Naan Budhanillai
By Vaasanthi
()
About this ebook
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Read more from Vaasanthi
Vadikaal Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Ninaivugal Azhaikkum Kanavugal Rating: 4 out of 5 stars4/5Aasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5Puriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Vittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Jaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Maara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPlum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsOru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Kizhakkey Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsSontham Illatha Bandham Rating: 3 out of 5 stars3/5Aakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsSariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratingsThunaivi Rating: 2 out of 5 stars2/5India Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Karai Seratha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsPathaiyorathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsYathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsIdaiveligal Thodarkindrana Rating: 5 out of 5 stars5/5America Payana Diary Rating: 0 out of 5 stars0 ratingsIndre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsKadai Bommaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Naan Budhanillai
Related ebooks
Puthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Udhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsAnbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 5 out of 5 stars5/5Neeye Enthan Nila Saaraladi! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Ennuyir Neethaney Rating: 5 out of 5 stars5/5Oru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Kaadhalenum Vaanavil Rating: 4 out of 5 stars4/5Naan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsYathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsNinnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Nyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsMaravaathe Maname Rating: 0 out of 5 stars0 ratingsMarainthu Vidathey Maya Rating: 0 out of 5 stars0 ratingsThunaivi Rating: 2 out of 5 stars2/5Thulluvatho Ilamai Rating: 5 out of 5 stars5/5Nilavil Mugam Kaattu Rating: 5 out of 5 stars5/5Marakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsOru Malarin Payanam Rating: 5 out of 5 stars5/5Shurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Rating: 4 out of 5 stars4/5Vilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Inaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Ithu Enna Mayamo? Rating: 5 out of 5 stars5/5
Reviews for Naan Budhanillai
0 ratings0 reviews
Book preview
Naan Budhanillai - Vaasanthi
http://www.pustaka.co.in
நான் புத்தனில்லை
Naan Budhanillai
Author:
வாஸந்தி
Vaasanthi
For more books
http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
1
அவனுடைய அறை ஜன்னல் வழியாக அதை நன்றாகப் பார்க்க முடிந்தது. கையிலிருந்த பேனாவைக் கீழே வைத்து விட்டு அவன் ஜன்னல் திரையை இன்னும் நன்றாக விலக்கிப் பார்த்தான். அந்தப் பட்சி மிகத் தீவிரமான கவனத்தோடு, நேர்த்தியோடு தன்னுடைய அலகினால் கயிறு போலிருந்த மெல்லிய சருகுக் குச்சிகளை இழுத்து இழுத்துக் கூட்டைக் கட்டிக் கொண்டிருந்தது. அவனுக்கு அதிசயத்தில் கண்கள் அகல விரிந்தன. 'வாட் எ வொண்டர்புல் கிராஃப்ட்ஸ்மேன்!’ காலியான கூடுகளை அவன் பார்த்திருக்கிறான். அம்மா கூட ஒன்றை அலங்காரமாக வரவேற்பு அறையில் வைத்திருந்தாள். இன்னும்கூடக் கெட்டியாக ஒரு சின்ன ஓட்டை கூட விழாமல் இயந்திரத்தில் நெய்யப்பட்டது மாதிரி இருந்தது. பட்சி உள்ளே நுழைய வட்ட வடிவமான ஒரு நுழைவாயில்-உள்ளே ஓர் அன்று! மை காட்! யார் இதந்த இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தது! எங்கேயோ ஒரு பள்ளிக்குச் சென்று பயிற்சி பெற்ற மாதிரியல்லவா ஒரு லாவகமும் ஒரு ஃபினிஷ்ஷும் இதனுடைய வேலையில் தெரிகிறது!
ஆனால் இத்தனை அக்கறையோடு கஷ்டப்பட்டுக் கொண்டு கூட்டைத் தயாரிக்கும் இதற்குக் கடைசியில் கொஞ்சம்கூட ஓர் அஞ்ஞானமேயில்லாமல் கூட்டை அப்படியே விட்டு விட்டுப் போக மனசு எப்படி வருகிறது?
இரண்டு மிருதுவான கைகள் அவனது தோள்பட்டையில் இறங்கியிருந்தன. அவன் திடுக்கிட்டுத் திரும்பினான்.
அம்மா! அம்மா எப்பொழுதுமே இப்படித்தான் வந்து நிற்பாள். மெதுவாக நடை அதிராமல், நடப்பதே தெரியாமல் வருவாள்.
அவன் ஒரு புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
அங்கே என்ன பார்க்கிறே குமார்?
