53 minutes

Kathavillatha Veedu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125404097
Kathavillatha Veedu

Read more from Vaasanthi

Related to Kathavillatha Veedu

Related ebooks

Reviews for Kathavillatha Veedu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathavillatha Veedu - Vaasanthi

    http://www.pustaka.co.in

    கதவில்லாத வீடு

    Kathavillatha Veedu

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அந்த வீட்டுக்குக் கதவே கிடையாது. கதவு வேண்டாம் என்ற எண்ணமில்லை. நன்றாகத் திட்டமிட்டு நடேசன் ஆரம்பித்த வீடுதான்.

    நடுக்கூடம். அதையொட்டி ஒரு படுக்கையறை, சமையற்கட்டு. ஒரு சின்ன உக்கிராண அறை. பின்கட்டில் ஒரு கிணறு. துவைக்கிற கல், எல்லாம் விதரணையாகத்தான் இருந்தது.

    ஆனால் கதவு மட்டும் இல்லை. வீட்டையெல்லாம் கட்டி முடித்துக் கதவு போடவேண்டிய தருணத்தில் மலேசியாவில் தோட்ட வேலை செய்து சேமித்துக் கொண்டுவந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. அதுதான் கதை.

    கையில் இருந்த மிச்ச சொற்பப் பணத்தில் கதவை வாங்கிப் போட்டிருந்தால், வாயையும் வயிற்றையும் கட்டிப் போட்டு எல்லாரும் அடைந்திருக்க வேண்டியிருந்திருக்கும்.

    நடேசன் யோசித்தார். மூத்தவள் சீதா. இரண்டாமவள் ஜெயா. அதற்கடுத்துக் கிருஷ்ணன். கணேசன் - எல்லாருக்கும் சோறு போட வேண்டும். படிக்க வைக்க வேண்டும். திரும்ப மலேசியாவுக்குச் செல்வது சாத்தியமில்லை. இங்கேயே ஏதோ வேலை பார்த்துக்கொண்டு காலத்தைத் தள்ள வேண்டியதுதான். கிருஷ்ணனும் கணேசனும் தலையெடுக்கும் வரை, பெண்களுக்குக் கல்யாணம் செய்யவேண்டும். கையிலிருக்கும் பணத்தைக் கதவில் போட்டுவிட்டால் அப்புறம் யாரிடம் கையேந்தி நிற்பது?

    தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் வீட்டில் எவன் நுழைந்து திருட வருவான்? வந்தாலும் தான் என்ன கிடைத்துவிடும் அவனுக்கு இந்த வீட்டில்? யோசிக்க யோசிக்க, கதவு என்கிற ஒன்று அவசியமேயில்லை என்று தோன்றிற்று நடேசனுக்கு. உண்மையில் திருட்டுப் பயமே இல்லாத எல்லாருமே பொதுவாக ஏழைகளாக இருக்கும் இந்தக் கிராமத்தில் கதவை வைத்திருப்பவர்கள்கூட ஏன் அனாவசியமாகக் செலவழித்து வைத்திருக்கிறார்கள் என்று அவருக்குப்பட்டது. கதவில்லையே என்று முதலில் கூச்சப் பட்ட அவரது மனைவி செல்லம்மாள்கூட நாளாவட்டத்தில் அதற்கு இணங்கிப் போனாள்.

    இப்பொழுது அந்த நடேசன் குடும்பம் இருக்கும் பீமண்ண நாயக்கன் பாளையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸிஸ்டர் மேரி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

    'அந்த நடேசன் ஒரு மூளையற்றவன், மந்திரத்துக்கும் மாயத்துக்கும் அவன் செலவழிச்ச செலவிலே ஒரு பங்கை மரத்திலே போட்டுக் கதவாக்கியிருந்தான்னா இப்ப ஏற்பட்டிருக்கிற பிரச்சினை முளைச்சிருக்காது...’

    இன்று காலையில்தான் அவள் ஆஸ்பத்திரியில் ஃபிஸியோதெரப்பி யூனிட்டில் ஆழ்ந்திருந்தபோது நடேசன் அரக்கப் பரக்க ஓடிவந்து அவளுடைய காலில் விழாத குறையாகக் கெஞ்சினான். நீங்க வந்து கூட்டிப் போகணும் ஸிஸ்டர். என்னாலே முடியல்லே. தாங்க முடியல்லே. மானம் போயிடும் போல இருக்கு என்றான்.

