Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pathinooravathu Avatharam
Pathinooravathu Avatharam
Pathinooravathu Avatharam
Ebook94 pages40 minutes

Pathinooravathu Avatharam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100404225
Pathinooravathu Avatharam

Read more from Rajesh Kumar

Related to Pathinooravathu Avatharam

Related ebooks

Related categories

Reviews for Pathinooravathu Avatharam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pathinooravathu Avatharam - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    பதினோராவது அவதாரம்

    Pathinooravathu Avatharam

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    சம்பத்! நாம எடுத்திருக்கிற முடிவு சரிதானா...?

    ‘சரி தான்... சரி தான்...’

    ‘எனக்கு பயம்மாயிருக்கு.’

    ‘நீ எதுக்குத்தான் பயப்படலை...? மூணு மாசத்துக்கு முன்னாடி முதன் முதலா... நீ என்னைப் பார்த்தப்பவும் பயப்பட்டே...! என் கூட பேசவும் பயப்பட்டே...! அப்புறம் ‘ஐ லவ் யூ’ன்னு சொல்றதுக்கும் பயப்பட்டே! இப்போ... எங்காப்பவுக்குத் தெரியாமே ஊரை விட்டு ஓடிப்போய் ஏதாவது ஒரு கோயில்ல கல்யாணத்தை பண்ணிகிட்டு நம்ம வாழ்க்கையைத் தொடங்கலாம்ன்னாலும் பயப்படறே!’

    'என்ன இருந்தாலும் உங்களுக்கு ரொம்பவும் துணிச்சல் சம்பத்.’

    ‘உன்னை காதலிச்சதுக்குப் பின்னாடிதான் அந்த துணிச்சல் வந்தது... ஹரிதா. எங்கப்பாவை நான் நிமிர்ந்து பார்த்து பேசினதுங்கிறது பெரிய விஷயம். ஆனா இப்போ அப்படியில்லை. உன்னை மனசுல நினைச்சாலே போதும், தைரியம் நெஞ்சில் குபுகுபுன்னு வருது...’

    ‘இதோ பாருங்க சம்பத்! என்னைப்பற்றி கவலையில்லை. நான் ஒரு ஒண்டிக்கட்டை. எந்த சொந்த பந்தமும் இல்லாத தனிக்கட்டை கல்யாணம் பண்ணிக்காமே அதாவது ஒரு கன்னிகா ஸ்திரீ மடத்துல போய் சேர்றதுக்காக என் மனசை பக்குவப்படுத்திகிட்டிருந்தேன். அந்த நேரத்துலதான் உங்களைப் பார்த்தேன்... பார்த்ததும்...'

    ‘சரி... சரி போதும்... நாம ரெண்டு பேரும் எப்போ சந்திச்சு பேசினாலும் சரி... இந்த வாசகத்தை சொல்லாமே இருக்க மாட்டே’

    ‘கிளம்பலாமா? பீச் இருட்டிட்டு வருது...'

    ‘மணி எவ்வளவு...?’

    ‘ஏழு...'

    ‘ஏழுதானே...? ஏழேகாலுக்கு போலாம்...'

    ‘இப்போ மணி ஏழேகால்தான். நான் வேணும்ன்னு தான் 'ஏழு'ன்னு சொன்னேன். கிளம்பலாமா?"

    ‘கடன்காரி’

    ‘ம்... எந்திரிங்க... இன்னும் கொஞ்சம் இருட்டானா உங்க கை கொஞ்சம் கொஞ்சமா நீண்டு ‘பௌல்’ பண்ண ஆரம்பிச்சுடும்...’

    இருவரும் எழுந்தார்கள். பின்பக்கம் ஒட்டியிருந்த மணலை பரஸ்பரம் தட்டிவிட்டுக் கொண்டார்கள். தொலைவில் கடல் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்க ஒரு சில கப்பல்கள் விளக்குகளோடு அசைந்தன.

    ரோட்டைப் பார்த்து நடக்க ஆரம்பித்தார்கள்.

    "நம்ம திட்டம் அமலுக்கு வர இன்னும் எவ்வளவு நாளிருக்கு?'

    ‘அஞ்சு நாள்’

    ‘அதாவது ஞாயிற்றுக் கிழமை ராத்திரி.’

    'ஆமா...’

    'எந்த ஊருக்கு போகப்போறோம்?'

    ‘சிதம்பரம்.’

    ‘ஏன் ஓடிப்போகிற காதலர்களுக்கு அது தான் வசதியான ஊரா?’

    ‘மத்தவங்களுக்கு எப்படியோ...? நம்ம ரெண்டுபேர்க்கும் அது தான் வசதியான ஊர்...’

    ஹரிதா சிரித்தாள்.

    ‘காரணம் என்னவோ?’

    "எனக்கு வேண்டிய ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் அந்த ஊர்லதான் இருக்காங்க. டி.பி.டி.சியில் ஒர்க் பண்ணுகிற சந்திரசேகரன், ரங்கநாதன், சோமசுந்தரம், இளமுருகு, விவேகானந்தன், ஆறுமுகம், சிவகுமார்...’

    ‘போதும்... போதும்...’

    ‘சிதம்பரம் கோயிலில் கல்யாணத்தை பண்ணிகிட்டு... சந்திரசேகரன் வீட்ல தங்கிக்கப் போறோம்...'

    ‘சேச்சே! அவர்க்கெதுக்கு சிரமம்?’

    ‘சந்திரசேகரன் தங்கமான ஃப்ரெண்ட்...'

    'சம்பத்!’

    ‘சொல்லு...’

    ‘நாம இப்படி கோழைகளா ஊரைவிட்டு ஓடறதைக் காட்டிலும்... உங்கப்பா முன்னாடி நின்னு - இதமா... பதமா... சொல்லிப்... பார்க்கலாமே?"

    ‘சொல்லலாம்... ஆனா நம்ம கல்யாணம் சொர்க்கத்துலதான் நடக்கும். பரவாயில்லையா...?’

    'என்ன சொன்னீங்க... சொர்க்கத்திலே நடக்குமா?'

    'ஆமா... நம்ம காதல் விவகாரத்தை எங்க அப்பாகிட்டே சொல்லிட்டிருக்கும்போதே அவர் தன் ஹண்டிங் ரைஃபிளை எடுத்து உன்னையும் என்னையும் ஷூட் பண்ணிடுவாரே...'

    ‘உங்க அப்பாவைப் பார்த்தா எனக்கு அப்படி தோணலை சம்பத்.’

    ‘அவரைப்பத்தி எனக்குத் தானே தெரியும். எங்கம்மா முப்பத்து நாலு வயசிலேயே செத்துப்போனதுக்கு என்ன காரணம் தெரியுமா?’

    ‘என்ன?’

    'அப்பாவைப் பார்த்து பயந்து... பயந்தே... அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு...'

    ‘நீங்க அவரைப்பத்தி ஒவ்வொண்ணையும் சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சர்யமாயிருக்கு சம்பத்...’

    'அவரைப்பத்தி இன்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1