அம்மா அதப் பார்த்தியா? எத்தனை அழகாகக் கட்டறது பாரு!
அம்மா குனிந்து ஒரு நிமிஷம் கவனித்துப் பார்த்தாள்.
இன்றைக்குச் சனிக்கிழமை. அம்மாவுக்குச் சாவகாசம் இருந்தது. ஆபீஸுக்குப் போக வேண்டியதில்லை.
அவள் குனியும்போது அவளுடைய மிருதுத்தனமும் லேசான பெர்ஃப்யூமும் அவன் மேல் பட்டது.
ஆமாம்
என்று அம்மாவும்கூடச் சேர்ந்து அதிசயப் பட்டாள். எத்தனை பெரிய எக்ஸ்பர்ட் மாதிரி கட்டறது!
ஆனா, கடைசியிலே எல்லாத்தையும் விட்டு விட்டுப் போயிடறதே!
கூட்டிலிருந்து பார்வையை எடுக்காமலே அம்மா சொன்னாள்: நா இதைக் கஷ்டப்பட்டுக் கட்டினாலும் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்கிற மாதிரி...! குஞ்சு பெரிசானவுடனே எல்லாத்தையும் விட்டுட்டுப் போயிடறது!
அம்மா அவனைப் பார்த்துத் தோழமையுடன், சிரித்தாள்.
‘அதான் ஃப்ரீ ஆஸ் எ பர்ட்’ன்னு சொல்றோம் அதுக்கு மனுஷா மாதிரி குடும்பம், கட்டுப்பாடுன்னு கினடயாது!
அதுக்கு எப்படித்தான் மனசு வர்றதோ?
அம்மா இரு விநாடி அவனை யோசனையுடன் பார்த்தாள்.
அதுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்காதுன்னு நினைக்கிறேன். மனசிருந்தா யோசனை பண்ணும். கவலைப்படும். ப்ரியத்தை வைக்கும்...!
அம்மா சிரித்தாள்.
நல்லவேளை! அதுவாவது ஜாலியாக இருக்கட்டும். மனுஷாள் மாதிரி மனசு கனத்துப் போயிடுத்துன்னா ஆகாசத்திலே ஒரு பட்சி கூடப் பறக்காது! அத்தனை பாரத்தைத் தூக்கிண்டு எப்படிப் பறக்கும்?
அவன், திரும்பியே பார்க்காமல் தன் பாட்டில் தட்டைப் பின்னிக் கொண்டு போகும் அந்தப் பறவையையே பார்த்துக் கொண்டிருந்தான். அம்மாவின் வார்த்தைகளில் ஒரு சுகம் இருந்தது. கவிதை நயம் தெரிந்தது: உயர உயரப் பறக்க அம்மா ஆசைப்படுகிறாளோ என்று தோன்றிற்று. ‘இவள் மனசில் என்ன கனம் இருக்க முடியும்?' என்று தோன்றிற்று. மனுஷன் என்றால் ஏன் கனத்துப் போகணும்?
டெலிபோன் அடிக்கும் ஒலி கேட்டது. தோள்பட்டையில் இருந்த அம்மாவின் கைகள் சட்டென்று விலகின.
அவன் மறுபடியும் அந்தப் பட்சியை, மளமளவென்று கூட்டைப் பின்னிக் கொண்டு போகும் அதன் சுறு சுறுப்பை வியந்தபடி உட்கார்ந்திருந்தான்! அந்த ஜன்னல் எதிரே உட்கார்ந்திருந்ததால் வேறு எந்தக் காரியத்திலும் புத்தி போகாது போலிருந்தது.
இன்றைக்கு ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. பொலிட்டிகல் ஸயன்ஸில் ஒரு கட்டுரை. அவன் புத்தகத்தையும், பேனாவையும் எடுத்துக்கொண்டு வேறு இடத்துக்குப் போனான். அம்மா இன்னும் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தாள்-மெல்லிய குரலில். மிருதுவாகச் சிரித்துக் கொண்டு, இவளுடைய குரல் மறுமுனையில் எப்படிக் கேட்கும் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். ட்ரங்காலில் கூட இதே மாதிரிதான் பேசுவாள். இரண்டே நிமிஷத்தில் எழுதி வைத்ததைப் படிக்கிற மாதிரி மளமளவென்று சொல்ல வேண்டிய விஷயத்தையெல்லாம் சொல்லி விடுவாள்.
