Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannil Vizhuntha Mazhaithuligal
Mannil Vizhuntha Mazhaithuligal
Mannil Vizhuntha Mazhaithuligal
Ebook154 pages57 minutes

Mannil Vizhuntha Mazhaithuligal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704108
Mannil Vizhuntha Mazhaithuligal

Read more from Lakshmi Rajarathnam

Related to Mannil Vizhuntha Mazhaithuligal

Related ebooks

Reviews for Mannil Vizhuntha Mazhaithuligal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannil Vizhuntha Mazhaithuligal - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    மண்ணில் விழுந்த மழைத்துளிகள்

    Mannil Vizhuntha Mazhaithuligal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    வாசலை அடைத்து விடியற்காலை நான்கு மணிக்கே கோலம் போட்டாள் சம்பா.

    டீ சாமளா, வந்து செம்மண் வரம்பு கட்டு என்று குரல் கொடுக்க சம்பாவின் நாத்தனார் பெண் சாமளா ஓடி வந்தாள். அந்த ஆண்டு தான் டென்த் படிக்கிறாள். துறுதுறுப்பானவள்.

    மாமன் மனைவியை மன்னிஎன்றுதான் கூப்பிடுவாள், மன்னி புது டிகாஷன் இறக்கி கலக்கும் காப்பி வாசனை வருது. ரெண்டு டம்ளர் வாங்கிட்டு வரட்டுமா!

    போடி… போடி... வாங்கிண்டு வா என்றவள் இடுப்பை நிமிர்த்து கோலமாவு கிண்ணத்தை வைத்துவிட்டு திண்ணை ஓரமாக உட்கார்ந்தாள்.

    பெரியண்ணா சிவராமனுக்கு அறுபதாம் கல்யாணம். மூன்று தங்கைகள், இரண்டு தம்பிகள் என்று சிவராமனையும் சேர்த்து ஆறு பேர், கிராமத்தில் கொஞ்சம் நிலத்தை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தார் சிவராமனின் அப்பாவைதீஸ்வரன். தஞ்சைக்கு அருகில் உள்ள கிராமம். நல்ல விளைச்சல். குடும்பம் பசிக்காமல் சாப்பிட்டது. கெளரவமாக வாழ்ந்தது.

    காலையில் வரும் பஸ்ஸில் போய் குழந்தைகள் தஞ்சைக்கு அருகில் உள்ள சின்ன பள்ளியில் படித்து வந்தார்கள், இப்படியே போய்க் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமே, சிவராமன் கல்லூரியில் கடைசி வருஷம்.

    இரவு படுத்த அப்பா காலையில் எழவில்லை. அம்மாவையும் சேர்த்து ஏழ பேரும் திக்கு திசை தெரியாமல் நின்றார்கள், எல்லாருமே ஒரு வயசு, இரண்டு வயசு வித்தியாசத்தில் என்று கையைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். தம்பிகள் சம்பத்தும், சந்தானமும் சிவராமனுக்கு ஒன்றிரண்டு வயசே சின்னவர்கள், சம்பா, பவானி, ஆர்த்தி என்று சின்னவர்கள் மூவரும்.

    ஆர்த்தி தான் கைக்குழந்தை. ஒரு வயசு. சிவராமன் அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டான்.

    என்னம்மா பண்றது.

    மகனை அணைத்துக் கொண்டாள் அன்னம்மா. முதலில் திக்கு திசை தெரியாமல் கலங்கினாலும் குழந்தைகளைப் பார்த்தாள். இவர்கள் என் செல்வங்கள் அல்லவா?

    வைதீஸ்வரன் இத்தனைக் குழந்தைகளைப் பெற்றாலும் கலங்கியவரல்ல. ஒவ்வொருவரையும் பூத்துக் குலுங்கும் செடிகளாகப் பாதுகாத்தார்.

    பெண் குழந்தைகளை டி போட்டு பேசமாட்டார். சம்பா பெரியவள் என்பதால் அப்பாவுக்கு, வலது கையாக இருப்பாள். வயலுக்குப் புறப்படும் அப்பாவுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து, துண்டையும் வெற்றிலைப்பெட்டியையும் எடுத்து வைத்து...

