Tholainthu Ponavargal
3.5/5
()
About this ebook
எல்லோருக்கும் பால்ய பருவம் இருக்கிறது. பால்ய கால நினைவுகள் பசுமையாக நினைவில் உள்ளன. அது தானாக மனத்தில் ஏறியது. அது அறிவால் அறிந்து மனத்தில் ஏற்றத்தக்கதென ஏற்றப்பட்டதில்லை. அதனால் பால்யகால நினைவுகள் வயது ஏற ஏற அர்த்தம் கொள்கின்றன. அது தான் வாழ்க்கை. சிறு கிராமத்தில் எளிய நான்கு ஆரம்பப் பள்ளிக்கூட மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து படிக்கிறார்கள். ஒரு ஊர்க்காரர்கள். சொந்தமல்ல. ஆனால், அதற்கு மேல் ஒன்றாக சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். வயது ஏறுகிறது. பள்ளிக்கூட படிப்பு முடிகிறது. தேர்வு எழுதுகிறார்கள். இரண்டு பேர் பாஸ் ஆகிறார்கள். இரண்டு பேர் பெயிலாகிப் போகிறார்கள். வேலை தேடி வெளியூர் செல்கிறார்கள். நான்கு பேர்களுக்கும் ஆளுக்கொருவிதமாக வேலை கிடைக்கிறது. அதன் போக்கில் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. ஒவ்வொருவரும் தனக்குக் கிடைத்த வாழ்க்கையை அப்படியே வாழ்கிறார்கள். நாட்கள் ஒவ்வொன்றாகப் போய்க்கொண்டே இருக்கிறது.
நால்வரில் ஒருவன், பத்தாவது வகுப்பில் பெயிலானவன், வாழ்க்கையில் பலவிதமான வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வசதியாக கார், பங்களா என்று இருக்கிறான். அவன் ஒருநாள் எதிர்பாராதவிதமாக தொழிலாளர் ஊர்வலம் ஒன்றில் தன் பால்யகால சிநேகிதனைச் சந்திக்கிறான். அவன் வழியாக மற்ற சிநேகிதர்களையும் கண்டுபிடிக்கிறான். அவனுக்குத் தன் பால்யகால நினைவுகள் வருகிறது. பள்ளி கடைசி நாளன்று எடுத்துக்கொண்ட போட்டோவை வீட்டில் மாட்டிவைத்திருப்ப தாகவும், அடிக்கடி அதைப் பார்த்து பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதாகவும் சொல்கிறான்.
தன் பால்யகால சிநேகிதர்களைச் சந்தித்துப் பேசப்பேச அவனுக்கு பழைய நாட்களே நினைவிற்கு வருகின்றன. ஆனால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன விதமாக வாழ்கிறார்கள் என்பதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், தன் வீட்டிற்கு அழைக்கிறான். இரண்டு பேர்கள் முதலில் அவன் விருந்தைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவன் கட்டாயப்படுத்துவதால் விருந்துக்கு வர விருப்பம் தெரிவிக்கிறார்கள். அவனைப் போல் பத்தாவது பெயிலாகி, மிலிட்டரிக்குச் சென்று பணியாற்றிவிட்டு வாட்ச்மேனாகப் பணியாற்றுகிறவன் விருந்துக்கு சந்தோஷமாக வருகிறான். மற்ற இரண்டு சிநேகிதர்களும் விருந்துக்கு வரவில்லை. அவன் காத்துக்கொண்டிருக்கிறான்.
1983 ஆம் ஆண்டில் தொலைந்து போனவர்கள் நாவலை, சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் அமர்ந்து எழுதினேன். முதல் அத்தியாயத்தை ஐந்தாறு முறைகளுக்கு மேல் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லாமல் எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக மறுபடியும் மறுபடியும் எழுதினேன். கலைஞன் பதிப்பகம் திரு. மாசிலாமணி அதனை வெளியிட்டார்.