யூ ஹேவ் எ வெரி ஸ்மார்ட் மதர்
என் சிநேகிதர்கள் சொல்லும் போது அவனுக்குப் பெருமையாக இருக்கும். அப்பாவுக்கும் அந்தப் பெருமை உண்டு என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அப்பா எதையும் வெளியில் காண்பித்துக் கொள்ள மாட்டார். பேச்சில் அனாவசியம் இருக்காது. வார்த்தைகளில் கவிதை இருக்காது. அளவெடுத்த மாதிரி செதுக்கி எடுத்த மாதிரி வெளியில் வரும் எ பர்ஃபெக்ட என்ஜினியர். எவரி இஞ்ச் ஆஃப் ஹிம் ஓ! அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எத்தனை வித்தியாசம்? அந்த வித்தியாசமே தான் அவர்களுடைய பலமோ?
அம்மா ரிஸீவரை அலுங்காமல் கீழே வைத்துவிட்டு வேறு அலுவலைப் பார்க்கச் சென்று விட்டாள். ஒரு வாரமாகப் பார்க்காத, பார்க்க முடியாத வீட்டு வேலைகளையெல்லாம் இன்று பார்ப்பாள் மெல்லிய குரலில் அவள் வேலைக்காரர்களிடம் வேலை வாங்கும் நேர்த்தியே அலாதி. சனிக்கிழமையன்று எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு தன்னுடைய நீண்ட தலைமயிரைக் கோதியபடி அவள் வீட்டை வளைய வருவதைப் பார்க்க அவனுக்குப் பிடிக்கும் ‘இவளுடைய பிள்ளை நான்' என்று நினைத்துக் கொள்ளச் சந்தோஷமாக இருக்கும்.
அவன் கட்டுரையை எழுத ஆரம்பித்தான். இரண்டு மூன்று லைப்ரரி புத்தகங்களைப் படித்து, அதிலிருந்து மேற்கோள்கள் எடுத்து எழுதி முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று. அவன் கைகளை உயரத் தூக்கி ஒரு சோம்பல் முறித்தான். புத்தகங்கள் எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு, தன் அறைக்குச் சென்று மேஜை மேல் வைத்துவிட்டு, ஜன்னல் வழியாகப் பார்த்தான். மனசில் சட்டென்று ஒரு வியப்பும் சந்தோஷமும் ஏற்பட்டன. கூடு முழுசாகக் கட்டப்பட்டிருந்தது, மிக அழகாக, நேர்த்தியாக ஒரு பிசிறில்லாமல் -
அம்மா! அம்மா!
வேலைக்காரி எட்டிப் பார்த்தாள்
அம்மா இல்லைங்களே, மார்க்கெட்டுக்குப் போயிருக்காங்க
ஓ! சரி
அம்மா தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் ஏன் வெளியில் கிளம்பிப் போனாள் என்று லேசாக அவனுக்கு நமைச்சல் எடுத்தது. அவன் சட்டென்று அந்த நமைச்சலை உதறுகிற மாதிரி தோளைக் குலுக்கியபடி டேப் ரெக்கார்டரில் ‘ABBA' டேப்பைப் போட்டு முடுக்கி விட்டான். குபீரென்று பாய்ந்து அறை முழுவதும் அடர்ந்த சங்கீத அலைகளில் அவன் மூழ்கிப் போனான்.
திடீரென்று பிரக்ஞையடைந்தவன் போல் அவன் எழுந்தான். வாசல் அழைப்பு மணி தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலியில் ஒரு பொறுமையின்மையும் அலுப்பும் சலிப்பும் தெரிந்தன. வெகுநேரமாக அடித்து கொண்டிருக்க வேண்டும். அந்த முட்டாள் வேலைக்காரி எங்கே போய் விட்டாள்?
அவன் எழுந்து கட்டிலுக்கடியில் போய்விட்டிருந்த செருப்புகள் எடுத்து மாட்டிக்கொண்டு வாயிற்கதவைத் திறக்கச் சென்றான். திறப்பதற்குள் மறுபடி அழைப்பு மணி சத்தம் கேட்டது.
"ஓ ஹெல்!' என்று அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு கதவைத் திறந்ததும் சட்டென்று முகம் மலர்ந்தது.
வாசலில் நித்யா நின்று கொண்டு இருந்தாள்.
ஹாய் நீது!
ஹாய்! நீ மாத்திரம்தான் வீட்டிலே இருக்கியா! அதான் பார்த்தேன்!
என்ன பார்த்தே?
"பெல் அடிச்சு, அடிச்சு கைபோச்சு!'