    குழந்தைகளை மட்டுமல்ல மனைவியையும் தோழியாகப் பழகி எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்திருந்தார். நான்கு பெரிய மாமரங்களும், இருபது தென்னந்தோப்புகளும், சாப்பாட்டுக்குத் தேவையான நிலங்களும் இருந்தன. மதிய நேரங்களில் மனைவியையே கணக்குபிள்ளையாக்கி வரவு செலவுகளைச் சொல்லிக் கொடுத்திருந்தார்.

    எனக்கு எதுக்குங்க இது.

    கணவனின் காலடியில் தான் உட்கார்ந்து கொள்வாள் அன்னம். தோளில் கை போட்டு மனைவியின் முகத்தை மடியில் போட்டுத் தாலாட்டுவார்.

    நீயும் தெரிஞ்சுக்கணும் அன்னம்.

    வரவு, செலவு, சேமிப்பு என்று அவர்களும் அறியும் வண்ணம் குடும்பம் நடத்தினார் வைத்தீஸ்வரன். கணவன் இல்லை நான் கொடுமையைத் தவிர, அவளையும், குழந்தைகளையும் நட்டாற்றில் விட்டுவிட்டுப் போகவில்லை என்பதில் நிம்மதிதான்.

    மகனை அணைத்துக் கொண்டவள் ஒன்னும் குறை இல்லை செல்வம். நீ மூத்தவன், அண்ணன் அப்பாவுக்குச் சமம் என்பார்கள். அப்பாவுக்கு வேண்டிய காரியங்களை முடிச்சுடு. துக்கத்தை மனசுல போட்டு மூடு. வெளியே காட்டாதே. என்று மகனை ஆசுவாசப்படுத்தினாள் அந்த அன்புத்தாய்.

    அப்பா காரியம் முடித்தது.

    அம்மா நான் வேணா வேளைக்குப் போகட்டுமா?

    துயரத்தை முகமூடி போட்டு மறைத்தாள். என்ன அவசியம். அதுக்கு சிவா இன்னும் ஏழெட்டு மாசம் படிப்பு முடிய இருக்கு. அதை முடி.

    காரியம் முடிந்ததும் ஏகப்பட்ட அறிவுரைகளை வாரி வழங்கினார்கள். மூன்று பெண் குழந்தைகள் உள்ள குடும்ப பளு தங்கள் மீது விழுந்து விடுமோ என்று பயந்து ஒதுங்கினார்கள் உறவினர்கள்.

    என்னம்மா இது? சிவராமன் பதறினான்.

    "இது தானப்பா உலகம், உங்கப்பா இருக்கறப்ப நாள் காணக்குல வந்து தங்குவாங்க. கூஜா கூஜாவா காப்பியைக் குடிச்சிண்டு தஞ்சாவூர் கும்பகோணம் வெற்றிலையைப் போட்டுண்டு சீட்டாடுவாங்க. போறப்ப தேங்காய், வாழைக்காய், மாங்காய், எண்ணெய் எடுத்துண்டு போவாங்க.

    மன்னி, விளைஞ்ச வாழைக்காய், தேங்காய் எண்ணெய்ல வறுவல் வறுத்துக் கொடேன். என்ன சொல்லு என் பெண்டாட்டிக்கு உன் கை மணம் வராதுன்னு சொல்லி எடுத்துண்டு போவாங்க.

    நீ ஏன்ம்மா பன்னிக் கொடுத்தே.

    புகழ்ச்சிக்கு மயங்காதவா யாருடா சிவா?தூக்கோட தூக்கிக் கொடுத்த காலம் ஒண்ணு உண்டு. இன்னிக்கு நம்பளைத்தூக்கிப் போட்டுட்டு ஈரக்கை காய்றத்துக்கு முன்னாடி ஓடியாச்சு.

    அனுபவமற்ற சிவா உற்றார் உறவினர் இல்லாமல் வாழ முடியாது ஏன்றெண்ணினான்.

    நாம எப்படிம்மா வாழறது?

    உங்கப்பா எனக்கு வாழக்கத்துக் கொடுத்துட்டுத்தான் போயிருக்கார். சினிமாப்பாட்டு ஒண்ணு வரதுபார்.

    வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில் அதை ஒவ்வொருத்தனும் தாரக மந்திரமா எடுத்துக்கணும்.