தொலைந்து போனவர்கள் - நாவலில் கேள்வி என்பது மனிதர்களுக்கான கேள்விதான். பால்யகால சிநேகிதம் எதன் பொருட்டு நொறுங்கிப் போகிறது. யார் அதனைத் தொலைக்கிறார்கள். கேள்விக்கான பதில் நாவலில் இல்லை. ஆனால், சொல்லப்பட்ட கதையின் வழியாக சொல்லப்படாத பதிலை தங்கள் அளவில் சொல்லிவிடலாம் என்பதுதான். அசலான நாவல் தீர்வு சொல்வது இல்லை, ஏனெனில் வாழ்க்கை என்பது வாழ்வதுதான். அதனையே தொலைந்து போனவர்கள் நாவல் சொல்கிறது.
எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதில் சில பகுதிகள் தொலைந்து போனவர்களிடமும் இருக்கிறது. அதுதான் முக்கியம். அதில் ஆண்கள் வாழ்க்கைதான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதால் பெண்கள் வாழ்க்கை இல்லையென்பது இல்லை. வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பொதுவான அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருப்பதுதான். அதனை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
1992 ஆம் ஆண்டில் சென்னை தூர்தர்சனில் 13வது தொடராக தொலைந்து போனவர்கள் ஒளிபரப்பப்பட்டது. பெரிய அளவில் மாற்றம் ஏதும் கிடையாது. நாவலையொட்டியே சில காட்சிகள் சேர்க்கப்பட்டன, தொடர் பெரும் வெற்றி பெற்றது. சொல்லப்பட்ட கதையின் வழியாகச் சொல்லப்படாது தொலைந்து போனவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அளவில் அடையாளம் கண்டுகொண்டார்கள், கதையே இல்லாத நாவலான தொலைந்து போனவர்கள் சொல்லப்பட்ட மனிதர்கள் இல்லை. வாசிக்கிறவர்கள்தான் என்று சொல்ல வேண்டும். எழுதி மாளாத மனிதர்கள் கதையில் ஓர் அம்சம். அது எழுதவும் படிக்கவும் காரணமாக இருக்கிறது.
தொலைந்து போனவர்கள் முப்பதாண்டு காலமாகத் தமிழ் வாசகர்களால் படிக்கப்பட்டு வருகிறது. எனது நாவல்களில் ‘தொலைந்து போனவர்கள்’ எனக்குப் பிடித்தமான ஒன்று. காரணம், நான் அதில் அதிகமாக இல்லை. ஆனால், நானும் மற்றவர்கள் போல் வந்து போகிறேன்.
- சா. கந்தசாமி
Read more from Sa. Kandasamy
Saayavanam Rating: 0 out of 5 stars0 ratingsArumugasamiyin Adugal Rating: 0 out of 5 stars0 ratingsRambaiyum Naachiyaaryum Rating: 0 out of 5 stars0 ratingsKaruppin Kural Rating: 0 out of 5 stars0 ratingsPerum Mazhai Naatkal Rating: 2 out of 5 stars2/5Iravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsBadrinath Rating: 0 out of 5 stars0 ratingsSarvadhesa Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSooriya Vamsam Rating: 0 out of 5 stars0 ratingsVisaranai Commission Rating: 3 out of 5 stars3/5Neelavan Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aanathu Rating: 0 out of 5 stars0 ratingsEttavathu Kadal Rating: 0 out of 5 stars0 ratingsThakkaiyin Meethu Naangu Kangal Rating: 4 out of 5 stars4/5Solla Padatha Nijangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Tholainthu Ponavargal
Related ebooks