அவள் தென்றலைப் போல் மிதக்கிற மாதிரி நகர்ந்து வந்தாள்.
ABBA டேப் வாங்கிட்டியா?
ஆல்பமே வாங்கியாச்சு!
அதான் உனக்குக் காதே கேக்கல்லே...!
எப்படிக் கேக்காமப் போகும்... வார் ஸைரன் மாதிரி நீ பெல் அடிக்கும்போது!
உன்ளே விடு முதல்லே, நா எவ்வளவு நேரமா வெளியிலே நிக்கறேன்னு உனக்குத் தெரியாது!
குமார் சிரித்துக் கொண்டே கதவை அகலமாகத் திறந்தான்.
ஸாரி, மேடம்!
நித்யா உள்ளே நுழைந்தாள்.
ஒரு சாயம் போன ஜீன்ஸ் அணிந்திருந்தாள். மேலே இளம் நீல நிறத்தில் மெல்லிய ப்ளவுஸ், பூப்பூவாக லேஸில் செய்யப்பட்ட உள்ளாடை துல்லியமாகத் தெரிந்தது. தோள்பட்டையிலிருந்து வெள்ளைக் கைகள் மெலிதாக, ஒரே சீராக வழவழவென்று இறங்கின, நெயில் பாலிஷ் செய்யப்பட்ட நகங்கள்.
நித்யா ஐயர். என்னுடைய மூதாதையர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கிற மாதிரி... ஐயர் - எதற்கு ஐயர்? வாயிலும் கையிலும் கம்யூனிஸத்தை வைத்துக்கொண்டு, இது எதற்கு ஒன்றும் சம்பந்தமில்லாமல்?
இவள் முழுக்க முழுக்க டெல்லிப் பெண் என்று குமார் நினைத்துக் கொண்டான். இன்ஹிபிஷன்கள் இல்லாத அவை என்னவென்று தெரியாத டெல்லிப் பெண்!
ஆண்ட்டி இல்லை?
இல்லே
எங்கே?
தெரியாது. மார்க்கெட்டுக்குப் போயிருக்கிறதா வேலைக்காரி சொல்லிவிட்டுப் போனாள்.
சிவந்த உதடுகள் ஈரப்பசையுடன் பளபளத்தன சுருண்ட மயிர் கற்றைகள் இரண்டு நெற்றியிலிருந்து ஆரம்பித்து காதோரமாக இறங்கி நின்றன.
அவள் வெகு சுவாதீனத்துடன் உள்ளே அவனுடன் சேர்ந்து நடந்தாள். அவன் அறையை நெருங்குகையில் டேப் ரிகார்டரில் பாட்டு ஓர் அசுர பலத்தோடு கேட்டது.
அதன் சட்டென்று வால்யூமைக் குறைத்தான்.
ம் தட்ஸ்பெட்டர்
அவள் சிரித்தபடி அங்கிருந்த தீவானில் குனிந்து உட்கார்ந்து பாட்டை உன்னிப்பாகக் கேட்டாள். கால் விரல்கள் லேசாகத் தாளமிட்டன.
இறங்கிய கழுத்தின் உள்ளே லேஸ் பூக்களின் மேல் பரவிய பார்வையை இழுத்தபடி அவன் அவள் கையிலிருந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தான்.
எப்படியிருக்கு புஸ்தws2`2கம்?
ஸோ... ஸோ... இங்கிலீஷ்காரன் கம்யூனிஸத்தைப் பத்தி எழுதினா அவனுடைய பார்வை எப்படியிருக்கும்?
ரஷ்யாக்காரனோ, சைனாக்காரனோ கம்யூனிஸத்தைப் பத்திச் சொன்னாத்தான் ‘மடி'யாயிருக்கும்னு நினைக்கிறியா?
நித்யா கண்கள் விரிய அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
அரே ரே! ‘மடி’ என்கிற வார்த்தையெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?
ஓ, எங்க பாட்டியைப் பத்தி உனக்குத் தெரியாதா? பாட்டி இங்கே வரும் போதெல்லாம் ஒரு பெரிய ரகளை நடக்கும். அமெரிக்கனுக்கும் நீக்ரோவுக்கும் இருக்கிற வித்தியாசம் இருக்கும் நமக்கும் பாட்டிக்கும்!
நித்யா பெரிதாகச் சிரித்தாள்.
"நிஜம்மாவே அவாள்ளாம் ரொம்ப ஃபன்னி, மெட்ராஸுக்குப்