    ஏன் என்ன சமாசாரம்?

    எல்லாம் அந்தச் சீதாவுடைய விவகாரம்தாங்க. படுபாவி என்னைச் சித்திரவதை செய்யணும்னே வந்து பிறந்திருக்கிறவ.

    ஏன், என்ன நடந்தது?

    ரா வேளையிலே வீட்டைவிட்டு ஓடிப் போயிடறாங்க.

    எங்கே? என்றாள் ஸிஸ்டர் மேரி அதிர்ந்து,

    அடுத்த தெருவிலே இருக்கிற அந்த அப்துல்லா வீட்டுக்கு.

    போயி?

    நடேசன் சங்கடத்துடன் தலையைக் குனிந்து கொண்டான். என்ன எளவோங்க. அவனும் ஒரு பைத்தியம். எப்பத் தூங்குவானோ தெரியாது. ராவெல்லாம் திண்ணையிலே உட்கார்ந்துகிட்டிருக்கான். இவ அங்கே ஓடிடறா. மூணு நாளா இது நடக்கறாப்பவே, காலையிலே எழுந்திரிச்சுப் பார்த்தா இருக்க மாட்டா. முதல் நாளைக்கு அலறி அடிச்சுக்கிட்டுக் குளம், குட்டை, கிணறுன்னு தேடிக்கிட்டிருக்கோம். இவ அப்துல்லாவோட உட்கார்ந்திருக்கிறதா யாரோ வந்து சொல்றாங்க. அப்புறம் போய் முதுகிலே ரெண்டு வெச்சு இழுத்துக்கிட்டு வந்தேன். உள்ளே பூட்டி வைப்போம் என்கிறதுக்குக் கதவும் இல்லை. அத்தனை அடி வெச்சேனே அன்னிக்கு அதையெல்லாம் துடைச்செறிஞ்சிட்டு மறுநாளைக்கும் போயிட்டா. நேத்து ராவும் போயிருக்கா. ஏதாவது எக்கச்சக்கமா ஆயிடுச்சுன்னா நான் என்னாங்க பண்ணுவேன். பெண் ஜென்மமாப் பிறந்து கழுத்தை அறுக்கிறாளே!

    நடேசனின் கண்களிலிருந்து சரம் சரமாய் நீர் வழிந்தது.

    ஸிஸ்டர் மேரி யோசனையுடன் அவனைப் பார்த்தாள். மருந்து கொடுக்கறதை நிறுத்திட்டியா?

    நடேசன் தலையைக் குனிந்து கொண்டான். சாப்பாட்டுக்கே வழியைக் காணோம். மருந்துக்கும் மாயத்துக்கும் இப்ப எங்கேங்க போறது?

    உம்! என்றாள் ஸிஸ்டர் மேரி சின்ன உறுமலுடன், மாயம் மந்திரம்னு நீ பணத்தை ஆரம்பத்திலே கொட்டினதாலேதான் இப்ப கை நொடிச்சுப் போயிருக்கே.

    புத்தி இல்லீங்களே அப்ப, இதுக்கெல்லாம் இங்கிலீஷ் மருந்து இருக்குன்னு தெரியாதுங்க. காத்தடிச்சிருக்கும்னாங்க, நல்லாயிருந்த புள்ளைதானே? திடீர்னு அப்படி ஆயிடவே, ஊரிலே பெரியவங்க சொல்றது சரியாயிருக்கும்னு நம்பினேன். தோட்ட வேலை செய்தவனுங்க நான். படிப்பறிவு ஏதுங்க?

    சரி, நீ இப்ப போ. நான் வேலையை முடிச்சுட்டுத்தான் வர முடியும். வண்டி இப்ப கிடைக்காது. நாங்க ரெண்டு மூணு நாள் வெச்சிருப்போம் எங்க பார்வைக்காக. பிறகு அனுப்பிடுவோம். அதுக்கப்புறம் நீங்க யாராவது வாரத்துக்கு ஒரு முறை வாங்க ரிப்போர்ட்டு கொடுக்க.