Aasai Nesavu Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Suriya Vamsam - Part 2 Rating: 5 out of 5 stars5/5Pon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Mel Aanai Rating: 3 out of 5 stars3/5Irunda Veedu Rating: 3 out of 5 stars3/5100 ஒன் லைன் கதைகள்: 100 One Line Stories Rating: 5 out of 5 stars5/5Oru Koodai Nila Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Ninaithaal Vaazhalaam Vaazhviyal Thodar Rating: 0 out of 5 stars0 ratingsGnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Dr. Marx Rating: 0 out of 5 stars0 ratingsBala Thiripurasundari Rating: 0 out of 5 stars0 ratingsSudumanal Rating: 5 out of 5 stars5/5அன்சைஸ் Rating: 4 out of 5 stars4/5Manithan - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsNalladhaga Naalu Vaarthai Rating: 0 out of 5 stars0 ratingsIraiyuthir Kaadu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsTher Yeri Vandha Nila Rating: 2 out of 5 stars2/5Moodupani Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Viral Rating: 0 out of 5 stars0 ratingsAkbar Birbal Stories Rating: 5 out of 5 stars5/5Manalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsApoorva Ramayanam : Volume 1 - Kattrin Kural Rating: 1 out of 5 stars1/5PanjuMittaai Rating: 4 out of 5 stars4/5Madam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathiyam Rating: 5 out of 5 stars5/5Mazhaiyin kaiyezhuthu Rating: 0 out of 5 stars0 ratingsAmmai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal Rating: 5 out of 5 stars5/5Mamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Neethan En Pon Vasantham Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Tholainthu Ponavargal
2 ratings0 reviews
Book preview
Tholainthu Ponavargal - Sa. Kandasamy
http://www.pustaka.co.in
தொலைந்து போனவர்கள்
Tholainthu Ponavargal
Author:
சா.கந்தசாமி
Sa. Kandasamy
For more books
http://pustaka.co.in/home/author/sa-kandasamy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
சா. கந்தசாமி
ஐம்பதாண்டு காலமாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர். ஆவணப் படங்கள்: குறும்படங்கள் இயக்குநர், தயாரிப்பாளர். இவரின் முதல் நாவல் 1969 ஆம் ஆண்டில் வெளிவந்த சாயாவனம். சுற்றுப்புறச் சூழல் பற்றி அதிகமாக அறியப்படாத காலத்தில் அதுபற்றி நுட்பமான தொனியில் பூரண அமைதியுடன் சொல்லும் நாவல். இது இந்தியாவின் மகத்தான நாவல்களில் ஒன்றாக இருக்கிறது.
அவன் ஆனது, சாயாவனம், சூரியவம்சம், எட்டாவது கடல், விசாரணைக் கமிஷன், மாயாலோகம் நீலவன், வான்கூவர், பெரும் மழை நாட்கள் உட்பட பதினொரு நாவல்கள் எழுதியுள்ளார்.
1948 ஆம் ஆண்டில் விசாரணைக் கமிஷன் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
2006 ஆம் ஆண்டில் நிகழ்காலத்திற்கு முன்பு - என்ற சுற்றுப்புறச் சூழல் நூலுக்காகத் தமிழக அரசு பரிசு பெற்றார்.
சாயாவனம், சூரியவம்சம், விசாரணைக் கமிஷன் - நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நீரின் பேரோசை - கனடா பயண நூல். காவல் தெய்வங்கள் என்னும் இவரின் குறும்படம் சர்வதேச விருது பெற்றது.
2009 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
23, ஜூலை 1940 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் பிறந்த சாந்தப்ப தேவர் கந்தசாமி என்னும் சா. கந்தசாமி குடும்பத்தோடு சென்னை நந்தனத்தில் வசித்து வருகிறார்.
முன்னுரை
எல்லோருக்கும் பால்ய பருவம் இருக்கிறது. பால்ய கால நினைவுகள் பசுமையாக நினைவில் உள்ளன. அது தானாக மனத்தில் ஏறியது. அது அறிவால் அறிந்து மனத்தில் ஏற்றத்தக்கதென ஏற்றப்பட்டதில்லை. அதனால் பால்யகால நினைவுகள் வயது ஏற ஏற அர்த்தம் கொள்கின்றன. அது தான் வாழ்க்கை.