    சிறுவன்சிவா அம்மாவிடம் வாழக் கற்றுக் கொண்டான். அம்மா பின் குங்குமம் இல்லாத நெற்றியைப் பார்க்கத்தான் முடியவில்லை, அம்மா மனம்தளராமல் அவர்களுக்கு அச்சாணியாய் நின்றாள், வயல் கணக்கைப் பார்த்தாள். வருமானம் வந்தது. வங்கியில் வைதீஸ்வரன் பத்து லட்சம் போட்டு வைத்திருந்தான்.

    அடிக்கடி கையைப் பிசைந்த மகன் சிவராமன் அம்மா வங்கிக் கணக்கை காட்டியதும் நிம்மதியானான், அந்த ஆண்டு பட்டதாரியானான்.

    எங்கேயாவது வேலை தேடறியா சிவா. அம்மா கேட்டாள்.

    இல்லைம்மா.

    என்ன பண்ணப் போறே?

    சொந்தப் பண்ணயம் பண்ணப் போறேன்.

    அம்மா அப்பாவச்ச பணத்துலேர்ந்து மூணு லட்சம் தரியா?

    எதுக்குப்பா மகன் ஏதாவது தவறு பண்னுவனோ என்ற பயம் அந்தப் பாசம் மிகுந்த தாயின் மனதில் எழுந்தது.

    சொந்த விவசாயம் பண்ணப் போகிறேன். நம்ம பக்கத்து நிலம் வீராச்சாமியுடையதுல்ல.

    தெரியும்.

    அவர் ஊரை விட்டே போறார். மகன் கூட அமெரிக்கா போய் செட்டிலாகிறார்.

    என்கிட்ட சொல்லலையே சிவா.

    என்கிட்ட மட்டும் ரகசிய மாநிலத்தை வித்துடலாம்னு இருக்கேன். நீ சொந்தப் பண்ணையம் பண்றேன்னு சொல்றே. வாங்கிக்கோயேன்னு கேட்டார். அய்யனாரு நிலம்மா. தெரிஞ்சா காதும் காதும் வச்சு மாதிரி வாங்கிடுவாங்க. நீயோசனைபண்ணும்மா. பணம் கடனாத்தான் கேட்கறேன்.

    அம்மாவுக்கு கோபம் வந்தது. "என்னடா சிவா பேசறே என்று கோபித்துக் கொண்டாள்.

    எனக்குப் பொறுப்பு வரணும்மா.

    உன்னைப் போய் பொறுப்பு இல்லேன்னு சொல்ல முடியுமா? படிப்பை முடிச்சு விவசாயத்தை நீ தான் பார்க்கறே? கிணற்றடியில வெற்று நிலமா கிடந்த இடத்தை வாழை போட்டே. சின்ன இடம்தான். அதுலயே ஐம்பதாயிரம் வருமானம் காட்டினே. அப்புறம் என்ன வேணும். அம்மா பணத்தைத் திருப்பித் தரணும்னு இருந்தாத்தான் அதிகமா உழைக்கத் தோணும் என்றவன் தம்பிகள் சம்பத்து, சந்தானத்தைக் கூப்பிட்டுக் கேட்டாள்.

    அண்ணா, சம்பத்து ஐ.ஏ.எஸ், போறான், நான் சி.ஏ. பண்றேன் இதுக்கெல்லாம் செலவு ஆகுது. பெண்கள் ஒவ்வொருத்திக்கும் அம்மா ஐம்பது பவுன் போல் சேர்த்து வச்சிருக்காங்க, நீ வெறும் காலேஜ் படிப்பு மட்டும் தான் படிச்சே. பணத்துல கணக்குப் பார்த்து கடன்னு பேசறது எனக்குப் பிடிக்காலலண்ணா. மூணு பெண்களுக்கும் கல்யாணம் பண்றதை நீதானே ஏத்துக்கப்போறே? உன்னைச் சுற்றித் தான், அண்ணா நாங்க ஒடறோம் என்று சந்தானம் சொல்ல கண்ணீர்மல்கிய சம்பத்தும் அண்ணனின் கையைப் பற்றிக் கொண்டான்.

    சிவராமன் வீராச்சாமியின் நிலத்தை வாங்கி விட்டான், நிலத்தோடு வீட்டையும் சேர்த்து வாங்கினான். வீராச்சாமியின் வீடு சிறியதுதான், பின்புறம் தோட்டம் மா, வாழை, தென்னை, பலா என்று செழித்துத் தொங்கியது. சிவராமனுடன்

    Enjoying the preview?
    Page 1 of 1