    சரிங்க, என்று நடேசன் பலமாகத் தலையாட்டி விட்டுப் போனான்.

    இவர்களால் நிச்சயமாக வாரத்துக்கு ஒரு முறை பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆஸ்பத்திரிக்கு வர முடியாது என்று ஸிஸ்டர் மேரிக்குத் தெரியும். முதலில் பஸ்ஸிற்குக் கட்டணப் பணம் வேண்டும். இரண்டாவது நான்கு மணி நேரங்களை ஒதுக்கி வைக்கவேண்டும். அன்றாட வேலைக்காகக் கூலி வாங்கிக் கஞ்சி காய்ச்சும் இவர்களால் எப்படி அந்த நேரத்தை ஒதுக்க முடியும்? அதுவும் உபயோகமில்லாமல் மருந்தைச் சாப்பிட்ட பிறகு தூங்கிக்கொண்டே இருக்கும் ஒரு பெண் ஜென்மத்துக்காக?

    வண்டி வந்ததும் அனடென்ஸால் இன்ஜெக்ஷனும் மற்ற மருந்தும் எடுத்து வைத்துக்கொண்டு ஸிஸ்டர் மேரி கிளம்பினாள். வண்டியில் செல்லும்போது சீதாவின் நினைவாகவே இருந்தது.

    பத்து வருஷங்களுக்கு முன்பு, பீமண்ணநாயக்கன் பாளையத்தில் கம்யூனிட்டி ஹெல்த் ஸென்ட்டரை முதன் முதலில் ஆரம்பித்தபோது, துருதுருவென்று பன்னிரெண்டு வயதுச் சூட்டிகைப் பெண்ணாக ஸிஸ்டர் மேரி அவளைப் பார்த்திருக்கிறாள். அப்பொழுது நடேசன் மலேசியாவிலிருந்து வந்த புதிது. வீடு கட்ட ஆரம்பித்திருந்தான். கையில் இன்னும் பணம் முழுவதும் கரையவில்லை. குடும்பம் சற்று மெதப்பாகவே இருந்தது. ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோ வீட்டுக்குள்ளிருந்து எப்பவும் ஒலித்துக்கொண்டே இருக்கும். சீதாவின் சிவந்த அதரங்களில் ஒரு புன்னகை துள்ளிக் கொண்டேயிருக்கும்.

    எப்படியிருப்பாள் சீதா அப்பொழுது! பன்னிரண்டு வயசில் பதினாறு வயசுப் பெண்போலத் தளதளவென்று இருப்பாள். கண்களில் ஏதோ கனவு மிதக்கும், பார்வையில் ஒரு எதிர்பார்ப்புத் தொக்கி நிற்கும்.

    பிறகு என்னவோ நிகழ்ந்துவிட்டது. நடேசனின் பணம் சிமிட்டியிலும் சுண்ணாம்பிலும் கரையக் கரைய, வேலை வெட்டி எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திண்ணையைத் தேய்க்கத் தேய்க்க, துள்ளித் திரிந்த பெண்ணிற்கு என்னவோ நேர்ந்து விட்டது. உற்சாகம் மெல்ல மெல்ல வடிந்து விட்டது. கனவெல்லாம் சிதைந்து போனாற்போல் புன்னகையே மாயமாய் எங்கோ ஒளிந்து கொண்டது. ஒளிந்து கொண்டது மட்டுமில்லை, ஒளிய வேண்டி நேர்ந்ததற்கான ஏக்கம் பல ரூபங்களில் வெளிப்பட்டது - அழுகையாக, ஆங்காரமாக, அடங்காப்பிடாரித் தனமாக, மணிக் கணக்கில் அழுவாள். நாள் முழுவதும் எல்லாரையும் சபித்துக் கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் வாய்ப்பூட்டுப் பூட்டப்பட்டதுபோல் நாள் கணக்கில் சாப்பிடாமல் மெளனமாக உட்கார்ந்திருப்பாள்.

    ‘காத்துப் பட்டிருக்கணும், பேய் அடிச்சிருக்கணும்,’ என்ற ஊராரின்

    Enjoying the preview?
    Page 1 of 1