சிறு கிராமத்தில் எளிய நான்கு ஆரம்பப் பள்ளிக்கூட மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து படிக்கிறார்கள். ஒரு ஊர்க்காரர்கள். சொந்தமல்ல. ஆனால், அதற்கு மேல் ஒன்றாக சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். வயது ஏறுகிறது. பள்ளிக்கூட படிப்பு முடிகிறது. தேர்வு எழுதுகிறார்கள். இரண்டு பேர் பாஸ் ஆகிறார்கள். இரண்டு பேர் பெயிலாகிப் போகிறார்கள். வேலை தேடி வெளியூர் செல்கிறார்கள். நான்கு பேர்களுக்கும் ஆளுக்கொருவிதமாக வேலை கிடைக்கிறது. அதன் போக்கில் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. ஒவ்வொருவரும் தனக்குக் கிடைத்த வாழ்க்கையை அப்படியே வாழ்கிறார்கள். நாட்கள் ஒவ்வொன்றாகப் போய்க்கொண்டே இருக்கிறது.
நால்வரில் ஒருவன், பத்தாவது வகுப்பில் பெயிலானவன், வாழ்க்கையில் பலவிதமான வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வசதியாக கார், பங்களா என்று இருக்கிறான். அவன் ஒருநாள் எதிர்பாராதவிதமாக தொழிலாளர் ஊர்வலம் ஒன்றில் தன் பால்யகால சிநேகிதனைச் சந்திக்கிறான். அவன் வழியாக மற்ற சிநேகிதர்களையும் கண்டுபிடிக்கிறான். அவனுக்குத் தன் பால்யகால நினைவுகள் வருகிறது. பள்ளி கடைசி நாளன்று எடுத்துக்கொண்ட போட்டோவை வீட்டில் மாட்டிவைத்திருப்ப தாகவும், அடிக்கடி அதைப் பார்த்து பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதாகவும் சொல்கிறான்.
தன் பால்யகால சிநேகிதர்களைச் சந்தித்துப் பேசப்பேச அவனுக்கு பழைய நாட்களே நினைவிற்கு வருகின்றன. ஆனால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன விதமாக வாழ்கிறார்கள் என்பதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், தன் வீட்டிற்கு அழைக்கிறான். இரண்டு பேர்கள் முதலில் அவன் விருந்தைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவன் கட்டாயப்படுத்துவதால் விருந்துக்கு வர விருப்பம் தெரிவிக்கிறார்கள். அவனைப் போல் பத்தாவது பெயிலாகி, மிலிட்டரிக்குச் சென்று பணியாற்றிவிட்டு வாட்ச்மேனாகப் பணியாற்றுகிறவன் விருந்துக்கு சந்தோஷமாக வருகிறான். மற்ற இரண்டு சிநேகிதர்களும் விருந்துக்கு வரவில்லை. அவன் காத்துக்கொண்டிருக்கிறான்.
1983 ஆம் ஆண்டில் தொலைந்து போனவர்கள் நாவலை, சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் அமர்ந்து எழுதினேன். முதல் அத்தியாயத்தை ஐந்தாறு முறைகளுக்கு மேல் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லாமல் எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக மறுபடியும் மறுபடியும் எழுதினேன். கலைஞன் பதிப்பகம் திரு. மாசிலாமணி அதனை வெளியிட்டார்.
தொலைந்து போனவர்கள் - நாவலில் கேள்வி என்பது மனிதர்களுக்கான கேள்விதான். பால்யகால சிநேகிதம் எதன் பொருட்டு நொறுங்கிப் போகிறது. யார் அதனைத் தொலைக்கிறார்கள். கேள்விக்கான பதில் நாவலில் இல்லை. ஆனால், சொல்லப்பட்ட கதையின் வழியாக சொல்லப்படாத பதிலை தங்கள் அளவில் சொல்லிவிடலாம் என்பதுதான். அசலான நாவல் தீர்வு சொல்வது இல்லை, ஏனெனில் வாழ்க்கை என்பது வாழ்வதுதான். அதனையே தொலைந்து போனவர்கள் நாவல் சொல்கிறது.
எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதில் சில பகுதிகள் தொலைந்து போனவர்களிடமும் இருக்கிறது. அதுதான் முக்கியம். அதில் ஆண்கள் வாழ்க்கைதான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதால் பெண்கள் வாழ்க்கை இல்லையென்பது இல்லை. வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பொதுவான அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருப்பதுதான். அதனை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
1992 ஆம் ஆண்டில் சென்னை தூர்தர்சனில் 13வது தொடராக தொலைந்து போனவர்கள் ஒளிபரப்பப்பட்டது. பெரிய அளவில் மாற்றம் ஏதும் கிடையாது. நாவலையொட்டியே சில காட்சிகள் சேர்க்கப்பட்டன, தொடர் பெரும் வெற்றி பெற்றது. சொல்லப்பட்ட கதையின் வழியாகச் சொல்லப்படாது தொலைந்து போனவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அளவில் அடையாளம் கண்டுகொண்டார்கள், கதையே இல்லாத நாவலான தொலைந்து போனவர்கள் சொல்லப்பட்ட மனிதர்கள் இல்லை. வாசிக்கிறவர்கள்தான் என்று சொல்ல வேண்டும். எழுதி மாளாத மனிதர்கள் கதையில் ஓர் அம்சம். அது எழுதவும் படிக்கவும் காரணமாக இருக்கிறது.
தொலைந்து போனவர்கள் முப்பதாண்டு காலமாகத் தமிழ் வாசகர்களால் படிக்கப்பட்டு வருகிறது. எனது நாவல்களில் ‘தொலைந்து போனவர்கள்’ எனக்குப் பிடித்தமான ஒன்று. காரணம், நான் அதில் அதிகமாக இல்லை. ஆனால், நானும் மற்றவர்கள் போல் வந்து போகிறேன்.
சா. கந்தசாமி
1
தாமோதரன் காரை நிறுத்திவிட்டுத் தலையை வெளியே நீட்டிப் பார்த்தான். சாலையின் இரண்டு பக்கங்களிலும் கூட்டம். வேடிக்கை பார்க்கும் கூட்டம், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று வித்தியாசம் இல்லாமல் ஒன்றாக நின்றுகொண்டிருந்தார்கள், அவன் கூட்டத்தைக் கடந்து சாலையில் புகுந்து வலது பக்கமாகத் திரும்பிப் போக வேண்டும். ஆனால், இப்போது போக முடியாது போல இருந்தது. பின்னால் பார்த்தான், கைவாண்டி, ரிக்ஷா, அப்புறம் ஒரு கார்; அதற்குப் பின்னால் ஆட்டோ.
காரை விட்டு இறங்கி முன்னே வந்து சாலையை நோட்டமிட்டான், ஊர்வலம்! பெரிய ஊர்வலம்! கரத்தில் செங்கொடி தாங்கி கத்தி முழங்கிக்கொண்டு வந்தது. ஏற்ற இறக்கத்துடன் கூடிய குரல் ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்றாய் முடிவே இல்லாதது போல இருந்தது. சப்தத்தில் கவரப்பட்டவன் இன்னும் முன்னே சென்றான்.
ஊர்வலத்தில் வந்த ஒவ்வொருவரும் களைத்துச் சோர்ந்திருந்தார்கள். வியர்வை நெற்றியில் இருந்து வழிந்து கொண்டிருந்தது, மேல் சட்டை முன்னாலும் பின்னாலும் நனைந்திருந்தது. நெடுந்தூரத்திலிருந்து நடந்து வருகிறார்கள் போலும் என நினைத்தான், அவர்களுக்கு என்ன கஷ்டமோ என்று சொல்லிக்கொண்டான், மனத்தில் இரக்கம் சுரந்தது. கையைத் திருப்பி மணியைப் பார்த்தான். மணி ஐந்தரை ஆனாலும் வெயில் அடங்கவில்லை.
பையில் கைவிட்டுக் கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டான். என்றைக்கும் இல்லாமல் இன்று ரொம்பத்தான் வியர்ப்பது போல இருந்தது. மறுபடியும் முகத்தைத் துடைத்துக்கொண்டு காலையெடுத்து முன்னே. வைத்தான். செருப்புக் கால், கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவனை மிதித்துவிட்டது. அவன் அவசர அவசரமாக இவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.
சாரி!
தாமோதரன் பின்னுக்கு நகர்ந்துகொண்டான்.
சாலையில் சென்ற ஊர்வலத்தில் இருந்து பெரிதாக சப்தம் கேட்டது! சிவப்புச் சீருடை அணிந்த இருவர் பெரிய பானரைத் தூக்கிக்கொண்டு முன்னே சென்றார்கள். அதன் கீழே ஒரு கூட்டம். ஏழெட்டுப் பேர்கள். முக்கியமானவர்கள் போலும், தோளில் துண்டும் கக்கத்தில் டைரியுமாக நடந்தார்கள்.
தாமோதரனுக்கு வேடிக்கை பார்த்தது போதும் என்று பட்டது. ஊர்வலம் முடிந்து கார் செல்ல வழி கிடைக்குமா என்று தலையை நீட்டிப் பார்த்தான்.
கொடிகள், கோலங்கள், ஆட்கள், மறுபடியும் மறுபடியும் முடிவே இல்லாதது போல இருந்தது. அவனுக்கு அவசரமான வேலை இருந்தது. அதை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு ஒர்க்ஷாப்பிற்கு போக வேண்டும். இக்பால் சாயபு கார் கிடக்கிறது. அதை டெலிவரி கொடுக்க வேண்டும். நேற்றே டெலிவரி கொடுத்து இருக்க வேண்டிய கார், தவறிப் போய்விட்டது. அவன் ஒர்க்ஷாப்பில் அதெல்லாம் நேராது. சொன்னால் சொன்ன நேரத்தில் டெலிவரி எடுத்துக்கொண்டு போகலாம். பதினோரு ஆண்டுகளாக அதை ஸ்தாபித்து வைத்து இருக்கிறான். இன்று தவறிவிட்டது. அதைத் தொடர விடக்கூடாது. தப்பை நிவர்த்தி செய்ய வேண்டும்.
தாமோதரன் திரும்பினான். சிவப்பு சட்டை போட்டுக் கொண்டு ஊர்வலத்தில் சென்ற முகமொன்று கண்ணில் பட்டது. திரும்பிய இவன் நின்று பார்த்தான், அதற்குள் அந்த முகத்திற்குரியவன் முன்னே சென்றுவிட்டான், ஆனால், அது அறிமுகமான முகம் போல இருந்தது.
யார் அது?
யாருடைய முகம் அது! கனவில் வந்தது போலக் காட்சியளித்து மறைந்த முகம் யாருடையது?
யோசிக்க யோசிக்க பல பெயர்களும் பல முகங்களும் மனத்தில் ஊர்ந்து சென்றன. ஒரு முகம்கூட தங்கி நிலைக்கவில்லை. ஊர்வலத்தில் சென்ற அந்த முகத்தை இன்னொரு முறை பார்த்துவிட ஆசைகொண்டான். அதன் பொருட்டு முன்னே காலடி எடுத்து வைத்தான்.
சிறிது தூரம் சென்றதும் பெண்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள், அவர்களோடு சிறுவர்கள், குழந்தைகள் அழுதுகொண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருந்தன, இந்தக் கூட்டத்தைத் தாண்டி முன்னே செல்ல அவனுக்கு வழியெதுவும் தென்படவில்லை. கீழே இறங்கலாம் என்று சாலையில் கால் வைத்தான்.
மேல் போ
கையில் இருந்த கம்பை முன்னே நீட்டிப் போலீஸ்காரன் விரட்டினான்.
இல்ல…
மேலயேறு.
தாமோதரன் மேலே ஏறி நின்றான். பார்வை சாலையில் படர்ந்தது. ஊர்வலம் சைக்கிளாக மாறி இருந்தது. இரண்டு இரண்டு சைக்கிள்கள் கொடி தாங்கி ஊர்ந்துகொண்டிருந்தன. இவ்வளவு மெதுவாக சைக்கிள் விட முடியுமா என்று நினைத்தான், உடனே அந்த நினைவு புரண்டது.
சிவப்பு சட்டையில் கண்ட முகம்! களைத்துச் சோர்ந்த முகம்! கையை மேலே தூக்கிக் குரல் கொடுக்கும் முகம்!
அது யாருடைய முகம்? தன்னையே கேட்டுக்கொண்டான். அவனால் நிற்க முடியவில்லை. வேகமாகப் பின்னால் சென்று காரில் ஏறி உட்கார்ந்தான். காருக்குப் பின்னால் நின்ற வாகனமெல்லாம் போய்விட்டன. ஆனால், முன்னால் ஒரு ரிக்ஷா இருந்தது. இரண்டு முறை விட்டுவிட்டு ஆரன் அடித்தான்.
ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவன் முன்னே வந்து ரிக்ஷாவை ஒரு பக்கமாகத் தள்ளிக்கொண்டு போனான். கொஞ்சம் வழி கிடைத்தது. கார் போக அது காணாதுதான். ஆனால், அவன் பரபரத்தான், எப்படியும் நுழைந்து போய்விட வேண்டும் என்ற எண்ணத்தோடு காரை எடுத்தான். மெதுவாக ஒடித்துத் திருப்பினான். கார் நேர் சாலையில் செல்ல ஆரம்பித்தது. மனத்தில் ஊர்வலத்தில் கண்ட முகம் தெளிவில்லாது வந்து வந்து சென்றது.
யார் அது?
அது யாருடைய முகம்... கார் ஒரு திருப்பத்தில் பள்ளத்தில் விழுந்து ஏறியது. பிரேக்கை அழுத்தி காரின் வேகத்தைக் குறைத்தான். பால்யம் நினைவில் தட்டுப்பட்டது. தலையை பரபரவென்று அசைத்துக்கொண்டான்.
சங்கரன்!
சங்கரன், நீயா அது?
தாமோதரன் காரின் ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்தான்.
சங்கர், உன்னை எத்தனை வருஷத்துக்கு அப்புறம் பார்க்கறேன். உன்னை இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை. ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்கு.
கார் வேகம் எடுத்தது. சாதாரணமாக தாமோதரன் வேகமாக கார் ஓட்டமாட்டான். ஆனால், இன்று அதை மீறினான், மகிழ்ச்சி அவனை வேகம் கொள்ள வைத்தது. அதில் கரைந்து போனவன் போல சென்றான். சிறிது தூரம் சென்றதும் ஒரு சந்தேகம்! அது சங்கரனாக இருக்காதோ? சந்தோஷத்தைக் கொல்வது போல் இருந்தது அது. தலையை அசைத்துக் கொண்டான், நினைவின் சிறகுகள் நீண்டன! படபடவென்று அடித்துக்கொண்டன!
பள்ளிக்கூடத்தில் தாமோதரன் பக்கத்தில்தான் சங்கரன் இரண்டு பேருக்கும் ஒரே பெஞ்சு, மூன்றாவது பெஞ்சு, தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு அவன் எழுதுவான். ஆனால், கையெழுத்து நேராக இருக்கும். எத்தனை வேகமாக எழுதினாலும் சரி, அது சிதைந்தே போகாது. ஆனால், தாமோதரன் கையெழுத்து அப்படி இல்லை. கோணலும் மாணலுமாக இருக்கும். அதில் எழுத்துப் பிழைகள் வேறு. அவன் எழுத்தைப் படிப்பது அவனுக்குக்கூட சிரமமாக இருக்கும்!
சங்கரன் கையெழுத்தில் பள்ளிக்கூடத்தில் முதல்ஆள்,